சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மையம் வேலை நாட்களில் சரிவர திறக்கப்படாததால், சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் மாநகராட்சியை அணுகியே சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருந்தது.அதை தவிர்க்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்க சிறப்பு மையம் மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.
மேயர் ரேகா பிரியதர்ஷினி, இம்மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார்.மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1990ம் ஆண்டுக்கு பின் பிறந்த மற்றும் இறந்தவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்முகாமில் ஆயிரக்கணக்கானோர் சான்றிதழை பெற்றனர்.இந்த முகாம் நிறைவுக்கு பின், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் சிலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரிவர திறப்பதில்லை, சான்றிதழ் கேட்டால் நாளை வாருங்கள் என இழுத்தடிப்பு செய்து அலைக்கழிக்கின்றனர்.அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையம் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர், சான்று பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்று வந்தனர். இறப்பு சான்றிதழ் பெறவும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் காத்திருந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,வை தொடர்பு கொண்டு கேட்டனர். அவர், "மாநகராட்சி அதிகாரிகள் வருவர். அங்கு காத்திருங்கள்' என கூறிவிட்டார்.இது குறித்து சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கூறுகையில், ""கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மாநகராட்சியில் ரூ.12 கட்டணம் செலுத்தி ரசீது வாங்கி வந்தேன்.
அரசு மருத்துவமனையில் செயல்படும் மையம் காலை முதல் திறக்காமல் மூடப்பட்டு கிடக்கிறது. வேலையை விட்டு இங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். இதேபோறு பலரும் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமியிடம் கேட்டபோது, ""அரசு மருத்துவமனை பிறப்பு, இறப்பு சான்றிதழ் மையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சான்றிதழ் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளரை அனுப்பி வைத்துள்ளேன். சான்று பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.
பிறப்பு, இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு அரசு மருத்துவமனையில் மக்கள் அவத
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment