மிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:
சத்யராஜ்
1.கடவுள்
2.மதம்
3.ஜாதி
4.சாமியார்
5.நம்ம ஊர் அரசியல்
6.ஏமாற்றுபவர்கள்
7.ஏமாறுபவர்கள்
8.பயிலாமை
9.முயலாமை
10.இயலாமை
தமிழச்சி
1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.
2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.
3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.
4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.
5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.
6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.
7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.
9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.
10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.
சுப.வீரபாண்டியன்
1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.
2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.
3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.
4.இந்துத்துவ வன்முறை அரசியல்.
5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.
6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.
7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.
8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.
9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.
10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.
நல்லகண்ணு
1.காடுகள் அழிப்பு
2.குடிதண்ணீர் வியாபாரம்
3.மணல் கொள்ளை
4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.
5.லஞ்ச ஊழல்.
6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.
7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.
8.ஜாதி மத அரசியல்
9.தாய்மொழி புறக்கணிப்பு
10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..
நன்றி குமுதம்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment