தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மும்பை சம்பவத்துக்கு பாக்., பின்னணிக்கு ஆதாரம் சிக்கியது! * உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., தொடர்பு அம்பலம்

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான் இது என்பதும் அம்பலமாகியுள்ளது.கடந்த புதனன்று, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 183 பேர் பலியாகினர். 60 மணி நேரம் வரை சண்டையிட்டு, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரே ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையில் தினமும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.


பயிற்சி அளித்தவர்கள் யார்: இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான், இந்த பயங்கர தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.இதே போல், அமெரிக்க அரசும் மேலும் பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. அவை விரைவில் இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


அமெரிக்க படைகளின் தலைமை தளபதி மைக் முல்லன் நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள், தங்களிடம் நிறையவே உள்ளன என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாக்., ராணுவ அதிகாரிகள், "மும்பை தாக்குதலில் ராணுவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் வேலையாக இருக்கலாம்' என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளனர்.மும்பை தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும், மற்றவகை உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.


மேலும், லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு தற்போது, ஜமாயத் -உத் -தவா என்ற பெயரில் செயல்படுகிறது. அந்த அமைப்புக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதால், அதன் தலைவரான ஹபீஸ் முகமது சயீதுவை கைது செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.


இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.


அமெரிக்கா நம்பிக்கை : இதற்கிடையில், அதிபர் புஷ்ஷின் உத்தரவின் பேரில், இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ், நேற்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடர்வது என, பாகிஸ்தான் உறுதி மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனால், மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் நிச்சயம் விசாரணை நடத்தும். அதைச் செய்யும் என அமெரிக்கா நம்புகிறது.மும்பை தாக்குதல் விவகாரத்தை கையாள்வதில் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பு குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் நான் பேசினேன். மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை ஒரு களமாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.


பயங்கரவாத விஷயத்தில், பாகிஸ்தான் தன் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்கும்.மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பாக, இந்தியாவுக்கு எந்த விதமான உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. மும்பையில் நடந்தது போன்ற தாக்குதலை, இதற்கு முன் இந்த துணைக் கண்டம் கண்டதில்லை.இவ்வாறு காண்டலிசா ரைஸ் கூறினார்.அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களுக்கு "விசா ' தரும் நடைமுறையில் புதிய விண்ணப்பம், மற்றும் அணுகுமுறைகளை மத்திய அரசு நேற்று மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இதனால், "விசா' பெறுவது இனி சுலபமாக இருக்காது.

நடிகர் பிரபுதேவா மகன் விஷால் மரணம்

நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் மகன் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 13.



காதலன், இந்து, லவ்பேர்ட்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ள பிரபுதேவா, லதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.



பிரபுதேவா-லதா தம்பதியினருக்கு விஷால், ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள் உள்ளனர்.



இதில் விஷாலுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தார்.



சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த விஷால், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவா வீட்டில், விஷாலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஜய், பிரகாஷ் ராஜ், ஆனந்த்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ராதாரவி, நடிகை குஷ்பு மற்றும் திரையுலகை சேர்ந்த நட்சத்திரஙகள் விஷாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



மறைந்த விஷாலின் உடல் இன்று மாலை ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு., பெசன்ட் நகரில் அடக்கம் செய்யப்படுகிறது

மும்பை பற்றி எரிந்தபோது பார்ட்டிக்குப் போன ராகுல் காந்தி

மும்பையில் தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் போராடிக் கொண்டிருந்தபோது, நாடே பதைபதைப்புடன் அந்தப் போராட்டத்தை டிவிகள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லி புறநகர்ப் பகுதியில் தனது நண்பர் கொடுத்த ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார் ராகுல் காந்தி.

நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா.

சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆகப் போகிறது. இதையொட்டி, அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிந் சகோதரி லீனா முசாபிர் கொடுத்த விருந்துதான் இது.
டெல்லி அருகே உள்ள ராதே மோகன் செளக் என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான பண்ணை இல்லத்தில் இந்த பார்ட்டி நடந்தது. கிட்டத்தட்ட 800 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். மிக மிக ஆடம்பரமாக பார்ட்டி நடந்துள்ளது.

மும்பையில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் கமாண்டோக்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தி ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தி பார்ட்டிக்குப் போனது குறித்து அஜய் பால் என்பவர் இப்படிக் கூறுகிறார் - மும்பை முழுவதும் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகளில் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விட்டனர். மற்ற இடங்களில் ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன

ஆனால் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டு சந்தோஷமாக இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் எதிர்காலத் தலைவர்கள் மீதான எங்களது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்கிறார் பால். பால், ஓபராய் ஹோட்டலில் சிக்கி, ஹோட்டல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டு உயிர் மீண்ட அப்பாவிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

நடக்காதென்பார் நடந்துவிடும்!


சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அது நடந்திருக்கிறது. நாளிதழ்களில் எல்லாம் வெளியாகியுள்ள இணைந்த குடும்பத்தினருடன் கலைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்துக்குப் பின் ஒரு நீண்ட கதையே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் செல்வி அனுமதிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, அழகிரி குடும்பத்துக்கும் செல்வி குடும்பத்துக்கும் முற்றிலுமாகப் பேச்சுவார்த்தை கிடையாதாம். ஆனால், அண்மையில் உடல்நலக் குறைவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைஞரின் மகள் செல்வியும் அழகிரியின் மகள் கயல்விழியும்தான் உடனிருந்து கவனித்துக் கொண்டனராம். அப்போது கயல்விழியின் மகன் இதயாதான் செல்வியுடன் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்தினாராம். தொடக்கத்தில் இருவர் மட்டுமே பேசத்தொடங்கினாலும் பின்னர் விவரங்களை இருதரப்புக்குமே பாஸ் செய்திருக்கின்றனர். முதலில் தயங்கினாலும் பின்னர் அவர்களும் காது கொடுத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, கலைஞர் எழுதிய கடிதத்துக்கு கலாநிதி மாறன் பதிலெழுதிய இரண்டு நாட்களில் கலைஞருடன் ஸ்டாலின் - அழகிரி, கலாநிதி - தயாநிதி சகோதரர்கள் சந்தித்துப் பேசியதாகவும்கூட ஒரு தகவல். இந்தச் சந்திப்பின்போது, மனவருத்தத்தில் ஏதோ கடுமையாகச் சொல்லிவிட்டு எழுந்துசென்றுவிட்டாராம் கலாநிதி மாறன். தொடர்ந்த சமாதான முயற்சிகளின் பலனாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியளவில் சென்னையிலுள்ள செல்வியின் மகள் எழிலரசியின் வீட்டில் ஸ்டாலின், அழகிரி, ஸ்டாலின் மனைவி துர்கா, அழகிரியின் மகள் கயல்விழி, செல்வி - செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினராம். சிறிதுநேரம் கழித்து கலா - தயா சகோதரர்கள் வந்து சேர்ந்துகொண்டனராம்.

கரம் பற்றி...

இந்தச் சந்திப்பின்போது, `மாமா, நாங்கள் சின்னவர்கள்தானே' என்று அழகிரியின் கைகளைப் பற்றிக் கொண்டு கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டார்களாம். `நம் குடும்பம் மிகவும் முக்கியம். கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலில் வலு இருந்தால்தான் வெல்ல முடியும். இல்லாவிட்டால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்களோ ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள்...' என்று குறிப்பிட்டாராம் அழகிரி. `உடனே குறைத்தால் நன்றாக இருக்காது. படிப்படியாகக் குறைத்துவிடுகிறோம்' என்றனராம் சகோதரர்கள். `சீக்கிரமாக' என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினாராம் அழகிரி. இதையடுத்து, `தந்தையிடமும் பேசிவிடுவோம்' என்று ஸ்டாலின் தெரிவித்தாராம்.

தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலையில் கோபாலபுரத்தில் கலைஞரை மகன்களும் பேரன்களும் சந்தித்து விரிவாகப் பேசி, பல விஷயங்களை முடிவு செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதியம் எழிலரசி - டாக்டர் ஜோதிமணி தம்பதிக்கு கயல்விழி வீட்டில் விருந்தும் நடைபெற்றதாம். இந்த விருந்தில் வேறு யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என உறுதியாகத் தெரிய வரவில்லை.

பிற்பகலில் கலாநிதி, தயாநிதி இருவரும் செல்வி வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே அழகிரியும் அங்கே வந்து இருந்திருக்கிறார். பின்னர், அனைவருமாக மாலை 4.40 மணிக்கு கோபாலபுரம் சென்றனர். கீழே தயாளு அம்மாளுடன் பத்து நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர், மாடியில் இருந்த கலைஞரைச் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினராம். இந்தச் சந்திப்பில் கலைஞரின் காலில் விழுந்து கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதற்குப் பிறகு கலைஞர் இருந்த உற்சாக மனநிலை, தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்ததுதானே!

முதலில் கலைஞர், அனைவருடனும் கோபாலபுரத்தில்தான் நிருபர்களைச் சந்திப்பதாக இருந்தது. இடப்பற்றாக்குறை காரணமாகக் கூறப்பட, அறிவாலயத்தில் பிரஸ்மீட் என்று தெரிவிக்க, செய்தியாளர்கள் அங்கே சென்றபோது, கலைஞர் மட்டுமே பேட்டியளிக்க வந்தார். மாமாக்களும் மருமகன்களும் விரைவில் வருவார்கள் என்று கூறப்பட்டபோதிலும் வரவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் ஒரே காரில் சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். கோபாலபுரம் சந்திப்பின்போது, டெல்லி செல்வதற்காகப் புறப்பட்டு விமான நிலையம் சென்றுவிட்டிருந்த கனிமொழிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாராம் கனிமொழி. தேநீருக்குப் பின்னர் நால்வரும் போட் கிளப்பிலுள்ள தயாநிதியின் வீட்டுக்கும் கலாநிதியின் வீட்டுக்கும் சென்றுவிட்டு கோபாலபுரத்துக்கே திரும்பியிருக்கின்றனர்.

ஆளுக்கொரு பதிலைச் சொல்லி அநாவசியமாகக் குழப்பிவிடக் கூடாதே என்றுதான் அனைவரையும் அனுப்பிவிட்டு கலைஞர் மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தாராம். பதில்களையும்கூட மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாலியாகவுமே கூறி முடித்துக் கொண்டார் அவர்.

பின்னணி!

கலா-தயா சகோதரர்கள் நடத்தும் நாளிதழ்கள் மிக அதிகமாக விற்பதாகக் கூறப்பட்டபோதிலும் இழப்பும் அதிகமாம். இதேபோல, மாநிலத்தில் பரவலாக எஸ்.சி.வி. இணைப்புகளுக்குச் சரிவரக் கட்டணங்களையும் வசூலிக்க முடிவதில்லையாம். எப்படியிருந்தாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் வரத்தானே போகிறது என்று நினைக்கிறார்களாம் கேபிள்காரர்கள். இந்த வகையில் சில நூறு கோடிகள் பாக்கியிருக்கிறதாம். டி.டி.எச். சேவைக்காகவும் சில நூறு கோடிகள் முடக்கப்பட்டு வருமானமின்றிக் கிடக்கிறதாம். ஏதாவது ஒரே செலவாகச் செய்துவிட்டால், தொழிலில் பாதிப்பின்றி இடைவிடாமல் வருவாய் தொடர்ந்துகொண்டிருக்கும் என்று நினைத்தார்களாம் சகோதரர்கள்.

உடன்பாட்டின் அம்சங்கள்!

சன் டி.வி. பங்கில் மீண்டும் ஒரு தொகையைத் தர சகோதரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனராம்.

- கலைஞர் டி.வி.யை இனி தமிழரசு பார்த்துக்கொள்வாராம்.

- அழகிரியின் மகன் அல்லது மகளுக்குக் கட்சியில் உயர் பதவி வழங்கப்படுமாம்.

- குடும்பம் ஒன்றாக இருந்தால் போதும். தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஸ்டாலின். இருந்தாலும் வாசன் துணை முதல்வர் ஆவார் என்கிற செய்தியை முறியடிக்கும் விதமாக விரைவில் ஸ்டாலின் துணை முதல்வராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

- மதுரையில் தொடங்கப்பட்ட ராயல் கேபிள் விஷன் முடிவு பெறுமாம்.

நாளைய விளைவுகள்!

கலைஞர் டி.வி.யில் உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் விரைவில் கழற்றப்படுவாராம். மேலும் பலர் இந்தத் தொல்லைக்கு ஆட்படலாமாம்.

- நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எதுவும் புரியாமல், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என இருதரப்பிலும் பலர் ஆடிப்போயிருக்கிறார்களாம். மதுரையில் தயாநிதி மாறனுக்கு வேண்டியவரான ஒருவருக்கு மாரடைப்பு வராததுதான் மிச்சமாம்.

- சன் டி.வி., கலைஞர் டி.வி. போட்டியால் திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமைக்கு ஏராளமான விலை கிடைத்து வந்தது. இனி அது கிடைக்காதே என்பது திரைத்துறையினர் கவலை.

இனி சன் டி.வி.யில் ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட லைவ் கவரேஜ் படிப்படியாகக் குறைக்கப்படுமாம். பின்னர், ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தப்படலாம் என்பதுதான் தகவல்.

சில கேள்விகள்!

சகோதரர்களின் கோபத்துக்குள்ளான அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் என்ன செய்வார்கள்? எவ்வாறு சகோதரர்களை எதிர்கொள்வார்கள்?

- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றிய செய்திகள் இனியும் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகுமா?

- ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் தயாநிதி மாறனுக்கு வழங்கப்படுமா?

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive