தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ரியல் ஹீரோ ராமசாமி

பாரீஸ் கார்னரின் மொட்டை மாடி ஒன்றில், ஒற்றை ஆளாக டைப்ரைட்டரில் தடதடத்துக்கொண்டு இருக்கிறார் 'டிராஃபிக்' ராமசாமி. 'காங்கிரஸின் வெற்றிக்கு நீங்கள் தவிர்க்க முடியாத காரணம். வாழ்த்துக்கள். ஆனால், தமிழ கத்தின் சீர்குலைவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகளையும் மீறியதால் தி.மு.க. சார்பாகத் தேர்வான 18 எம்.பி-க்களும் பதவிப் பிரமாணம் ஏற்கவோ, அமைச்சரவையில் பங்கு எடுக்கவோ அனுமதிக்காவிட்டால் உங்களுக்கு அது இன்னும் பெருமை தேடித்....' என்று நீள்கிறது ராகுல் காந்திக்கான அந்தக் கடிதம். 'டிராஃபிக்' ராமசாமி... உண்மையிலேயே ஒன் மேன் ஆர்மி!001''1953-ல் எனக்கு 18 வயசு. ஒரு நாள், ரேஷன்ல அரிசி வாங்கப் போயிருந்தேன். 14 கிலோ அரிசியை அளந்து பையில கட்டிட்டு கிளம்புறப்போ வந்து நின்ன தாசில்தார், 'ஒரு ஆள் இத்தனை கிலோ அரிசியைத் தூக்கிட்டுப் போறதுக்குச் சட்டப்படி அனுமதியில்லை. பையை வெச்சுட்டுப் போ'ன்னாரு. 'இப்ப நான் போறேன்... ஆனா, இதே அரிசியை நீங்களே என்னைத் தேடி வந்து வாங்கிக் கோன்னு கெஞ்சுவீங்க'ன்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். அவர் மேல கேஸ் போட்டேன். தீர்ப்பு வந்துச்சு. நான் சொன்ன மாதிரியே, ஒரு பையில அதே 14 கிலோ அரிசியைத் தூக்கிட்டு வந்து எங்க வீட்டுக் கதவைத் தட்டுனாரு அந்த தாசில்தார். அந்த வயசுல அது பெரிய சாதனையா, ரொம்ப மிதப்பா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டிப் புரிஞ்ச ஒரு விஷயம்... எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''002''எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. பொண்ணு வீட்ல 1,500 ரூபாய் வரதட்சணை கேட்டார் எங்கப்பா. ஆனா, அவங்க வீட்ல 16 பிள்ளைகளை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டத்துல இருந்தாங்க. 'நான் அந்தப் பொண்ணைத்தான் கட்டிக்குவேன். என்னை நம்பி அவங்க பொண்ணு கொடுக்குறாங்க. எனக்குக் கை, கால் இருக்கு. காசு பணம் வேண்டாம். இதுல உங்களுக்கு எதுக்கு வரதட்சணை கொடுக்கணும்?'னு சொல்லிட்டு, வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன்.அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்குப் பிறகு ஒரு தடவைகூட நான் திரும்ப எங்க வீட்டுக்குப் போகலை. வீட்டுக்கு வெளியே நடக்குற அநியாயங்களைத் தட்டிக் கேக்குறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள இருக்குற கோளாறுகளைச் சரிசெய்யணும். அந்த அளவுக்கு மனசுல தெளிவையும் துணிவையும் வளர்த்துக்குற பக்குவம் வரணும். ஒவ்வொரு தனி மனுஷனும் கத்துக்க வேண்டிய விஷயம் இது. ஆனா, இங்கே பல தலைவர்களுக்கே அந்தத் தகுதி இல்லாததனாலதான், நம்ம தகுதி இப்படி இருக்கு. நம்ம வீட்டுப் பொண்ணு கையை ஒருத்தன் நடுரோட்ல பிடிச்சு இழுத்தா, அவன் மேல நமக்கு எவ்வளவு கோபம் வருமோ, அதே கோபம் நம்ம வீட்டுப் பையன் ஏதோ ஒரு பொண்ணு கையைப் புடிச்சு இழுத்தாலும் வரணும். அப்பதான் நாம மனுஷன்... நான் மனுஷன்!''003''என் ஒரே பொண்ணு மார்க் குறைச்சு வாங்கிட்டதால காலேஜ்ல பி.காம்., சீட் கிடைக்கிறது சிக்கலா இருந்துச்சு. 'உங்களுக்குத்தான் வக்கீல், கோர்ட், கட்சி ஆளுங்கன்னு பழக்கம் இருக்கே... சிபாரிசு பண்ணச் சொல்லுங்க. முடியலைன்னா லஞ்சம் கொடுங்க'ன்னு சிலர் சொன்னாங்க. 'பிரமாதமான மார்க் எடுத்தவங்களுக்கு மட்டும்தான் சீட் கொடுப்பாங்கன்னா, காலேஜ்ல ஒரு கிளாஸ்ல படிக்கிற எல்லா பொண்ணுங்களும் யுனிவர்சிட்டி கோல்ட் மெடல்வாங்கணுமே! மார்க் கொஞ்சம் குறைஞ்சுட்டா அவங்க எதுக்குமே லாயக்கில்லாதவங்க ஆயிடுவாங்களா?'னு அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, காலேஜுக்குப் போனேன்.தினமும் பிரின்சிபாலைப் பார்த்து, 'என் பொண்ணு மார்க் இது. இதுக்கு என்ன வாய்ப்பிருக்கோ அதைச் செய்யுங்க!' சொல்லிட்டு வருவேன். கடைசியில பி.காம்., சீட்டே கிடைச்சிருச்சு. சிபாரிசு, லஞ்சம் சங்கதிகளை எல்லாம் தாண்டி நம்ம முனைப்புதான் எதையும் சாதிக்கும்னு நான் அந்த விஷயத்துல புரிஞ்சுக்கிட்டேன்!''004''பின்னி மில் வேலையை விட்டுட்டேன். அப்ப முதல்வரா இருந்த கருணாநிதி 'ஒன் வே'யில் கார்ல போனா படம் புடிச்சுப் போடுறது, போலீஸ்காரங்களோட முறைகேடுகளைத் தட்டிக்கேக்குறதுன்னு பரபரப்பா இருந்ததால, என்னைத் தொல்லையா நினைச்ச ஒரு கிரைம் இன்ஸ்பெக்டர், நாலு பேரை செட்டப் பண்ணி என் மேல் பொய்ப் புகார் கொடுக்க வெச்சார். அதுக்காக விசாரிக்கிறேன்னு சொல்லி என்னைப் பெரிய பட்டாளத்தோடு வந்து பனியன், ஜட்டியோடு கையில விலங்கு போட்டு நடுரோட்ல அடிச்சு இழுத்துட்டுப் போயி தலைகீழா கட்டி அடிச்சாரு. ஒவ்வொரு அடி விழுந்தப்பவும், 'இதுக்கு நிச்சயம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும்'னு மட்டும் சொல்லிட்டே இருந்தேன். ஸ்டேஷனைவிட்டுக் கிளம்புறப்போ, 'தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்... இப்போ நான் கிளம்புறேன். ஆனா, சீக்கிரமே இந்த நாளுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்..கோர்ட்ல கேஸ் நடந்தது. அவர் அந்த இடைவெளியில் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆகி டிரான்ஸ்ஃபர்ல நன்னிலம் போயிட்டார். எனக்கு எதிரா நிப்பாட்டுன 22 சாட்சிகளையும் பொய் சாட்சின்னு உடைச்சேன். தீர்ப்பு சொல்ற அன்னிக்கு 'விசாரணை அதிகாரி' என்பதால் அவரையும் வரச் சொல்லி இருந்தாங்க. கோர்ட்ல ரெண்டு பேரும் எதிரெதிர் கூண்டுல நிக்கிறோம். 'ராமசாமி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அவரை விடுவிக்கிறோம். தேவையே இல்லாமல் அவரை உள்நோக்கத்தோடு அவமானப் படுத்தி காயமடையச் செய்த உங்கள் மீது ஏன் நடவ டிக்கை எடுக்கக் கூடாது?'ன்னு தீர்ப்பு. நிமிர்ந்து என் முகத்தை ஒரு தடவை பார்த்தார் அவர். கூண்டை விட்டு இறங்கினவர், தடால்னு கீழே விழுந்துட்டார். அதுக்கப்புறம் அவர் எழுந்திரிக்கவே இல்லை. கோர்ட், தீர்ப்பு, தண்டனைகளைவிட நம்ம மனச்சாட்சிக்கு உண்மையா இல்லைன்னா என்ன ஆகும்னு நான் தெரிஞ்சுக்கிட்ட நாள்!''005''1998-ல சென்னை ஹைகோர்ட்டைச் சுத்தி ஒன் வே ஆக்கினாங்க. போக்குவரத்து நெரிசலுக்கு எந்த விதத்திலும் தீர்வளிக்காத, ஒரு சில கான்ட்ராக்டர் களைத் தவிர, வேற யாருக்கும் பலனளிக்காத திட்டம் அது. அவ்வளவு அகலமான காலியான ரோடுல சர்... சர்னு பறந்த வண்டிகளால் 23 பொதுமக்கள் உயிர் இழந்தாங்க. பொதுநல வழக்குப் போட்டேன். அந்த ரோட்ல ஓவர் பிரிட்ஜ் கான்ட்ராக்ட் எடுத்திருந்த ஆளுங்கட்சிக்காரன் என்னைக் கொல்ல வந்தான். போலீஸ் மிரட்டுச்சு.சளைக்காம கோர்ட்ல மல்லுக் கட்டினேன். 'அந்தச் சாலையை மீண்டும் இருவழிப் பாதை ஆக்கவும். இனி எக்காலத்திலும் அங்கு ஒன் வே திட்டம் அமல்படுத்தக் கூடாது'ன்னு தீர்ப்பு வந்தது. இப்ப, சமீபத்தில் அசோக் நகரைச் சுத்தியும் ஒன் வே ஆக்கினாங்க. அதனாலயும் எந்தப் பலனும் இல்லை. திரும்பவும் இருவழிப் பாதை ஆக்கச் சொல்லி கோரிக்கைகள், போராட்டங்கள்! 'நீங்க எடுக்குறீங்களா... இல்லை, கோர்ட் மூலமா எடுக்கவைக்கவா?'ன்னு மட்டும் நான் கேட்டேன். 'ராமசாமி, அவசரப்படாதீங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அசோக் நகர் மீண்டும் இரு வழிப் பாதை ஆகும்'னு சொன்னவங்க, சொன்னதைச் செஞ்சாங்க. ஒரு பாதையில் முதல் தடவை நடக்கும்போதுதான் முள்ளு, கல்லு எல்லாம் காலைக் குத்தும். எடுத்துப் போட் டுட்டு நடந்தோம்னா, அடுத்த தடவை அதே பாதை உங்களுக்கு அத்தனைச் சிரமம் தராது!''006''2002-ல் மீன்பாடி வண்டிகளை ஊருக்குள்ள ஓட்டத் தடை போடச் சொல்லி, பொதுநல வழக்கு போட்டேன். அதுல கடுப்பான ஒருத்தன் கத்தியால என்னைக் குத்த வந்தான். என் கண்ணுகிட்ட கத்தி பாய்ஞ்சு பார்வை பாதிக்கப்பட்டது. நாம போட்ட வழக்கால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மீன்பாடி டிரை வர்தானே ஆத்திரத்துல இப்படிப் பண்ணியிருக்கான்... நேர்மை, நியாயம்னு பேசிட்டு நாம பண்றது தப் போன்னு தோணுச்சு. தடுமாற்றத்துல இருந்தேன்.மறுநாள், ஒரு மீன்பாடி வண்டி அடிச்சு பரிதாபமாச் செத்துப் போனாரு ஒருத்தர். அவரோட ரெண்டு குட்டிப் பொன்ணுங்க அப்பா இறந்துட்டது தெரியாம, பாடி மேல விழுந்து புரண்டு விளையாண் டுட்டு இருந்தாங்க. எனக்குள்ள இருந்த தடுமாற்றம் தெளிவாச்சு. இன்னும் தீவிரமாப் போராடி, மீன் பாடி வண்டிகளுக்குத் தடை வாங்கி னோம்.''007''நடைபாதைக் கடைகளுக்குத் தடை போடச் சொன்னப்பவும் இதே சிக்கல். பிராட்வே பகுதிகள்ல மட்டும் கிட்டத்தட்ட 5,000 வியாபாரிகள். ரோட்ல நடக்குறப்பல்லாம் அத்தனை பேரும் என்னை திட்டித் தீர்த்தாங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கள்லாம் ஏதோ அவங்களுக்கு நல்லது செய்யறதா நினைச்சு, அவங் களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்தாங்க. எந்தத் தயக்கத்துக்கும் இடம் கொடுக்காம அவங்க எல்லா ரையும் கடைகளைக் காலி பண்ணவெச்சேன். காலி பண்ணவங்களுக்கு மாற்று இடத்தை அரசாங்கமே தரணும்னு சொல்லி, அதுக்கும் போராடினேன். கொஞ்சங்கொஞ்சமா எல்லாருக்கும் இடம் கொடுத் துச்சு அரசாங்கம். அதுவரை தண்டல் காசா தினமும் 100 ரூபா கொடுத்து, பயந்து பயந்து வியாபாரம் செஞ்சுட்டு இருந்தவங்க, அதுக்குப் பிறகு அரசாங்க இடத்துக்கு 40 ரூபாய் வாடகை குடுத்து மரியாதையா, கம்பீரமா வியாபாரம் செய்ய ஆரம்பிச்சாங்க.என்னைத் திட்டின எல்லாரும் ஒரு நாள் என்னை வந்து பார்த்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவிச் சாங்க. அதை விடுங்க... அதிகாரிகளும் பொதுமக்க ளும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, இந்த அரசியல்வாதிங்கதான் வழிக்கு வர மாட்டேங்குறாங்க. பரவாயில்ல பார்த்துக்கலாம்... நான் போறதுக்குள்ள அவங்களை ஒரு வழி ஆக்கிடுவேன்ல! என்ன பெருசா வயசாயிடுச்சு... ஒன்லி 76தானே நன்றி விகடன்

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive