தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

TODAYS OUR NATIONAL GOD 112TH BIRTHDAY


மலேசியாவில் பிரபாகரன்? : தமிழகத்தில் ஊடுருவலா?கண்காணிப்பு அதிதீவிரம்

விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என இலங்கை ராணுவம் எச்சரித்துள்ளதை அடுத்து, மலேசிய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மலேசிய போலீஸ் உயரதிகாரி மூசா ஹசன் கூறியதாவது: விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். மலேசியா அல்லது தாய்லாந்துக்குள் அவர் ஊடுருவக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் காரணமாக மலேசியா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிற நாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் வருவதற்கான அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் ஏற்கனவே மலேசியாவுக்குள் ஊடுருவி உள்ளாரா என்பது குறித்து விசாரிக்கும்படியும் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறு மூசா ஹசன் கூறினார்.


பிரபாகரன் தமிழகத்தில் ஊடுருவல்? : விடுதலை புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரன் மாறுவேடத்தில் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சகட்ட போரில் முல்லைதீவை கைப்பற்ற ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முல்லைதீவு பகுதியில் உள்ளாரா, தப்பி சென்றுவிட்டாரா என்ற சந்தேகம் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.


பிரபாகரன் இந்திய கடலோர பகுதிகள் வழியாக மாறுவேடத்தில் தப்பி வரலாம் என்ற சந்தேகத்தின் படி கியூ பிரிவு போலீசார் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரபாகரன் மாறுவேடத்தில் இந்தியாவுக்குள் வந்தாலும் கைது செய்யப்படுவார் என்பதால் இந்தியா வர சாத்தியமில்லை .இருப்பினும் கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகதிகளாக வருபவர்களையும் விசாரணை செய்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive