தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பிறப்பு, இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு அரசு மருத்துவமனையில் மக்கள் அவத

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மையம் வேலை நாட்களில் சரிவர திறக்கப்படாததால், சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் மாநகராட்சியை அணுகியே சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருந்தது.அதை தவிர்க்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்க சிறப்பு மையம் மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.


மேயர் ரேகா பிரியதர்ஷினி, இம்மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார்.மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1990ம் ஆண்டுக்கு பின் பிறந்த மற்றும் இறந்தவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்முகாமில் ஆயிரக்கணக்கானோர் சான்றிதழை பெற்றனர்.இந்த முகாம் நிறைவுக்கு பின், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் சிலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரிவர திறப்பதில்லை, சான்றிதழ் கேட்டால் நாளை வாருங்கள் என இழுத்தடிப்பு செய்து அலைக்கழிக்கின்றனர்.அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையம் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை.


அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர், சான்று பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்று வந்தனர். இறப்பு சான்றிதழ் பெறவும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் காத்திருந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,வை தொடர்பு கொண்டு கேட்டனர். அவர், "மாநகராட்சி அதிகாரிகள் வருவர். அங்கு காத்திருங்கள்' என கூறிவிட்டார்.இது குறித்து சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கூறுகையில், ""கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மாநகராட்சியில் ரூ.12 கட்டணம் செலுத்தி ரசீது வாங்கி வந்தேன்.


அரசு மருத்துவமனையில் செயல்படும் மையம் காலை முதல் திறக்காமல் மூடப்பட்டு கிடக்கிறது. வேலையை விட்டு இங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். இதேபோறு பலரும் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமியிடம் கேட்டபோது, ""அரசு மருத்துவமனை பிறப்பு, இறப்பு சான்றிதழ் மையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சான்றிதழ் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளரை அனுப்பி வைத்துள்ளேன். சான்று பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive