இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையாக இருந்துவருவதாகவும், இதனால், அங்குள்ள மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாக பெரும் தியாகங்கள் செய்துவருவதாகவும், இந்த போராட்டத்திற்கு தமிழக மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவு மற்றும் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்து வருவது, துன்பப்பட்டு வரும் தமது மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளுக்கு விடுதலைப்புலிகள் நன்றி அறிவிப்பு
கங்குலி ஓய்வு அறிவிப்பு : ரிக்கி பாண்டிங் கருத்து
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து சில மூத்த இந்திய வீரர்களும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த செவ்வாய் கிழமை அன்று கங்குலி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரின் கேப்டன் அனில் கும்ளேவும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாண்டிங், கங்குலியின் அறிவிப்பு, இந்திய மூத்த வீரர்களில் மேலும் சிலரையும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும், இது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ள தேர்வுக்குழுவினரின் மோசமான செயல்பாடுகளே, தனது அறிவிப்புக்குக் காரணம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
மின்பற்றாக்குறையைப் போக்க 2 புதிய மின்திட்டங்கள்-
தமிழகத்தில் மின்பற்றாக்குறையைப் போக்குவதற்காக, 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு, நிரந்தரமாக மற்றும் நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில், 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய மின் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைந்து, 4 ஆயிரத்து 909 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திக்கான இரண்டு மின் திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இதில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பருவமழை பெய்யாததால், மின் உற்பத்தி பாதிப்பு-மச்சேந்திரநாதன் பேட்டி
தமிழகத்தில் பருவமழை பெய்யாததும், காற்று இல்லாததுமே மின்வெட்டுக்கு காரணம் என்று தமிழக மின்வாரியக் கழகத் தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைவிட, தமிழகத்தில் குறைந்த அளவே மழை பெய்ததாகவும், அதனாலேயே, மின் உற்பத்தி குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை, அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தைவிட கூடுதல் நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்த அவர், மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று முதல், மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ்பெற வேண்டும்-ஜெயலலிதா அறிவிப்பு
இலங்கை தமிழர்கள் பிரச்னையில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அளித்து வரும் ராணுவ உதவியை தடுப்பதற்கு தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். வரும் 14 ஆம் தேதி, முதலமைச்சர் கருணாநிதி கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம், ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், எனவே, இதில் அ.தி.மு.க. பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ளாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச் சந்தை இன்று தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்து, 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் பத்து சதவீதம் குறைந்து, அதாவது, 1088 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியடைந்தது. பின்னர், பங்குச் சந்தை சரிவில் இருந்து மீண்டது. நிதி நிலைமையை சீராக்க, ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை 1.5 சதவீதமாக குறைத்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பங்குச் சந்தையின் சரிவால், தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 304 ரூபாய் அதிகரித்தது. இதனிடையே, நாட்டின் பணவீக்கம், கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில், இது 11.99 சதவீதமாக இருந்தது
குஷ்புவும் அன்புமணியும் ஓரணியில்
அன்புள்ள மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு,
வணக்கம்.
சுய இனப் பாலுறவு பற்றித்தான் இந்தக் கடிதம் எழுதத் தொடங்கினேன். ஆனால், அதற்கு முன்னால் சில விஷயங்கள்.
முதலிலேயே தெளிவாக அறிவித்துவிடுகிறேன். சிகரெட்டுக்கு எதிராக நீங்களும், மதுவுக்கு எதிராக உங்கள் தந்தையும் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன். ஆதரிக்கிறேன். உங்கள் இருவருக்கும் அதற்காக என் முழு ஆதரவு உண்டு. அவற்றுக்காக ஆளுக்கொரு பூச்செண்டும் உண்டு.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் மது வகைகளும் எப்படியெல்லாம் நம் சமூகத்துக்குத் தீங்கானவை என்பது பற்றிய விவாதம் அவசியமற்றது. கொலையையும் தற்கொலையையும் குற்றங்களாக சட்டப்படி அறிவித்துள்ள சமூகத்தில், சிகரெட் புகைப்பவர்_ புகைக்காதவரைக் கொலை செய்பவராகவும், மது அருந்துபவர்_ தற்கொலை செய்து கொள்பவராகவும் கருதப் போதுமான நியாயங்கள் உள்ளன.
முதல் கட்டமாகப் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இது போதாது. சிகரெட் தயாரிப்பு தடை செய்யப்படவேண்டும். இது உங்கள் கையில் இல்லை என்றும் ஐந்து அமைச்சகங்கள் தொடர்புள்ள பிரச்னை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.
ஏராளமான புகையிலை விவசாயிகளின் வேலை வாய்ப்புகளும் பீடி,சிகரெட் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்ற கவலையினால், தயாரிப்பும் விற்பனையும் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. இந்த சமாதானம் நியாய மானது அல்ல. அவர்களுக்கான மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.
புகையிலைக்கு நாம் சூட்டியிருக்கிற பெயரே தவறானது. அதைப் புரத இலை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உடலில் சுரக்கும் புரதங்களையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புரதங்களையும் தயாரிக்க மிகச் சிறந்த தாவரங்களில் அது ஒன்று. ரத்தம் உறைவதைக் கரைக்கவும், புற்று நோயைத் தணிக்கவும் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் புகையிலையில் உள்ளன. பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய எத்தனால் தயாரிக்கவும் புகையிலை பயன்படும். இந்தத் தயாரிப்பில், சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு நிகரான பயோமாஸ் உள்ள செடியாக புகையிலை கருதப்படுகிறது.
உலகமெங்கும் சிகரெட் கம்பெனிகளின் பண பலம்தான் புகையிலையை மாற்றுப் பயன்பாடுகளுக்குத் திருப்ப விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அதே போலத்தான் மது தயாரிப்பும். மின்சாரம் தயாரிக்கவும் வண்டிகளுக்கான எரிபொருள் தயாரிக்கவும் மொலாசஸைப் பயன்படுத்தாமல் போதை திரவங்களைத் தயாரிப்பதில் திருப்பிவிட்டிருப்பது மது உற்பத்தியாளர்களின் பண பலம்தான்.
ஜனநாயக தேர்தல் அரசியல் எப்போதும் பண பலத்துக்கு அடிபணிந்துதான் செயல்பட்டாகவேண்டியிருந்தாலும், அதையும் மிஞ்சக்கூடியது மக்கள் பலம். சிகரெட்டாலும் மதுவாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒருத்தரேனும் இருக்கிறார்கள். அவர்களால் அவரவர் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் கருத்தை உங்களுக்கு சார்பாகத் திரட்டித்தான் நீங்கள் சிகரெட், மது கம்பெனிகளை எதிர்கொள்ளமுடியும். சிகரெட், மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதையே உங்கள் கட்சியின் கொள்கையாகச் சொல்லி, வரும் தேர்தலில் நீங்கள் மக்களைச் சந்திக்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் போட்டியிடும் தொகுதியில் இதையே பிரச்னையாக முன்வைத்து நீங்கள் முன்னுதாரணம் படைக்கலாம்.
அண்மையில் நீங்கள் மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக மிரட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது. அப்படி ஏதாவது செய்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.
உங்கள் அமைச்சகத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை, உள்துறை அமைச்சகம் அதே மன்றத்தில் தெரிவித்தது. அது மட்டுமல்ல. உங்கள் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது போன்ற ஒரு கேவலம் இதற்கு முன்பு மத்திய அரசில் நிகழ்ந்தது இல்லை. ஒரு அமைச்சரின் கருத்தை, அவருடைய அமைச்சகம் நீதி மன்றம் முன்பு தெரிவித்த கருத்தை, நீதிபதி ஏற்கக்கூடாது என்று மத்திய அரசின் வக்கீலே நீதிபதியிடம் சொல்லுவது என்பது விசித்திரமானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு தவறான முன்னுதாரணமும் கூட.
இதில் வருத்தத்துக்குரியது என்னவென்றால், உங்கள் கருத்துதான் சரியான கருத்து. அதைத்தான் உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது என்று நீதிபதியிடம் சொல்லியிருக்கிறது.
ஓரினப் பாலுறவு எனப்படும் ஹோமோசெக்ஷுவாலிட்டியை தண்டனைக்குரிய குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவு வைத்திருக்கிறது. விக்டோரியா மகாராணி காலத்தில் 1861-ல் போட்ட இந்த சட்டத்தை இன்றைய பிரிட்டனே கைவிட்டுவிட்டது. தன் பால் உறவு என்பதை ஒரு நோயாக ஒரு காலத்தில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமும் அந்தக் கருத்தை நீக்கிவிட்டது.
இந்தியாவும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்ற வருடம் பொருளாதார அறிஞர் அமர்த்யாசென், கேப்டன் லட்சுமி, கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய், குல்தீப் நய்யார், ராஜ்தீப் சர்தேசாய், அபர்ணா சென் முதலிய 250 பிரமுகர்கள் உங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். பாவம், அவருக்கு புஷ் சொல்வது மட்டும்தானே காதில் விழும். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.
நீங்கள் இந்தச் சட்டத்தைக் கைவிட இன்னொரு சரியான காரணம் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் ஓரின உறவாளர்களில் 80 சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இந்த சட்டத்தின்படி அவர்களுக்கு சிகிச்சை தரும் டாக்டர் முதல் சமூக சேவகர் வரை எல்லாரையும் தண்டிக்கலாம் என்ற அபத்தத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
ஓரின உறவு, தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீக்கினால் தான், அந்த வாழ்க்கைமுறை உள்ளவர்களில் எய்ட்ஸ் தொற்றியவர்கள் பகிரங்கமாக வந்து சிகிச்சை பெற முடியும். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று நீங்கள் சொன்னதைத்தான் கண்டுகொள்ளவேண்டாம் என்று நீதிபதியிடம் மத்திய அரசு வக்கீல் சொல்கிறார். இதைக் கண்டித்து நீங்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டியிருக்க வேண்டாமா?
போகட்டும். அமைச்சரவையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு தருவோரைத் திரட்டிச் சென்று பிரதமரிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட ஓரின உறவாளர்களைக் காப்பாற்றவும் நீங்கள் பேசியதை உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் இருக்கும் கலாசாரக் காவல்காரர்களும் இதுவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
``தமிழ்நாட்டில் ஓரின உறவாளர்களே கிடையாது. அது சிலப்பதிகார மரபுக்கு விரோதமானது. அப்படி சிலர் இருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புமணி குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது. தமிழகத்து ஆண் சிங்கங்களை இழிவுபடுத்துவதாகும்'' என்று கூக்குரல் எழுப்பி, இத்தனை நேரம் உங்கள் மீது மஞ்சக்குப்பம் முதல் களியாக்காவிளை வரை 144 கோர்ட்டுகளில் வழக்குப் போடாமல் அவர்கள் இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !
நடிகை குஷ்பு உங்களைப் போலவே எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க, பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கருத்து சொல்லப் போய்த்தானே அவருக்கு எதிராக உங்கள் கட்சிக்காரர்களும் கலாச்சாரக் காவலர்களும் பொங்கியெழுந்தார்கள்? இன்னும் அந்த வழக்குகள் அப்படியே இருக்கின்றன.
டாக்டர் அன்புமணி அவர்களே, தயவுசெய்து அந்த வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லுங்கள். குஷ்புவிடம் அவர்களை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள். கருத்து ரீதியாக, நீங்களும் குஷ்புவும் ஓரணியில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்சியினர் உணரட்டும்.
ஒரு சமூகத்தில் சிகரெட், மது முதலியவை மட்டுமல்ல, பண்பாடு என்ற பெயரில் பிற்போக்கான மனநிலையில் இருப்பதும் ஒரு போதைதான். எல்லா போதைகளிலிருந்தும் சமூகத்தை மீட்கும் சக்தியும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நீங்கள் செய்யும்போதெல்லாம் என்னைப் போன்றவர்கள் நிச்சயம் உங்களை ஆதரிப்போம்..
இந்த வாரப் பூச்செண்டு
இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்கள் மீது குண்டு வீசி நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்திய அரசைத் தலையிட வைக்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து மக்களையே பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி சொல்லி விட்டதற்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.பூ.
இந்த வாரப் பரிதாபம்
மின்சாரத் தட்டுப் பாட்டால் தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. இதை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை & அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
இந்த வாரக் குட்டு
129 பூச்செண்டுகளுடன் நாங்கள் காத்திருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பெரியார் எழுத்தையும் கருத்தையும் நாட்டுடைமையாக்கத் தவறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு 129 குட்டுகள்.
நன்றி குமுதம்
அமெரிக்கர்,2 ஜப்பானியருக்கு இயற்பியல் நோபல் பரிசு
அணு இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2008-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு 2 ஜப்பானியர், ஒரு அமெரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் யாசிரோ நாம்பு. சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அணு இயற்பியல் சார்ந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத் தொகையான 14 லட்சம் டாலரில் பாதியை இவர் பெறுவார். பரிசுத் தொகையின் அடுத்த பாதியை ஜப்பானின் மகோடா கோபயாஷியும் மஸ்காவா தோஷிஹைடும் பகிர்ந்துகொள்வர்.
பரிசளிப்பு விழா ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும்.
யாசிரோ நாம்பு
இவர் ஜப்பானில் 1921ல் பிறந்தார். ஜப்பானிய வம்சாவளி அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான இவர் உல்ப் பரிசு, திராக் பதக்கம், சகுராய் பரிசு என பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். உபஅணு இயற்பியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காக 2008ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1950ல் ஒசாகா சிட்டி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பணியில் அமர்ந்தார். தற்போது ஓய்வுபெற்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் கெ?2;வ பேராசிரியராக உள்ளார்.
மஸ்காவா
தோஷிஹைடு மஸ்காவா 1940ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்தார். ஐஷி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நகோயா பல்கலைக்கழகத்தில் 1962ல் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 1967ல் பிஎச்டி பட்டம் பெற்றார்.
தற்போது கியாடோ சாங்யோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
கோபயாஷி
ஜப்பானில் உள்ள நகோயா பகுதியில் 1944ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தார் மகோடா கோபயாஷி. இவருக்கு மிகவும் பிடித்தமான துறை உயர் ஆற்றல் இயற்பியல். இவர் படித்தது நகோயா பல்கலைக்கழகம். சகுராய் பரிசு (1985), ஜப்பான் அகாதெமி பரிசு (1985), அசாகி பரிசு (1995) என பல்வேறு பரிசுகளை வென்றவர்.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு விஞ்ஞானியான தோஷிஹைடு மஸ்காவாவும் இவரும் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை வெகுவாக பாராட்டப்படுகிறது. துணைஅணு நுண்பொருள்களின் 3 குடும்பங்கள் இயற்கையில் இருப்பதை கணிக்க உதவும் கண்டுபிடிப்புக்காக இந்த இருவருக்கும் நோபல் பரிசு தரப்படுகிறது.
Labels: செய்திகள்
ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரி புகார்:
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 4- ந் தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும், ஜன நாயக கட்சி சார்பில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமாவும் போட்டி யிடுகிறார்கள்.
தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து இரு வரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
இந்த நிலையில் ஒபாமா மாவும், ஜான் மெக்கேனும் நேரடியாக ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினார்கள். 2- வது முறையாக டெக்னிசி மாகா ணத்தில் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதம் நடந்தது.
அப்போது ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரியாக புகார்களை அள்ளி வீசினார். இவரது புகார்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜான் மெக்கேன் திணறி னார். அமெரிக்க பொருளா தாரத்தை ஜார்ஜ் புஷ் சீரழித்து விட்டார். ஜார்ஜ்புஷ்சின் பொருளாதார கொள்கை கள் தோல்வி அடைந்து விட்டன என்றும் ஒபாமா ஆதாரத்துடன் விளக்கி னார். ஜார்ஜ்புஷ்சின் கொள்கை களை ஆதரிக்கும் ஜான் மெக் கேன் இதற்கு பதில் அளிக்க முடியவில்லை.
இந்த நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்க மக்கள் டெலிவிஷனில் பார்த் தனர்.
இந்த விவாதத்தை அடிப் படையாக வைத்து பொது மக்களிடம் ஒரு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் புத்தி சாலி, திறமையானவர். அவர்தான் அதிபராக வர தகுதி உள்ளவர் என்று பெரும் பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒபாமாவுக்கு 65 சதவிதத்தினரும், மெக் கேனுக்கு 28.4 சதவீதத் தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
Labels: உலக செய்திகள்
தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம்
தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்--ராமதாஸ்
தராக்கிராம் உலகத்தமிழர் செய்தி இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.
நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.
விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.
தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.
தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.
இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.
மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.
உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பொருளாதார நெருக்கடியை கையாள அனைத்து நாடுகளும் முயலவேண்டும்
அனைத்து நாடுகளும் தமது முயற்சிகளை ஒன்றாக ஒருங்குபடுத்தும் நிலையில் மாத்ததிரமே
உலக நிதி நெருக்கடியை சரியாகக் கையயாள முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான டொமினிக் ஸ்டாரொஸ் கான் தெரிவித்துள்ளார்.
உலகம் பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் இருப்பதாகக் கூறிய அவர்,
அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு சர்வததேச நாணய நிதியம் அவசர கடன்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
Labels: உலக செய்திகள்
சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ கைது
சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர்வலம் புறப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.
இதனால் காலையில் இருந்தே இன உணர்வாளர்களும், கட்சியினரும் ஏராளமானோர் திரண்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு.பழ. நெடுமாறன் கூட்டத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. முத்துசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு. வை. கோ இப்பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் துரோகம் இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார். தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கிட கூடாது என்றும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எனது நிலை தொடரும் என்றும், அவர்களது சுதந்திர போராட்டத்தை ம.தி.மு.க தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார். பின் பேரணியாக புறப்பட்டு, மத்திய அரசு அலுவலகம் முன்பாக மறியல் ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது, பொலீஸார் அவரையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது கட்சி தொண்டர்களையும் கைது செய்தனர்.
Labels: நாட்டு நடப்பு
