தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

நாட்டுநடப்பு

"நாம் போற்றி வளர்த்த கலாசாரம் இன்று புதைக்குழிக்குள் போய்விட்டது"
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது உயரிய பண்பாடு இன்று சீர்கெட்டு போய்விட்டது"
நாளேடுகளில் தினம் தினம் வருகின்ற செய்திகள் நாம் வசிப்பது தமிழ் மண் தானா? என ஐயுறச்செய்கின்றன . அத்தனை விதமான செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது நாம் என்று இல்லை உலகில் வசிக்கும் ஒவ்வொரு இனத்திற்க்கும் அவர்களுக்குண்டான மொழி ,உடை ,கலாசாரம் ,ஆகியவை உண்டு இவை தான் அந்த இனத்தின் அடையாளம் இன்று நமது அடையாளம் மறைக்கப்பட்டு மேல்நாட்டுக்கலாச்சாரத்தின் சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாம்
தமிழ் பெண்ணின் அடையாளம் என்ன நெற்றியில் குங்குமம் மானங்காக்க உடலிலே சுற்றி கட்டிய புடவை நாணம் இவை தனே ஆனால் இன்று இவை எங்கே போயிற்று? உடலை மறைத்து மானம் காக்க வேண்டிய ஆடை இன்று உடலை உலகிற்கு காட்டும் பொருளாகவும் தங்களுடைய செல்வ செருக்கை காட்டும் ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது வேதனை தரும் வெட்கச்செய்தியாகி போனது
இதற்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? மேல்நாட்டினர் நம்மை பார்த்து ஆச்சரிய பட்டு போவது நம் கலாசாரத்தின் பெருமை கண்டல்லவா!ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் உரிமை கேட்கும் இப்போதைய பெண்கள் ஆடைகுறைப்பு விசயத்தில் ஆண்களை மிஞ்ஞிவிட்டார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை .எது நாகரிகம் என்று நினைக்கிறார்கள் இன்றைய நகரத்து பெண்கள் ஆடைகுறைப்பு, குடிப்பது, புகைபிடிப்பது போன்றவற்றையா?சில முற்போக்குசிந்தனையாளர்கள் சொல்வார்கள் இன்னும் பழமைவாதி போல பேசிக்கொண்டிருக்கிறான் காலம் மாறி போய்விட்டதென்றுஇன்னும் சிலரோ இன்னும் மேலே போய் இவன் பெண்ணிணத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு என்றும் சொல்வார்கள் ஆண்களுக்குநிகராக பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும் எந்த துறையில் கல்வியிலும், அறிவிலுமே தவிர இது போன்ற தீய செயல்களில்அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் .
கல்வி இல்லா பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் என்பது ஆன்றறோர் வாக்கு
பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை என்பது ஏற்றுக்கொள்ள்க்கூடியேத்தேயாகும் ஆனால் நமது கலாசாரம் சீர்கெட்டு போய்விடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்

நம் பாரம்பரியத்தை காக்க வேண்டியது இம் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும்

கண்டதும் காதல் கருவிலே குழந்தை காவல்துறையிடம் முறையீடு என பல பெண்களின் வாழ்க்கை சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிறதுஇதற்கு யார் காரணம் ? சமுதாயமா? இல்லை பெற்றோரா?
அவசரத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எவ்வள்வு வேகமாக தொடங்க பட்டதோ அவ்வளவு சீக்கிரத்திலேயே முடிந்து விடுகிறது.
காதல் தவறென்று சொல்லவில்லை நான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களில் தான் தவறு நிகழ்கிறது வாழ்க்கை ஒரு முறை தான் எடுக்கும் முடிவு தெளிவானதாக இருக்க வேண்டும்
இன்றைய சூழலில் ஒரு 13 வயது சிறுவன் கூட மது அருந்தும் நிலை தான் இப்பொழுது நம் சமூகத்தில் இருக்கிறது
இதற்கு நாம் வெட்கப்படவேண்டாமா? மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒரு சிலரால் இது நாகரிகத்தின் அடையாளமாக சுட்டிக்காட்டப்படுவது வேதனையளிக்கிறது.


இதனை தடுக்க வேண்டிய அரசே மதுவை ஊக்குவிக்கிறது "படிப்பதற்கு பள்ளி தர வேண்டிய அரசு குடிப்பதற்கு கட்டடம் கட்டிக்கொடுத்துகொண்டிருக்கிற்து"
" நம் கலாச்சாரம் இருக்கும் வரை தான் நம் தமிழினத்தின் அடையாளம் இருக்கும்
நம் தமிழினத்தின் அடையாளம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதுதான் வேதனையான உண்மை"

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive