தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி கம்பம் நகரில் நடந்த 54 ஜோடி இலவசத் திருமண விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க. என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வறுத்தெடுத்துவிட்டார்.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட விஜயகாந்த் குருபெயர்ச்சிக்குப் (டிசம்பர்_6) பின்னால் தன் தீவிர அரசியல் நடவடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதேபோல் கம்பத்தில் நடந்த இலவசத் திருமண விழாவிற்கும் ஜோதிட நம்பிக்கைதான் காரணமாம்.

அதாவது, விஜயகாந்தின் ஜாதகம் சிரம திசையில் இருக்கிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தால் தோஷத் தடைகள் நீங்கும் என்று கேரள பகவதி அம்மன் கோயில் நம்பூதிரி ஒருவர் பரிந்துரைத்தாராம். இதையடுத்துத்தான் இந்தத் திருமண ஏற்பாடுகளாம்.

இதையடுத்து விழா ஏற்பாடுகளைக் கவனிக்க தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி பார்த்தசாரதி சில வாரங்களுக்கு முன்பே கம்பத்தில் முகாமிட்டுவிட்டார். கிழக்குத் திசையில் மேடை என்பதிலிருந்து அதன் வண்ணம் வரை ஜோதிட அடிப்படையிலே அமைக்கப்பட்டதாம். விஜயகாந்தின் 54 வயதையொட்டி 54 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவாகியிருக்கிறது.

விஜயகாந்தும் அவரது மனைவியும் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு விழா மேடை ஏறினர். கேப்டன் தம்பதியர் முல்லைப்பூ மாலை சூடிக்கொண்டு ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். (அதுவும் ஜாதகத்தின் படிதானாம்) விஜயகாந்த் மேடை ஏறுவதற்கு முன்னால் அவரது கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்தார்கள். பிறகு மைக்கைப் பிடித்த விஜயகாந்த் முதல்வர், ஸ்டாலின், ஜெ. என அத்தனைபேரையும் காய்ச்சி எடுத்துவிட்டார்.

"54 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஏழைகளை உருவாக்குவது அரசாங்கம்தான். `புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள்' என்று என் பெயரைச் சொல்லாமல் என்னைச் சாடுகிறார் மு.க. ஸ்டாலின். ஏன் என் பெயரைச் சொல்ல என்ன பயம்? தைரியம் இருந்தால் என் பெயரைச் சொல்லட்டும். நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆசைப்படுகின்றனர்.

நான் மின்சாரத்தைப் பற்றிப் பேசிய பிறகுதான் ஆற்காட்டார் நடவடிக்கை எடுக்கிறார். நான் ராமேஸ்வரம் போன பின்னால்தான்கலெக்டரும், மற்ற அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். இந்த பயத்தை நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. ஆனால் இரண்டு கட்சிக்காரர்களும் கோடிகோடியாக கொள்ளையடித்துவிட்டார்கள். இப்போதிருக்கும் மந்திரிகள் கல்லூரி கட்டுகிறார்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து கல்லூரிகளைக் கட்ட முடியுமா? நான் சேலத்தில் 1200 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தேன். கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் `ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பேன்' என்றார். இப்போது எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்?

எ.வ. வேலு. அவர் ஒரு ஏமாத்துற வேலு. எந்த ரேஷன் கடையில மோசமான அரிசி இருக்கிறது என்று கேட்கிறார். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பாடு என்றார்கள். அது எந்த ஊரில் எந்த ஓட்டலில் கிடைக்கிறது என்றே தெரியவில்லை?'' என்று திருமண விழாவிலும் வறுத்தெடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார் விஜயகாந்த்.

மும்பையில் 14 போலீசார் உட்பட 101 பேர் பலி; தீவிரவாதிகள் பிடியில் இன்னும் 340 பேர்.

மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் ஓட்டல், டிரிடன்ட் ஓட்டல் மற்றும் காமா ஆஸ்பத்திரி உட்பட 10 இடங்களில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி்னர். இந்த தாக்குதலில் 14 போலீசார் உட்பட 101 பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் தாஜ் ஓட்டலில் 40‌ பேரும், டிரிடன்ட் ஓட்டலில் 300 பேரும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.




மும்பை தாக்குதல் வீடியோ
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp

போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 14 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.






6 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.






மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.






உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.






குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.






அமெரிக்கா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் நிலையை கூர்ந்து நோக்கி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடலூரில் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் : 200 கிராமங்கள் மூழ்கின : 16 பேர் பலி

காரைக்காலில் நிஷா புயல் இன்று கரையை கடந்தது. இதனிடையே கடலூரில் பெய்த கனத்த மழையால் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியானார்கள்.






மழை தொடர்பான சம்பவங்களில் தமிழகத்தில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 20ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் வேதாரண் யத்திற்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் சின்னமாக மாறியது. அது படிப்படியாக நகர்ந்து வந்து, நேற்று மதியம் வேதாரண் யம் மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையே 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயலுக்கு, "நிசா' என பெயரிடப் பட்டது.






இந்த "நிசா' புயல், வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தை நேற்று நள்ளிரவு தாக்கியது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில், மாநிலத்தின் உட்புறப் பகுதிகளிலும் மழை கொட்டியது. சென்னையிலும் கனமழை பெய்தது. "நிசா' புயல் தாக்கிய போது, கடலில் 65 முதல் 75 கி.மீ., வேகத்திற்கு பலத்த காற்று வீசியது. வழக்கத்தை விட ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பின. கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. அதிகபட்சமாக ஒரத்தநாடு மற்றும் வேதாரண்யத்தில் 33 செ.மீ., மழை பெய்துள்ளது.






கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப் பட்டு திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டனர். கன மழைக்கு இதுவரை இம்மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; 17 கால்நடைகள் இறந்துள்ளன. மாவட்டத்தில் 34 மையங்களில், 10 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 75 குடிசைகள் சேதமடைந் துள்ளன. கோடியக்கரை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் கோடியக்கரை பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ள நீர் உட்புகுந்தது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரமும் தடை செய்யப்பட்டிருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.






மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட் பட்ட பகுதியில் நேற்று மாலை வரை 2,689.7 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து, சீர்காழி-பூம்புகார், சீர்காழி-காரைக்கால், மயிலாடுதுறை-பொறையார் இடையேயான போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பலத்த காற்றின் காரணமாக, கடலில் நங்கூரமிட்டிருந்த விசைப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. காவிரி, மஞ்சலாறு, அய்யாவு அய்யனாரு, பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்பாலும், உப்பனாறு உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், குளம் ஆகியவை நிரம்பி வழிந்ததாலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களில் குடிசை வீடுகள் இடிந்தும், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும், அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 35 முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மழை காரணமாக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப் பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.






தமிழகத்தில் நேற்று காலை பெய்த மழை அளவு விவரம்: பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரத்தில் 28 செ.மீ., மழை பெய்தது. திருவிடைமருதூர் மற்றும் மயிலாடுதுறையில் 26 செ.மீ., மழை பெய்தது. சீர்காழியில் 23, சேத்தியாதோப்பு மற்றும் கொள்ளிடத்தில் 21, திருத்துறைப்பூண்டியில் 20, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 19, குடவாசல் மற்றும் நன்னிலத்தில் 17, கும்பகோணம், தஞ்சாவூரில் 16, வலங்கைமான், தரங்கம்பாடியில் 15, நீடாமங்கலத்தில் 14, சென்னை விமான நிலையம் 11, செங்கல்பட்டு, பூந்தமல்லி மற்றும் கொரட்டூரில் 7 செ.மீ., மழை பெய்தது.






வேதாரண்யத்தில் 401 மி.மீ., மழை : இன்று காலை 7 மணி நிலவரப்படி நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 401 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, நாகப்பட்டினத்தில் 101 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. நிஷா புயல் காலை 7 மணி முதல், மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில், கடலூர் நோக்கி நகர்ந்து வந்தன. இதனைத்தொடர்ந்து நிஷா புயல் காரைக்காலில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் காரைக்கால் பகுதியில் பலத்த காற்று வீசியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.






இதனிடை‌யே கடலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர். கனத்த மழை காரணமாக கடலூர் திருமாணி கோயில் கிராமம் அருகே உள்ள பாலம் உடைந்தது. இதனால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.அந்த பகுதியில் சுமார் 40 கிராமங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடி பகுதியில், 200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியில் மட்டும் மழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். சிதம்பரத்தில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. 5000 ஏக்கர் வாழை , 2500 ஏக்கர் உளுந்து, 2500 ஏக்கர் மணிலா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்டு பணிகளை கவனிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive