""காங்கிரசின் கூட்டணி அரசுக்கு பா.ம.க., ஆதரவு அளித்துள்ளதால், ராமதாசை நேரில் சந்தித்து நன்றி தெரிவித் தேன்,'' என்று தங்கபாலுவும், ""தமிழகத் தில் யாருடனும் கூட்டணி இல்லை; மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி,'' என ராமதாசும் தெரிவித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவரது தி.நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில், நேற்று மதியம் 1.30 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார்.
இருவரின் சந்திப்பு குறித்து சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சிகளின் தலைவர்களை மரியா தை நிமித்தமாக சந்தித்து வருகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் பெற்ற பா.ம.க., நிறுவனர், தொலைபேசியில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து, ராமதாசை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன். வருகிற 22ம் தேதி நடக்கும் மத்திய அர சின் நம்பிக்கை ஓட் டெடுப்பில், காங்கிரசின் கூட்டணி அரசுக்கு பா.ம.க., ஆதரவு அளித்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் ராமதாஸ் கூறியதாவது
தங்கபாலு என்னை மரியாதை நிமித் தமாக சந்தித்தார். அரசியல் எதுவும் பேசவில்லை. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அப்போது, கூட்டணி குறித்து பார்க்கலாம். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது, "இது ஆள் தூக்கி சட்டம் என்றும், அரசியல் ரீதியாக தவறாக பயன்படுத்தும் சட்டமாக இருக்கும்' என்றும் முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கூறியுள்ளார். அதே சட்டத்தில் குரு கைது செய்யப்பட்டுள்ளார். குரு எனது பிள்ளை மாதிரி; துடிப்பு மிக்க இளைஞர். அவரது கைது சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். அவரது கைது நடவடிக்கையை கூட்டணிக் கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட் சிகளும் கண்டிக்கவில்லை. தமிழகத் தில் நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
நன்றி தினமலர்
