தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இந்தியா தாக்கினால் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ தளபதி திமிர் பேச்சு

இந்தியா தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும் என, அந் நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி திமிர்த்தனமாகப் பேசியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் எதிரொலியாக இந்திய - பாக்., எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்தியப் படைகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தான் அரசு வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.இதனால், நேற்று முன்தினம் பாகிஸ்தான் போர் விமானங்கள் அந் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வலம் வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.


இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை நேற்று முன்தினம் இரவு ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கியானி சந்தித்துப் பேசினார். அதிபர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.அப்போது, ராணுவத்தினரின் தயார் நிலை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக் கப்பட்டுள்ளன. சந்திப்புக்குப் பின் பத்திரிகை ஒன்றுக் குப் பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி கூறியதாவது:


எந்த நிலைமையையும் சந்திக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. நாட்டுக்காக தங்களைத் தியாகம் செய்ய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் பகுதியில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும்.
இவ்வாறு கயானி கூறியுள் ளார்.


இதுதொடர்பாகப் பேட்டியளித்த அதிபர் சர்தாரி கூறியதாவது:


பாகிஸ்தான் தன் அண்டை நாடுகள் அனைத்துடனும் சுமுகமான மற்றும் இணக்கமான உறவு வைத்துக் கொள் ளவே விரும்புகிறது. ஆனால், எங்களை அச்சுறுத்தும் வகையில் இந்தியத் தலைவர்கள் விடுக்கும் அறிக் கைகள், போர் சூழ்நிலையை உருவாக்குகின்றன; பிராந்திய அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டால், அதை ஒன்றுபட்டு எதிர்கொள்வது என, பாகிஸ் தான் பாதுகாப்பு நிறுவனங்களும், ராணுவமும், அரசியல் தலைவர்களும் மற்றும் பொதுமக்களும் விரும்புகின்றனர். போர் தொடுக்கப்பட்டால், எல்லையைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுக்கு உரிமையுள்ளது.இவ்வாறு அதிபர் சர்தாரி கூறினார்.


பயங்கரவாத முகாம்கள் : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முப்படைகளின் கூட்டுத் தளபதி அட்மிரல் மைக் முல்லன் நேற்று முன் தினம் திடீரென பாகிஸ்தான் வந்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், அவர் பாக்., வருவது இது இரண்டாவது முறை. இஸ்லாமாபாத் வந்த அவர், பாக்., ராணுவ அதிகாரிகளைச் சந்தித் துப் பேசினார்.அப்போது, பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அந்தக் கோரிக்கையை பாக்., அரசு நிறைவேற்ற வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட் டுள்ள பதட்டத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக் கும் விஷயத் தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.


மும்பை துயர சம்பவம் நடந்துள்ள இந்த நேரத்தில், பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழித்துக் கட்ட இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் முல்லன் வலியுறுத்தினார்.இதற்கிடையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வாஷிங்டனில் பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச் சக தகவல் தொடர்பாளர் சீன் மெக்கர் மாக், ""மும்பைத் தாக்குதலுக்குக் காரண மானவர்களைக் கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.


எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, ஒவ்வொரு நாளும் பாகிஸ் தானை வலியுறுத்தி வருகிறோம். யாரைப் பிடிக்க வேண்டும். யார் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதை எல்லாம் பாகிஸ்தான் அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.


பாகிஸ்தானுடன் போரா? மன்மோகன் சிங் மறுப்பு: ""பாகிஸ்தானுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்த வேண் டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மற்றும் ஐ-கமிஷனர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் நிலைத் தன்மையை பேணிக்காக்க வேண்டும் என, இந்திய அரசு விரும்புகிறது. ஆனால், நிலைமை யோ கவலை அளிப்பதாக உள்ளது. ஒரு பொரு ளாதார சக்தியாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குறிக்கோளை சீர்குலைக்கும் வகையில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைப்பதை நாம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.


இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:



பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. யாரும் போரை விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட வேண்டும். இதைச் செய்யும்படி பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பிரச்னை போர் அல்ல. பயங்கரவாதமே பிரச்னை. பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பாகிஸ்தான் மண் பயன்படுத்தப்படுகிறது.
அந்துலே விவகாரம் முடிந்து போன விவகாரம். அந்தப் பிரச்னை இனியும் இழுக்காமல் முடிவடைய அனுமதிக்க வேண்டும். போலீஸ் அதிகாரி கர்காரே மரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் அரசின் நிலையை சிதம்பரம் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். அதில், அமைச்சர் அந்துலே திருப்தி அடைந்து விட்டார். எனவே, அந்துலே எழுப்பிய சர்ச்சை முடிந்து விட்டது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


இந்தியாவுக்கு தலிபான்கள் மிரட்டல்: இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ் தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக் கான தற்கொலைப் படையினருடன் களம் இறங்குவோம் என்று அறிவித் துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கமான தேரிக் - இ- தலிபான் அமைப்பின் தலைவன் பைதுல்லா மெக்சூத் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் மீது போர் திணிக்கப் பட்டால், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்களும் இறங்குவர். இதற்காக நன்கு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்.அத்துடன் நூற்றுக்கணக்கான தற் கொலைப் படையினரும், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயாராக உள்ளனர்.பாகிஸ்தான் எல்லையைக் காக்க போராடும்


பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இவர்கள் துணையாக இருப்பர். உண்மையான புனிதப் போர் நடத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இதற்காகத்தான் தலிபான்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அணு ஆயுத பலம் படைத்த ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை பலவீனப் படுத்த, கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த எதிரிகளின் திட்டங்களை எல்லாம் நாங்கள் முறியடிப்போம். பாகிஸ்தான் படைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக போரிட்டு வரும் தலிபான்கள், எப்படி அவர் களுக்கு துணையாக நிற்பர் என, மக்கள் கேள்வி எழுப்பலாம். அதனால், நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.எங்களுக்கு எதிராக பாக்., ராணுவத்தினர் செயல்பட்டது எல்லாம் முடிந்து போன விஷயம். ஆனால், இப்போது, நாட்டைக் காப்பாற்றவும், அது நிலைத்து நிற்கவும் பாக்., ராணுவம் போரிட உள்ளது. அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிகழ்ந்தால், ஆப்கானிஸ்தான் உடனான பாக்., எல்லையையும் நாங்கள் பாதுகாப்போம். பாகிஸ்தான் மேற்குப் பகுதி எல்லையைப் பற்றி, அந்நாட்டு அரசும், மக்களும், அரசியல் தலைவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை.அந்த எல்லையைக் காக்கும் பணியில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான எங்களின் போராளிகள் ஈடுபட்டுள்ளனர். பாக்., ராணுவத்தின் தலைமையில், அவர்களின் உத்தரவை ஏற்று செயல் பட தலிபான்கள் தயாராக உள்ளனர்.இருந்தாலும், எங்களுக்கென தனி பகுதியை ஒதுக்கி சண்டையிட அனுமதிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு மேல், 'சரக்கு!' நோ!' : விற்பனை நேரத்தை குறைத்தது அரசு

டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்படுகிறது. மேலும், "புதிய கடைகள் இனி திறக்கப்படாது' என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசின், "டாஸ்மாக்' நிறுவனம், 2003ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதிமுதல் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 41 மதுபானக் கிடங்குகள் மற்றும் 6,700 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.இதன்மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்து வந்துள்ளது. தனது வருவாயில் இருந்து ஆயத்தீர்வை, அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் திருப்பித் தர வேண்டிய விற்பனைக் கட்டணம், இறக்குமதி அனுமதி உரிமக் கட்டணம், விற்பனை வரி, சிறப்பு உரிமைக் கட்டணம் ஆகிய வகைகளில் அரசுக்கு, "டாஸ்மாக்' நிறுவனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தி வருகிறது.


இந்நிலையில், "டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டுமென பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்தபோது, ராமதாசின் கோரிக்கையை ஏற்று, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் நேரத்தை முதல்வர் கருணாநிதி குறைத்தார்.இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருந்தன. இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.


இதுதொடர்பாக அரசு கூறியிருப்பதாவது:


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் தெரிவித்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 1,300 பார்கள் மூடப்பட்டுள்ளன. 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக முழு மதுவிலக்கை அடையும் வகையில், முதல் கட்டமாக, இனி புதிய மதுக்கடைகளை தமிழகத்தில் திறப்பதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.


தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்பதை, ஒரு மணி நேரம் குறைத்து, வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படுமென முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஜனவரி 9, திருமங்கலம் இடைத்தேர்தல், ஐந்து மாதங்களில் லோக்சபா பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive