தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ரஜினி கேட்ட மன்னிப்பு

இவரு மாற்றி பேசுவதில் அரசியல்வாதியையேமிஞ்சிட்டாரப்பா ! தமிழனாலே இளிச்சவாயனா நெனைக்கிறாங்கப்பா!

ஒகேனக்கல் பிரச்னை குறித்து, சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் "தண்ணீரைக் கூட பிரச்னையாக்குபவர்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசிய ரஜினிகாந்த், "குசேலன்' திரைப்படம் வெளியிடுவதற்காக கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிற தண்ணியில கூட பிரச்னை கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசினார். ரஜினியின் இந்த பேச்சு கன்னட அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "கர்நாடகாவில் ரஜினி சினிமாக்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என எச்சரிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அமுங்கியிருந்த நிலையில், ரஜினி நடித்த "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. கர்நாடகாவில் தனது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதை நான் அறிவேன். எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்; இனிமேல் இதுபோல் பேசமாட்டேன். எனது திரைப்படத்தை தமிழ், கன்னட ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர். எனவே, "குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, இன்று "குசேலன்' திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் அனுமதித்தது.
இதை அறிந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா பிலிம் சேம்பர் முன் கூடி, "ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை "குசேலன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று கோஷமிட்டனர். "ரஜினி, கன்னடர்களை அவமரியாதையாக பேசியுள்ளார். எனவே, அவர் நேரடியாக மக்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என "வாட்டாள்' நாகராஜ் கூறினார்
இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ""ரஜினி ஏற்கனவே "டிவி' சேனல்கள் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது திரைப்படத்தை இன்று வெளியிட அனுமதித்துள்ளோம்,'' என்றார்.ஆனாலும், கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம் : நடிகர் ரஜினி நடித்த "குசேலன்' படத்தை திரையிட அனுமதித்ததைக் கண்டித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் முன் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உருவப் படம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியபோது, தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது, கன்னட வெறியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரத்தில் இருந்த கன்னட வெறியர்கள், ரஜினியின் குசேலன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் 18 திரையரங்குகளில் குசேலன் படம் வெளியிட அனுமதி தரப்பட்டது. அதையடுத்து கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி ஆகியோர் தலைமையில் நேற்று கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது ரஜினி உருவப் படத்தை தரையில் போட்டு அதைச் சுற்றி செருப்புகள் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அப்படத்தை எடுத்து வாட்டாள் நாகராஜ் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குசேலன் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive