மும்பை பயங்கரத்தில் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் அமீருக்கு கோர்ட்டில் ஆஜராக, இலவச சட்ட உதவிக்குழு மூத்த வக்கீல் தினேஷ் மோட்டா, நீதிபதி முன் பகிரங்கமாக மறுத்து விட்டார்.மும்பை பந்தப் பகுதியில் வசிப்பவர் வக்கீல் மோட்டா. இலவச சட்ட உதவிக்குழுவில் 10 ஆண்டாக இருக்கிறார். கடந்த புதன் கிழமை அன்று இவருக்கு குழுவில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. "மும்பை பயங்கரத்தில் சிக்கிய பயங்கரவாதி அஜ்மல் அமீருக்கு நீங்கள் ஆஜராக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.கடிதத்தைக் கண்டதில் இருந்து மோட்டாவுக்கு பெரும் பதட்டம். மும்பை பயங்கரத்தில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூரத்தைச் செய்த பயங்கரவாதிக்காக ஆஜராக தயாரில்லை அவர். ஆனால், எந்த ஒரு குற்றவாளிக் கும் ஆஜராக வக்கீல் இல்லாவிட்டால், சட்ட உதவிக் குழு வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.
வக்கீல் பெயரை நீதிபதி தான் முடிவு செய்வார்.கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட எந்த ஒரு குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கும், இலவச சட்ட உதவிக் குழு வக்கீல் ஆஜராகத்தான் வேண்டும். சுழற்சி முறையில் அளிக்கப்படும். அஜ்மலுக்கு ஆஜராகும் பொறுப்பு மோட்டாவுக்கு தான் தரப்பட்டது.இலவச சட்ட உதவிக்குழு வக்கீல் ஏற்காவிட் டால், அவர் வக்கீல் தொழில் செய்ய முடியாது; நீதிபதி நினைத்தால், அவர் உரிமம் ரத்து செய்ய முடியும்.இதையெல்லாம் கருத்தில் கொண்ட மோட்டா, பெரிதும் புழுங்கினார். கடந்த வியாழன், எஸ்பிளனேட் பகுதி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஸ்ரீமங்கல் முன்னிலையில் ஆஜராக வேண்டும்."வக்கீல் தொழில் போனாலும் பரவாயில்லை; கொடூரத்தை நிகழ்த்திய பயங்கரவாதிக்கு ஆஜராகாதீர்கள்' என்று அவரிடம் மனைவி நினாவும் சொல்லி விட்டார்.வியாழன் அன்று கோர்ட்டுக்கே போகாமல் விட்டு விடலாமா என்று நினைத்தார் மோட்டா. ஆனால், அவர் மனைவியோ, "கோர்ட்டுக்கு போங்கள்; நீதிபதியிடம் போய், என்னால் ஆஜராக முடியாது' என்று சொல்லி விடுங்கள் என்று தைரியமூட்டினார்.
"நான் மும்பையைச் சேர்ந்தவன்: இதையடுத்து, அஜ்மல், அவன் கூட்டாளி நடத்திய கொடூர தாக் குதலில் பலர் கொல்லப்பட்ட சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி, கோர்ட்டுக்கு போனார் மோட்டா. போகும் போதே, ஆயிரம் யோசனைகள்; குழப்பங்கள்.கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராகி தயங்கியபடி,"என்னை மன்னித்து விடுங்கள்; என்னால் ஆஜராக முடியாது' என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.மோட்டாவையே உற்றுப் பார்த்த நீதிபதி, "பரவாயில்லை; அவரை வற்புறுத்த வேண்டாம்' என்று பெரிய மனதுடன் கூறி, அவரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தார். பெருமூச்சு விட்டபடி, கோர்ட்டை விட்டு வீட்டுக்கு நிம்மதியாக திரும்பினார்.மோட்டா கூறுகையில், "நான் மும்பையைச் சேர்ந்தவன். இங்கு கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் கருதுகிறேன்.
அப்படியிருக்கும் போது, கொடூரத்தை நிகழ்த்திய பயங்கரவாதிக்கு ஆஜராக என் மனது இடம் கொடுக்குமா? இதற்கு முன், பல குற்றவாளிகளுக்கு ஆஜராகி உள்ளேன். ஆனால், இந்த பயங்கரவாதிக்கு ஆஜராக நான் விரும்பவில்லை. என் தொழிலே போனாலும் ஆஜராவதில்லை என்று முடிவு செய்தேன்' என்று தெரிவித்தார்.
பயங்கரவாதிக்கு ஆஜராக மூத்த வக்கீல் மறுப்பு: 'தொழிலே போனாலும் பரவாயில்லை'
கிளிநொச்சி அருகே கடும் சண்டை : புலிகளுக்கு பலத்த சேதம்
இலங்கையில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் சண்டையிட்டு வருவதால், அவர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது:கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அத்துடன் முல்லைத் தீவுப் பகுதியிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி அருகே அடம்பன் பகுதியில் நேற்று முன்தினம் ஆறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் புலிகள் தரப்பில் அதிகம் பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில், ராணுவ தரப்பில் சிறிதளவு இழப்பு ஏற்பட்டது.இதேபோல், முல்லைத் தீவு பகுதியிலும் ராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் தொடர்ந்து சண்டையிட்டு முன்னேறி வருகின்றனர். அவர்களுடன், புலிகளும் தீவிரமாக சண்டையிடுகின்றனர்.
இந்தச் சண்டையில், புலிகள் வசமிருந்த சில பகுதிகளை ராணுவத்தினர் பிடித்தனர். முல்லைத் தீவில் உள்ள மல்லவராயன் காடு முறிப்பு, குமுளமுனை மற்றும் ஒலுமாடுவிலும் நேற்று முன்தினம் சண்டை நடந்தது. இந்தப் பகுதிகளில் புலிகளின் நிலைகள் பலவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையில், "இலங்கையின் வடபகுதியில் நடக்கும் ராணுவ நடவடிக்கை ஈடுஇணையற்றது; உலகின் எந்தப் பகுதியிலும் நிகழாதது' என, அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
"கடந்த 2006 ஆகஸ்டில் முல்லைத் தீவில் ராணுவத்தினர் சண்டையை துவக்கினர். அதன்பின், ராணுவத்திற்கு எந்தப் பின்னடையும் ஏற்படவில்லை. எங்களின் ராணுவத்தினர் நடத்தும் சண்டையைப் போல, உலகின் எந்தப் பகுதியிலும் நடந்திருக்காது. ஒரு சிறு பின்னடைவை கூட சந்திக்காமல், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்' என, அவர் மேலும் கூறியுள்ளார்.
