மரணம் அடைந்த நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் உடல் தகனம் இன்று நடந்தது. பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
உடல் நலக்குறைவு கார ணமாக சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கோட்டூர்புரத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளர் காளை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ராஜேஷ்,ஒய்.ஜி.மகேந்திரன்,எஸ்.வி.சேகர், காத்தாடிராமமூர்த்தி,டைரக் டர் பாலச்சந்தர். மற்றும் பழைய நடிகைகள் பலர் அஞ்சலி செலுத்தினர். பூர்ணம் விஸ்வநாதன் வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, வருஷம்16, மகாநதி உள்பட 80 படங் களில் நடித்துள்ளார்.
சினிமாவுக்கு வரும்முன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய் தியை வானொலியில் அறி வித்த பெருமை இவருக்கு உண்டு. அகில இந்திய வானொலியில் தெற்கு ஆசிய ஒலிபரப்பிலும் முதல் அறிவிப்பாளராகபணி யாற்றியுள்ளார்.
மரணம் அடைந்த பூர்ணம்விஸ்வநாதனுக்கு சுசிலா என்ற மனைவியும் சித்தார்த் என்ற மகனும் உமா, பத்மினி என்ற 2 மகள் களும் உள்ளனர்.
பூர்ணம்விஸ்வநாதன் உடல் இன்று பகல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சிறந்த குணசித்திர நடிகர் பூர்ணம்விஸ்வநாதன் மறைந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். அனைத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்று விளங்கினார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப் பிட்டு உள்ளார்.
பூர்ணம்விஸ்வநாதன் உடல் தகனம்; நடிகர், நடிகைகள் அஞ்சலி
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment