கல்வி என்பது மனிதவாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும் நமது சமுதாயம் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். என்பதற்க்காக காமராஜர் போன்றோரால்போற்றி வளர்க்கப்பட்ட கல்வி இன்று பணத்திற்க்கு விலை போகும் பொருளாகிவிட்டது.கல்வி என்பது அனைத்து மக்களுக்கும்
ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும்என்பதை குறிக்கோளாக உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தற்போதைய நிலைமைஎன்ன?
எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக உள்ளதுஇன்று கல்வி பகல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதுதொடக்ககல்வி முதல் கல்லூரி படிப்பு வரைகல்வி என்பது அறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தொடக்கல்விக்கே இன்று பல ஆயிரங்களைபிடுங்கும் கல்வி நிறுவனங்கள் ,கல்லூரி படிப்பிற்கு பல லட்சங்களை பிடுங்கிக்கொள்கின்றன ஏன் இந்த மாற்றம்! அரசு பள்ளிகள் என்னவாயிற்று? தங்கள் குழந்தைகள் ஆங்கில அறிவிலும் மற்ற அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்என நினைத்த பணக்கரர்களுக்காக மட்டுமே இயங்கிவந்த இது போன்ற பள்ளிகள் என்று பெருகி விட்டதன் காரணம் என்ன? ஆங்கில மோகம் ஒரு புறம் இருந்தாலும்தன் குழந்தையும் சமுதாயத்தில் உயர வேண்டும் எனநினைக்கும் ஏழைகள் கூட இது போன்ற பள்ளிகளையே நாடுகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளின் நிலை பாடம் நடக்கிறதோ இல்லையோ சர்ச்சைகளும் பிரச்சனைகளுக்கும் மட்டும்குறைவில்லாமல் இருக்கிறது பாலியல் பிரச்சனைகள்,குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர், போன்றுதினம் தினம் சர்ச்சைகளை சுமந்து கொண்டு நிற்கிறதுகல்வித்துறை .ஆசிரியர்கள் போராட்டம் ,அரசு விடுமுறைஇவை அனைத்தும் போக பள்ளி நடப்பதேபோரட்டமாகி விட்டது
இது தவிர ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும்தேர்ச்சி விகிதம் தேர்வு முடிவுவெளியிடும் போதெல்லாம் இதனை பற்றி அக்கறை படும்அரசு பின் அதனை பற்றி கண்டு கொள்வதேயில்லை.
ஏன் இந்த நிலை தனியார் பள்ளியில் ரூபாய்2500 க்குவேலை செய்யும் ஒரு ஆசிரியரால் தரக்கூடிய உழைப்பையும்தேர்ச்சி விகிதத்தையும்அரசு பள்ளிகளில் ரூபாய் 13,500 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும்அரசு பள்ளி ஆசிரியர்களால் செய்ய முடியவில்லையே ஏன்?
ஏனென்றால் அங்கு ஆசிரியர்களுக்கென்றுவரைமுறை உள்ளதுஆனால் இங்கு கண்டு கொள்ளாத அரசு, கடமையைஒழுங்காக செய்யதவறிய அரசு அதிகாரிகள், ஆகியோரின்அலட்சிய போக்கால் கல்வி இன்று தனியாரின் கைகளில் அடைக்கலமாகிவிட்டது.
இது போன்ற செயல்களில்அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது ஏனென்றால்கல்வி நிறுவனங்களை நிறுவி கொள்ளையில்ஈடுபட்டுள்ளது வேறு யாருமல்ல அரசில் பங்குவகிக்கும்அமைச்சர்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள தொழிலதிபர்கள்இதனாலேயே அரசு தனியார் பள்ளிகளின் மீதுதனி அக்கறை செலுத்தி அவற்றின் கொள்கைகளுக்கு வாய் மூடி கிடக்கிறது .
இவற்றை தடுக்க அரசு தனியார் பள்ளிகள் அனைத்திற்க்கும்ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்கவேண்டும் "நன்கொடை "என்ற பெயரில் சுருட்டும்பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் மேலும் சிறந்த முறையில்செயல் படாத அரசு ஆசிரியர்களை உடனே வீட்டுக்குஅனுப்பவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தனியார் பள்ளிகளின் கொள்ளை ஒரு புறமிருக்க தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைசேர்க்க முடியாத பெற்றோர் அரசு பள்ளிகளை மட்டுமேநம்பி உள்ளனர் ஆனால் அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக்கிடமாக தவழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு பார்க்கும் போது தனியார் பள்ளிகளில்படிக்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதுஅரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின்நிலைமை மிக மிக மோசமாக உள்ளதுதனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன்அரசு பள்ளியில் குழந்தைகள் நமது சமுதாய ஒட்டத்தில்போட்டியிடுவது இயலாத காரியம் இதற்கு தீர்வு தான் என்ன?
அரசு பள்ளிகள் அனத்தும் தனியார் பள்ளிகளின்தரத்திற்க்கு உயர்த்தப்படவேண்டும் பாடத்திட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களை விடசிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் அரசு பள்ளிகளில் பயின்று சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பலருண்டுஆனால் இன்று அவற்றின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுஇதனை சரி செய்ய அரசு அக்கறை செலுத்த வேண்டும்ஒரு சிறந்த அரசின் கடமை ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குவதே என்பதை மனதில் கொண்டு பாடுபட வேண்டும்நம் குழந்தைகள் தான் தனியாரிடம் நன்றாக படிக்கிறதே நமக்கென்ன என்று அலட்சியமாக இருந்தால் வருங்காலம் நம்மை வசை பாடும் என்பதை மறுப்பதக்கில்லை .
கல்விக்கொள்ளை
Labels: விமர்சனம்
