தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஜமாத் உத் தவாவுக்கு ஐ.நா. தடை-சயீத், லக்வி சர்வதேச தீவிரவாதிகள்!

ஐ.நா.: லஷ்கர் இ தொய்பாவின் மறு முகமான ஜமாத் உத் தவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட நான்கு லஷ்கர் நிர்வாகிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜமாத் உத் தவா அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சயீத், லக்வி தவிர ஹாஜி முகம்மது அஷ்ரப், ஜாகி உர் பாஷிக் ஆகியோரும் சர்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அப்படி விதிக்கப்பட்டால், ஜமாத் அமைப்பின் நிறுவனரான சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர். அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று பாகிஸ்தானும் உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுத்த முடிவில், அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதையும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் விவரம் வெளியீடு


மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தகவல்களை மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

யார், யார்?

இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்கள் வருமாறு


படா அப்துல் ரஹ்மான் (முல்தான்), சோட்டா அப்துல் ரஹ்மான் (முல்தான்), பஹாதுல்லா என்கிற அபு பாஹத் (ஓகாரா), இஸ்மாயில் கான் என்கிற அபு இஸ்மாயில் (தேரா), ஜாவேத் என்கிற அபு அலி (ஓகாரா), நஸீர் என்கிற அபு உமர் (பைசலாபாத்), பாபர் இம்ரான் என்கிற அபு அகாஷா (முல்தான்), இன்னொரு நசீர் என்கிற அபு உமர் (பைசாலாபாத்), அஜ்மல் அமீன் கஸாப் (ஓகாரா), சோயீப் என்கிற சொயப் (நரோவால் சியால்கோட்).

இவர்களில் சிலரின் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், சிலரது அடையாள அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் கமாண்டோக்களால் கொல்லப்பட்டவர்கள்.

எங்கெங்கு யார் யார் தாக்கியது?

இவர்களில் இஸ்மாயில் கான் மற்றும் கஸாப் சத்ரபதி ஆகியோர் சிவாஜி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.

படா அப்துல் ரஹ்மான், ஜாவேத், சோயப், நஸீர் என்கிற அபு உமர் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.

இன்னொரு நஸீர் என்கிற அபு உமர், பாபர் இம்ரான் ஆகிய இருவரும் நாரிமன் ஹவுஸில் தாக்குதல் நடத்தினர்.

சோட்டா அப்துல் ரஹ்மான், பஹாதுல்லா ஆகியோர் டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.

இவர்களில் சோயப்புக்கு வயது 20 தான். தீவிரவாதிகளிலேயே இவன்தான் மிகவும் சிறியவன். நஸீர் தான் அதிக வயதானவன். இவனுக்கு வயது 28.

நஸீர் மட்டுமே இந்தக் கும்பலில் திருமணமானவன். ஆனால் இவனது மனைவி, இவனுடன் இல்லை. ஒன்று விவாகரத்து செய்திருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளின் சராசரி வயது 23 முதல் 25 வயதுக்குள்தான்.

இஸ்மாயில்கான், நசீர், நஸீர் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே பல தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்.

கும்பலின் தலைவன் இஸ்மாயில்

இந்தக் கும்பலின் தலைவனாக இஸ்மாயில்கான் செயல்பட்டுள்ளான்.

பயிற்சியின்போது இவர்கள் அனைவருக்கும் வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் அடையாளம் காண்பதில் குழ்பம் ஏற்படும் என்பதற்காக இந்த புனை பெயர்கள் தரப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்குள்ளாகவே உண்மையான பெயர்கள் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த புதுப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள நான்கு இடங்களில் இந்தக் கும்பலுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கராச்சியிலிருந்து கிளம்பி மும்பைக்கு வரும் வழியில் கிடைத்த 3 நாட்களில்தான் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து விரிவாகப் பேசிக் கொண்டுள்ளனர். அப்போதுதான் அவர்களுடைய உண்மையான பெயர்களையும் முதல் முறையாக அறிந்து கொண்டுள்ளனர். தாங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

அஜ்மலுக்கு மட்டும் மூளைச்சலவை

அஜ்மல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் மூளைச் சலவை தனியாக தரப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைக் கையாளும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களில் உள்ளவை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஜிபிஎஸ் தவிர ஒரு சாட்டிலைட் போன், 9 செல்போன்களும் தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் ஒரு சிம் கார்டு கொல்கத்தாவில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை தீவிரவாதிகள் மும்பையில் பயன்படுத்தியுள்ளனர். மற்ற சிம் கார்டுகள் குறித்த தகவல்களை இப்போது வெளியிடுவதற்கில்லை.

சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக 2 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.

சபாவுதீனையும் விசாரிக்க முடிவு

இவர்கள் தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சபாவுதீன் என்ற தீவிரவாதியையும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் மரியா.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive