தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 2 நோய்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட கூற்றுகளை உடைத்து தெரியும் வகையில், ஆன்கோஜெனிக் ஹுமன் பபிலோமா வைரஸ் (oncogenic human papilloma virus-HPV) என்ற நோய்க் கிருமிதான் அதற்கு முழுக் காரணம் என ஜெர்மன் விஞ்ஞானி ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் (Harald zur Hausen) கண்டறிந்தார். இதற்காக 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையில் 50 விழுக்காடு அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தற்போதைய சூழலில் உலகின் மிகக் கொடிய ஆட்கொல்லி நோயாக கருதப்படும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான நோய்க் கிருமியை கண்டறிந்த விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகியோருக்கு நோபல் பரிசுத் தொலையில் தலா 25 விழுக்காடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி. கண்டுபிடிப்பு: கடந்த 1981இல் மனித உயிர்களை பலி கொள்ளும் புதிய ரக நோய் குறித்து தகவலறிந்ததும், அதற்கு மூலக் காரணமான கிருமியை கண்டறியும் பணியில் பிரான்ஸ் விஞ்ஞானிகளான ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகிய இருவரும் ஈடுபட்டனர்.

இதற்காக எய்ட்ஸ் நோயின் ஆரம்பகட்ட நிலையில் உள்ள நோயாளிகளின் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட திசுக்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு நோய்க்கிருமி தொடர்ந்து பன்மடங்காகப் பெருகி, செம்மையான உயிரணுக்களையும் தொடர்ந்து பாதிப்பதுடன் அவற்றையும் நோய்க் கிருமியாக மாற்றி வருவதை அவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.

இந்நோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட ஆன்கோஜெனிக் ரெட்டிரோ வைரஸ் என்ற நோய்க்கிருமியின் தன்மையும், விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் கண்டறிந்த நோய்கிருமியின் தன்மையும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. தொடர் ஆய்வில் எய்ட்ஸ் நோய்க்கு காரணமானது அவர்கள் புதிதாக கண்டறிந்த நோய்க்கிருமி என்பதும் உறுதி செய்யப்பட்டு அதற்கு ஹெச்.ஐ.வி. (human immunodeficiency virus-HIV) எனப் பெயரிடப்பட்டது.

ஹுமன் பபிலோமா வைரஸ்: கடந்த 1970களில் கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட காலத்தில், ஹுமன் பபிலோமா வைரசுக்கும், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் தனது ஆய்வைத் துவக்கினார்.

கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களில், ஆன்கோஜெனிக் வைரஸ் இருந்தால் அது அவர்களுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதுபோன்ற வைரஸ் உடைய டி.என்.ஏ.-க்களை கண்டறிய கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களை அவர் தேடத் துவங்கினார்.

சுமார் 10 ஆண்டு காலம் இந்த ஆய்வில் ஈடுபட்டதன் பயனாக கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளானவர்களிடம் அந்த டி.என்.ஏ. (ஹுமன் பபிலோமா வைரஸ் டி.என்.ஏ.) இருப்பதைக் கடந்த 1983இல் ஹெரால்ட் கண்டுபிடித்த. பின்னர் 1984இல் தான் கண்டுபிடித்த HPV16 ரக வைரஸைக் கொண்டு HPV18 ரக வைரஸை அவர் உருவாக்கினார்.

தற்போது கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளாகும் 70 சதவீதம் பெண்களில் உடலில் HPV16 மற்றும் HPV18 வைரஸ்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive