ராமநாதபுரம் அருகே பள்ளவச்சேரி கிராமத்தினர், விவசாயக் கூலி வேலைக்கு செல்ல முடியாததால், எலிகளை வேட்டையாடி சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், உழவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விதைநெல் அழுகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோர் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.அதேபோல், உப்பள பணியாளர்களும் மழையினால் சோர்வடைந்துள்ளனர்.
வயல்களில் திரியும் எலிகளை : இவர்களில் பலர், அன்றாட சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே, பள்ளவச்சேரி கிராமத்தில், 500 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலைக்கு செல்பவர்கள். மழையால் வேலை இழந்துள்ள இவர்கள், வயல்களில் திரியும் எலிகளை வேட்டையாடி சாப்பிடத் துவங்கியுள்ளனர்.
பகிர்ந்து உண்டேன்' : கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) கூறுகையில், "வேலை இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அரிசி வாங்கக்கூட காசு இல்லை. எனவே, வயலில் எலிகளை பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம்' என்றார்.பள்ளி மாணவன் முருகன் கூறுகையில், "மழை நேரம் என்பதால் வயல்வெளிகளில் அதிகமான எலிகள் நடமாடுகின்றன.
ஒரு நாள் வேட்டையாடியதில் 17 எலிகள் எனக்கு கிடைத்தன; அதை, எனது நண்பர்களோடு பகிர்ந்து உண்டேன்' என்றார்.
எலி கறி சாப்பிடும் விவசாய கூலிகள் : வேலை கிடைக்காததால் பரிதாபம்
நிலவில் முத்திரை பதிக்கிறது மூவர்ணக்கொடி
சந்திராயன்-1 செயற்கைக்கோளில் உள்ள "மூன் இம்பாக்ட் புரோப்' கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் நிலவில் மோதி இறங்கவுள்ளது. இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட இக்கருவி, நிலவை அடைந்த ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத்தரவுள்ளது.ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட் மூலம் சந்திராயன்-1 செயற்கைக்கோள், வரும் 22ம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், சந்திராயன்-1 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையை அடையும். அங்கிருந்து படிப்படியாக, மூன்று லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவின் சுற்றுப்பாதையை அடையவுள்ளது.
3டி புகைப்படம் எடுத்தல் : நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திராயன்-1 செயற்கைக்கோள் நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் நிலவை இரண்டு ஆண்டுகள் சுற்றிவந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சந்திராயன்-1 செயற்கைக்கோளில் மொத்தம் 11 கருவிகள் உள்ளன.இக்கருவிகள் நிலவில் தாதுக்கள், வாயுக்கள், தண்ணீர், பனிக்கட்டி இருப்பது குறித்த ஆய்வு மற்றும் நிலவை 3டி புகைப்படம் எடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றன. சந்திராயன்-1 செயற்கைக்கோளில், இந்தியாவுக்குச் சொந்தமான ஐந்து கருவிகள் உள்ளன.இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட மூன் இம்பாக்ட் புரோப் (எம்.ஐ.பி.,) கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் (9ம் தேதி என எதிர்பார்க்கப்படுகிறது)
அமெரிக்கா, ரஷ்யா : சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பிரிக்கப்படுகிறது. எம்.ஐ.பி., கருவியில் உள்ள ராக்கெட்டால் இக்கருவியை நிலவை நோக்கி செலுத்தப்பட்டு, நிலவில் மோதி இறங்கவுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் நிலவில் மனிதன் பாதுகாப்பாக இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை, "இஸ்ரோ' சோதனை செய்யவுள்ளது. இதன்மூலம் இந்திய மூவர்ணக்கொடி, நிலவில் இடம்பெறவுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பான ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா ஆகிய ஐந்து நாடுகள், இதற்கு முன் நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா ஆறாவது நாடாக இணையவுள்ளது.
சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்களைப் பெற பெங்களூரிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பைலாலு கிராமத்தில், "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையம் 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பெறப்படும் தகவல்கள் பல்வேறு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.சந்திராயன்-1 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. ராக்கெட் கட்டுமான மையத்திலிருந்து, செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட ராக்கெட் நேற்று இரண்டாவது ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
