தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

சென்னையில் தே.மு.தி.க. இளைஞர் மாநாடு

சென்னையில் தே.மு.தி.க. இளைஞர் மாநாடு : தொண்டர்களை தடுக்க முயற்சி-விஜயகாந்த் குற்றச்சாட்டு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

சென்னை தீவுத்திடலில் வருகிற 18-ந் தேதி தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, கட்சி தொண்டர்கள் அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறேன். பல இடங்களில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். சென்னையிலும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதற்காக தீவுத்திடலில் மாநாடும் முன்னதாக பேரணியும் நடத்துகிறோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவதற்காக பஸ், வேன், கார்களை முன்பதிவு செய்துள்ளனர்.

மாநாட்டுக்கு வருபவர்களை தடுப்பதற்கான முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு பஸ், வேன், கார் தரமுன் வந்தவர்களை மிரட்டி வருகின்றனர். கொடுத்த முன் பணத்தை சிலர் திருப்பித் தந்துவிட்டார்கள்.

எப்படி நாம் ஜெயிப்பது என்றுதான் ஒரு கட்சி திட்டமிட வேண்டும். அராஜகத்தால் மற்றொரு கட்சியை அழிக்க நினைக்க கூடாது. வளர்ந்த கட்சிகள் மற்ற கட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு புதிய கட்சிகளை மிரட்ட கூடாது.
போலீசாரும், போக்கு வரத்து துறையும் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருவதால்தான் இந்த மிரட்டல்கள் வருகின்றன.

மாநாட்டில் நிச்சயமாக மின்வெட்டும் இருக்கும். இது பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கிறேன். மற்ற கட்சி தலைவர்கள் யாரையும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை. இடதுசாரி கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்து பேசினார்கள்.

ஊழலை ஒழிப்பதில் எங்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கிறது. கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.

இலங்கை பிரச்சினையில் நல்ல தீர்ப்பு ஏற்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். மத்திய மந்திரிகளாகவும், எம்.பி.க்களாகவும் இருப்பவர்கள் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்.

தந்திகொடுப்பது, கூட்டம் நடத்துவது எல்லாம் வெறும் நாடகம் தான். 1956 முதல் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கருணாநிதி சொல்கிறார். இத்தனை ஆண்டுகளில் என்ன தீர்வு கண்டார். தமிழர்களுக்கு ஆதரவாக கம்ïனிஸ்டுகள் உண்ணாவிரதம் இருந்த போது, அன்று அரை குறையாக ஆதரித்தவர்கள் இப்போது உண்ணாவிரத்துக்கு போகிறார்கள் என்று கூறினார்.

இப்படி அவர் பேசினால் மற்றவர்கள் அவரோடு எப்படி ஒத்துப்போவார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் போது, பிரதமரிடம் பேசினேன். தன்னிடம் கேட்டார், தூதரை கண்டித்தார்கள். இலங்கை அரசுக்கு எச்சரிக்கை என்று சொல்கிறார்கள். எத்தனை முறைதான் இந்த சடங்கை நடத்துவது.

இந்த ஆட்சி தேவையா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என்றும் கருணாநிதி சொல்கிறார். எத்தனையோ முறை இப்படி சொல்லிவிட்டார். எப்போது தான் அவர் விலகினார். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.

பார்வையற்றோருக்கு நான் செய்த உதவியை விமர்சித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது தொகுதியில் உள்ள எப்போதும் வென்றான் என்ற ஊரில் வாரம் ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. 8 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. இதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. அவரது அறிëக்கையிலேயே முரண்பாடு இருக்கிறது. நான் ஊனமுற்றவர்களுக்கு செய்வது போல மற்றவர்களும் போட்டி போட்டு செய்யலாம் என்றுதான் கூறினேன்.

முதல்-அமைச்சர் சினிமாவில் கிடைத்த பணத்தை நலிந்த கலைஞர்களுக்கு தான் கொடுத்தார்.

மத்திய தொலை தொடர்பு துறையில் ஊழல் நடைபெறுகிறது என்று நான் ஒருமாதத்துக்கு முன்பு கூறினேன். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மந்திரியை பதவி நீக்கம் செய்து விட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

தன்னை பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு பண்ருட்டி ராமச் சந்திரன் விளக்கம் அளித்தார்.

அவர் கூறும் போது இலங்கை பிரச்சினை தொடர்பாக எம்.ஜி.ஆர். முதல்-அமைச்ëசராக இருந்த போது தனி ஈழம் அமைவது Öன் தீர்வு என்று தெரிவித்தோம். அப்போது இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்து கருணாநிதி வெளியேறினார். பிளவு நிலையை தொடர்ந்து கடைபிடிப்பால்தான் இன்னும் இந்த பிரச்சினை தீரவில்லை என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive