நல்லெண்ணெய். இதன் பெயரிலேயே அதன் சிறப்பு உள்ளது.
நல்லெண்ணை அல்லது எள் எண்ணெய் என்று நாம் இதனைக் கூறுகிறோம். எள் என்பது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.
எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய். பொதுவாக கிராமங்க்ளில் ஒரு பழமொழி கூறுவார்கள்.
``வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்''- என்பதே அது.
அதாவது வைத்தியர் - டாக்டரிடம் செல்லாமல் இருப்பதற்கு, எண்ணெய் விற்கும் வாணிபருக்கு பணம் கொடுக்கலாம். எனவே அதிக எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தினால், வைத்தியச் செலவு இருக்காது என்பதே நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.
உடல் சூட்டைத் தணிப்பதில் நல்லெண்ணெய் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.
`சனி நீராடு' என்பதன் பொருளும் அஃதே. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர மேனிக்கு புதுப்பொலிவையும் நல்லெண்ணெய் அளிக்கிறது.
இதன் காரணமாகவே பெண்கள் பூப்பெய்தவுடன் நல்லெண்ணெயுடன் உளுந்தில் செய்யப்பட்ட கழியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். உளுந்தும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், உடலின் சூட்டைத் தடுக்கவே இவற்றைத் தருகிறார்கள்
உடல் சூட்டைத் தடுக்கும் நல்லெண்ணெய்
Labels: மருத்துவ செய்திகள்
எஞ்சியிருப்பது 80 வயது ஒரே ஆமை : அரிய இனம் அழிவை தடுக்க முயற்சி
அழிந்து போகும் நிலையில், நான்கு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் ஒன்றான அரிய வகை பெண் ஆமையால், அதன் இனம் விருத்தி செய்யப்படுமா என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். அந்த பெண் ஆமையின் வயது 80. மென்மையான ஓட்டுடன் கூடிய ராட்சத யாங்க் டெஸ் இனத்தை சேர்ந்த ஆமைகள் தற்போது, உலகளவில் நான்கு மட்டுமே எஞ்சி உள்ளது. நீண்ட தேடலுக்கு பின், கடந்த ஆண்டு ஒரு பெண் ஆமை கண்டுபிடிக்கப்பட்டு, சீனாவில் உள்ள கஜோவு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பெண் ஆமையின் வயது 80. ஏற்கனவே வனவிலங்கு பூங்காவில் உள்ள, இதே இனத்தை சேர்ந்த மூன்று ஆமைகளும், ஆண் ஆமைகள். அவற்றில் 100 வயது கொண்ட ஒரு ஆமையுடன், பெண் ஆமை அதிர்ஷ்டவசமாக இணைந்தது. பெண் ஆமைக்கு செயற்கை முறை மூலம் கருத்தரிக்கச் செய்வது மிகவும் கடினமான காரியம் என்பதால், அது முட்டை பொரிக்கும் காலம் வரை விஞ்ஞானிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர். எதிர் பார்த்த படியே இரண்டு முறை 10க்கு மேற்பட்ட முட்டைகளை பெண் ஆமை இட்டது. அவற்றை குஞ்சு பொரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த முட்டையும் குஞ்சு பொரிக்கவில்லை. இதனால், விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தாலும், மனம் தளராமல், அடுத்த சினைக் காலத்துக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
Labels: உலக செய்திகள்
