தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பில் பலியானோர்க்கு அஞ்சலி

இந்த குண்டு வெடிப்பில் பலியான குடும்பத்திற்க்கு
நம் இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். மேலும்இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகள்இதற்கு துணை போகும் நபர்கள் போன்றோரைஅரசு உடனுகுடன் தூக்கிலிட வேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் அதை விடுத்து அவர்களை விருந்தினர் போல் நடத்தும்வெட்கங்கெட்ட நிலை மாற வேண்டும்.

மத்திய அரசு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தைமறந்துவிட்டு ஆட்சியை காப்பாற்ற யாருக்கு எத்தனை கோடி கொடுத்தோம் என்பதை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது.
நாட்டுக்காக செயல்படவேண்டிய உளவுத்துரைஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்காகசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது.எதிர்கட்சி ஆளுங்கட்சியை பற்றி கூறும் விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் ஆளுங்கட்சியினருக்கு அனுப்பும் ஒரு தபால் துறையைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
கருணை காட்டவேண்டும் யாருக்கு மனிதர்களுக்குதானே தவிர தவிர இது போன்ற மனித உரு கொண்ட மிருகங்களுக்கு அல்ல ஆனால் மத்திய அரசு இன்னும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையேகடைபிடித்துக்கொண்டு வருகிறது
நடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி "அப்சல்குரு"வை தூக்கில் போடாமல் இன்னும் அவனுக்கு விருந்து வைத்துக்கொண்டுள்ளோம் இது மானக்கேடான விஷயமில்லையா?
நாம் இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் இது போன்ற செயல்களில்ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க இயலாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்க்குசிறிதளவேயினும் பயம் ஏற்ப்பட வேண்டுமெனில்நம் சட்டங்கள் கடுமையானதாக மாற்றியமைக்கப்படவேண்டும்.
தீவிரவாதசெயலுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்படவேண்டும்இல்லையென்றால் விரைவில் அனைத்து நாடுகளும் இதற்க்கான இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை
தீவிரவாதத்துக்கு துணைபோகும், அவர்களுக்குஉதவும் நாடுகளுக்கு கடும் நிபந்தனைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஒன்றினைந்து செயல்பட்டாலன்றி தீவிரவாதம் எனும் கொடிய அரக்கனை அழிக்க இயலாது .

சென்னைக்கு ரெட் அலர்ட்: எல்லைகள் 'சீல்'

தென் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில், அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகம் இடம் பெற்றுள்ளது."மதவாத பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'என, தமிழக அரசுக்கு மூன்று எச்சரிக்கை கடிதங்களை மத்திய அரசு அனுப்பியது.மாநிலத்தின் அபரிமிதமான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் ஏற்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்க பயங்கரவாதிகள் ஐ.டி., நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
பெங்களூரு, ஆமாதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் அடுத்த குறி சென்னையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல், மத்திய உளவுத் துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்துள்ளது.சென்னையில் அமெரிக்கா ஐ.டி., நிறுவனங்கள், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் டைடல் பார்க், டைசல் பார்க், அன்ட்டஸ், நேஷனல் டேட்டா சென்டர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா, எழும்பூரில் அல்சாமால், ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வணிக வளாகத்திலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டுகள் உள்ளதா என்ற சோதனை நடந்து வருகிறது.அரசு பொது மருத்துவ மனை, கோயம்பேடு மட்டுமின்றி, வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
சென்னை நகரில் முக்கிய ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்த கணக்கெடுப்பில் உள வுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி யம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள 17 முக்கியமான கோவில்களுக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் போக்குவரத்து உள்ளது. தரைக்கு மேல் செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநகரில் புதியதாக கட் டப்பட்டுள்ள 20 மேம்பாலங்கள் மற்றும் சாஸ்திரி பவன் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள், அண்ணா சாலை யில் உள்ள அமெ ரிக்க தூதரகம் உட்பட பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு அளிக் கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"வேறு மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், விமானம், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப் புள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போலீஸ் பாது காப்பு அதிகமாக உள்ள நகர் ப்பகுதியில் பயங்கர வாதிகள் தங்குவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கோவில் மண்டங்களை பயன் படுத்தும் வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய சைக்கிள்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கும் சைக்கிள்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, மண்ணடி, பாரிமுனை, கொடுங்கையூர், பெரம்பூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பொது மக்களுடன் எளிதாக ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்


இந்த டைட்டில் வேற எதுக்கோன்னு நெனைக்காதீங்க குண்டு வைக்க போவதில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கு

பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவம்,"ரா' என்னும் உளவுப் படை ஆகியவற்றிடமிருந்து மத்திய உளவுத் துறைக்கு, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்' ல் மதுரையிலுள்ள புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீரழிக்கும் சினிமா: செயலிழந்த சென்சார் போர்டு

முதாயத்தை பாதிக்கக்கூடிய தவறான விஷயங்கள், மக்களிடம் எளிதில் சென்றடையக்கூடிய சினிமா மூலமாக பரப்பப்படக் கூடாது என்பதற்காகவே "சென்சார் போர்டு' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. ஆனால் தற்போது, "சென்சார் போர்டு' முற்றிலும் செயலிழந்துவிட்ட நிலையில் இருப்பதால், சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் அதிகளவில் ஆபாச மற்றும் கொடூர எண்ணங்களை திரைப்படங்கள் விதைத்து வருகின்றன.ஒரு சினிமா தணிக்கைக்காக வரும்போது, மாநில சென்சார் போர்டின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்படத்தை பார்வையிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்குகின்றனர்.
அமைப்பு இருக்கிறதா?: ஒரு சினிமாவை தணிக்கை செய்வதற்கு முன், படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதற்கு ஒரு வீடியோ, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது.அவற்றை பார்த்துவிட்டு, சினிமாவில் அத்தகைய காட்சிகள் இருந்தால், அவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தான் விதிமுறை. கத்தியால் வெட்டுவது, ரத்தம் பீச்சியடிப்பது போன்ற காட்சிகளை காட்டக் கூடாது; பெண்களின் தொப்புளை ஆபாசமாக காட்டக் கூடாது; பெண்களின் மார்பகத்தை "குளோசப்'பில் காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் இதில் உள்ளன.ஆனால், சில ஆண்டுகளாக வெளிவரும் சினிமாக்களை பார்க்கும்போது, சென்சார் போர்டு என்று ஓர் அமைப்பு இருக்கிறதா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.
"ஆசை' என்ற படத்தில், பிளாஸ்டிக் பையால், முகத்தை கட்டி மூச்சித் திணறச் செய்து கொலை செய்யும் காட்சி, குழந்தைக்கு கூட புரியும் வகையில் செய்முறை விளக்கத்தோடு இடம்பெற்றிருந்தது. "பட்டியல்' படத்தில் கத்தியால் குத்திவிட்டு, உடல் தப்பிக்கக் கூடாது என்பதற்காக உள்ளே மணலை எடுத்து போடும் காட்சி இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த "தசாவதாரம்' படத்தில் சீன பெண்ணின் கழுத்தை கம்பியில் அழுத்தி அறுத்துக் கொலை செய்யும் காட்சி மிகவும் கொடூரமாக படமாக்கப்பட்டிருந்தது. இத்தகைய காட்சிகளை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது.
இவற்றை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மனதில் இந்த கொடூர காட்சிகள் பதிந்துவிடுகின்றன. சிறிய சண்டைகளின்போது கூட வாய்ப்பு கிடைத்தால், இவற்றை அவர்கள் செயல்படுத்த துணிகின்றனர்.மேலும் சினிமாவில் ஆபாச காட்சிகளும், வசனங்களும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுடன் சினிமா பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவிற்கு தணிக்கை இருக்கும் நிலையில், அந்த சினிமாவின் "ஆடியோ' கேசட்டிற்கு தணிக்கை என்பதே முற்றிலும், இல்லை. சினிமாவில் தணிக்கைக்குழுவின் ஆட்சேபத்தால் நீக்கப்படும் பாடல் வரிகள் "ஆடியோ' கேசட்டில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இடம்பெறுகின்றன.
இசையால் கவரப்படும் சிறு குழந்தைகள் அந்த ஆபாச வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல், பலர் முன்னிலையில், "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா?' என பாடி வருகின்றன.சினிமாவில் ரஜினி "சிகரெட்' பிடிப்பதை பார்த்து அப்பழக்கத்திற்கு ஆளான இளைஞர்கள் பலர், ரஜினியே "சிகரெட் பிடிப்பது தவறு' என்று கூறினாலும் அப்பழக்கத்தைக் கைவிடுவதில்லை. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை சினிமாவிற்கு உள்ளது. ஆனால், இதை உணர்ந்து செயல்படுவதாக இன்றைய திரையுலகம் இல்லை.
கிளுகிளுப்பான காட்சி : முழுக்க, முழுக்க வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே இன்றைய திரையுலகம் செயல்பட்டு வருகிறது.முன்பெல்லாம், தங்கள் படத்துக்கு "ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுவிடக் கூடாது என, தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தவித்தனர். தற்போது, "தாராளமாகப் போடுங்க' எனக் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். "ஏ' தான் கிடைக்கும் என உறுதியானால், மேலும் கிளுகிளுப்பான மற்றும் வன்முறையான காட்சிகளை வைத்து விடுகின்றனர்."சென்சார் போர்டு, தணிக்கை தொடர்பான விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சினிமாவில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க "சென்சார் போர்டு' ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம், பரவலாக பொதுமக்களின் கருத்தை அறிந்து அதனடிப்படையில் சினிமா தணிக்கையை மாற்றியமைக்க வேண்டும்' என்பதே "காதல், ஆட்டோகிராப்' போன்ற நல்ல படங்களை விரும்புபவர்களின் கோரிக்கை. அவையும் வெற்றிகரமாக வசூலைக் குவித்தவை என்பதே இதற்குச் சான்று.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive