தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

தீபாவளி தேதியை மாற்ற முடியுமா டிராபிக் ராமசாமி கோர்ட்டில் கேள்வி?


"தீபாவளியை அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு பதிலாக ஜனவரியில் கொண்டாடுங் கள் என, மக்களுக்கு உத்தரவு போட முடியுமா அரசு?'இப்படி ஒரு கேள்வியை சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பியவர் தமிழகத்தைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி.தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான சட்டமும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகத் தைச் சேர்ந்த வக்கீலான டிராபிக் ராமசாமி என்பவர் சென் னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார்.வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.அப்போது, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என். கிருஷ்ணமணி கூறியதாவது:
வழக்கமாக சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப் படுகிறது. ஆனால், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. அப்படி ஒரு சட்டம் இயற்ற சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா என, தெளிவுபடுத்த வேண்டும்.தற்போது, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு தேதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளியை ஜனவரியில் கொண்டாடும் படி, மக்களுக்கு அரசு உத்தரவு போட முடியுமா? மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல், எந்த கொள்கை முடிவையும் அரசு எடுக்க முடியாது.தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், எந்த நன்மையும் ஏற்படாது. அதற்கு பதிலாக குழப்பம்தான் அதிகரிக்கும். அத்துடன் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையும் மாற்றப் பட்டுள்ளது.
இவ்வாறு கிருஷ்ணமணி கூறினார்.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டிலேயே மீண்டும் தொடரும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பின்னர் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் டிராபிக் ராமசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப் பட்டது.

நன்றி தினமலர்

அரசியல் அனாதையாகி விட்டது பா.ம.க - கயல்விழி பேட்டி

சத்தியமாக நினைக்கவில்லை, அரசியல் கேள்விகளுக்கு இத்தனை அதிரடியாக பதில் சொல்வார் என்று. அண்மையில் அரசியலுக்கு வந்த அழகிரியின் மகள் கயல்விழியின் அதிரடியான பேட்டி இதோ.தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். அரசியலில் உங்கள் லட்சியம் என்ன?``சமீபத்தில் சென்னைக்கு அருகிலுள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள சுனாமி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள ஏழை மக்களுக்கு நானும், என் கணவரும் மதிய உணவு கொடுத்தோம். அப்போது இலையில் லட்டும் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து அங்கிருந்த சின்னப்பசங்க இது என்ன பலகாரம்னு கேட்டாங்க. அதைக்கேட்டு எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. `லட்டு'னா என்னன்னுகூட தெரியாத குழந்தைங்க நம்ம நாட்டுல இருக்காங்க. இதே நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு `பீட்ஸா' வரை தெரியும். அந்த இடைவெளியை நீக்க வேண்டும். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்.''

சமீபத்தில் நடந்த தி.மு.க. பெண்கள் மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்டு பேசினீர்கள். அந்த மாநாட்டிலிருந்து நீங்கள் கற்றது என்ன?``இதில் நான் கற்றதைவிட, ஒன்றை நன்கு தெரிந்துகொண்டேன். தி.மு.க.வில் பெண்கள் ஈடுபாடே இல்லை என்ற மாயை உடைத்தெறியப்பட்டது. அவ்வளவு கூட்டம். மாநாட்டில் பெண்கள் ரொம்ப ப்ரியமா என்னிடம் பேசினார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்தோம், நம்ம மேல் இவ்வளவு ப்ரியமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேன். நாம் காரில் போகிறோம். இனிமேல் அந்தப் பெண்கள் பஸ்ஸைப் பிடித்து வீடு போக வேண்டுமே என்று கவலைப்பட்டேன். கழகத்தின் மீதும் கலைஞர் மீதும் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பார்த்து நாம் அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.'' நீங்களும் அரசியலில் இறங்கியிருப்பதால் `தி.மு.க.வில் வாரிசுச் சண்டை' என்றெல்லாம் செய்திகள் வருகிறது. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?``இது நீங்கள் எப்போதும் கேட்கிற கேள்விதான் (சிரிக்கிறார்). தி.மு.க.வில் வாரிசுச் சண்டையெல்லாம் கிடையாது. உங்களைப் போன்ற மீடியாக்கள் பண்ணுகிற வேலையே தவிர இங்கு ஒன்றும் அப்படி சண்டை இல்லை. இன்றைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும், கலகலப்பாகவும் தான் இருந்து கொண்டு இருக்கிறோம்.''

மாநாட்டில் நீங்களும் கனிமொழியும் நெருக்கமாய் இருந்தீர்கள். கனிமொழியைப் பற்றி உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

``மாநாட்டில் மட்டும் நாங்கள் நெருக்கம் இல்லை. சின்ன வயதிலிருந்தே எனக்கு கனிமொழி அத்தை என்றால் ஒரு தனி அன்பு, பாசம் எல்லாம் உண்டு. சின்ன வயதில் அத்தை, மருமகள் என்ற உறவை விட நல்லதோழிகள் மாதிரி பேசுவோம். ஏதாவது யோசனை வேண்டும் என்றால் அத்தையிடம்தான் பேசுவேன் உன் நல்லதுக்குத்தான் இதைச் சொல்கிறேன் என்பார். நான் அவர்களுக்குப் போட்டி அது, இது என்று பத்திரிகையில் செய்தி வருகிறது. என்றைக்கும் நான் கனி அத்தைக்குப் போட்டியாக வரமாட்டேன். இரண்டு பேரும் கைகோர்த்து செயல்படும்போது தி.மு.க. இன்னும் பலப்படத்தான் செய்யும்.''

கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அரசியலில் அடுத்து என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்? ``தி.மு.க. கூட்டணியிலிருந்து அவருடைய கட்சி விலக்கப்படும் என்று அவர் கொஞ்சம் கூட நினைத்திருக்கமாட்டார். கூட்டணியில் இருந்து அரசை விமர்சனம் செய்தால் பரபரப்பாக இருக்கும். பேப்பரில் பெயர் வரும். பாவம், இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கலைஞரின் அரசியல் அனுபவம், வயது என்ன? இவரின் அனுபவம், வயது என்ன? படுத்திருந்த யானை மீது ஒரு ஈ வந்து ரொம்ப நேரம் அமர்ந்திருந்தது. புறப்படும் போது யானையிடம் `நான் புறப்படட்டுமா?' என்று கேட்டதாம். அதற்கு யானை சொன்னதாம். `நீ வந்ததும் தெரியாது, இப்போது போவதும் தெரியாது' என்றதாம். ஈக்களுக்கு அரசியலில் இடமில்லை.'

'வருகின்ற தேர்தலில் பா.ம.க. வின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ``முன்பு பாண்டிச்சேரியில், தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்போம் என்றார்கள். ஆனால் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றைக் கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதிலேயே வெற்றி பெறாதவர்கள் தமிழ்நாட்டில் எங்கு ஜெயிக்கப் போகிறார்கள்? தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற்றிய பிறகு அந்தக் கட்சிக்கு இது வரையில் அ.தி.மு.க.விடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. பா.ம.க. அரசியல் அனாதை ஆகிவிட்டது.''

விஜயகாந்தின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?``தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், தான்தான் ஏதோ பிரதான எதிர்க்கட்சி என்று கருதிக் கொண்டு ஆளும் கட்சியை தினம்தோறும் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார். அதன் மூலம் தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அந்த மாயை 2011 தேர்தலில் நிச்சயம் விலகிவிடும்.'

'பெட்ரோல் விலையேற்றத்தைத் தொடர்ந்து மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் வந்தால் உங்கள் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா?``இந்த மாதிரி பெட்ரோல் விலை ஏற்றம், விலைவாசி உயர்வு இது எல்லாம் அலைகள். நிலத்தில் ஊன்றப்பட்ட விதைகளல்ல. காற்றில் விழும் இலைகள் போலவும், கலைகின்ற மேகம் போன்றவையும்தான் இவைகள். இந்தச் சூழல் விரைவில் விலகிவிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்து இருக்கிறது. இப்ப கூட ஒரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 30 ரூபாய் குறைத்திருக்கிறது. இவையெல்லாம் தேர்தலில் வெற்றிகளாய் எதிரொலிக்கும்.''

மதுரையில் உங்கள் தந்தையின் ராயல் கேபிள் நிறுவனத்தினால் பல பிரச்னைகள் என்று சொல்லப்படுகிறது. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?``மதுரையில் நடைபெறும் கேபிள் பிரச்னைக்குக் காரணம் சன் டி.வி.தான். `மதுரை மக்கள் பீதியில் இருக்கிறார்கள்' என்று இந்த `அம்மா' சொல்கிறாரே! அப்படி இருந்தால் தமிழக அரசிற்கு இந்த நேரம் ஒரு புகாராவது வந்திருக்காதா? மதுரையில் எஸ்.சி.வி. கேபிள் கனெக்ஷன் கொடுக்குது. இப்போ ராயல் கேபிளும் கனெக்ஷன் கொடுக்குது. ராயலுக்கு சன் டி.வி. ஒளிபரப்பைத் தரமாட்டோம்னு சன் டி.வி. சொல்றது எந்த விதத்துல நியாயம்?அவங்களே ஒன்மேன் ஷோ பண்ணணும்னு நினைக்கிறாங்க. தங்களுக்கு போட்டியே இருக்கக்கூடாது என்று நினைத்தால் எப்படி?''

குருமீதுதே.பா., சட்டம்ஏன்? கருணாநிதி விளக்கம்

பா.ம.க., பிரமுகர் குரு மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத் தின் படி ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித் துள்ளார்.முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட "கேள்வி-பதில்' அறிக்கை:வன்னியர் சங்கத் தலைவர் குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவித்துள்ளார். எந்த வழியில் ஊறு விளைவித்தார்? என இரண்டு மூன்று நாட்களாக ராமதாஸ் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குரு பேசிய பேச்சின் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறேன். "எம்.எல்.ஏ., சிவசங்கரின் அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. சிவசங்கர் நேற்று வந்த சின்னப் பையன்.மத்திய அமைச்சர் ராஜா கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்குப் போட்டால் மத்திய அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது.
உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்துவிடுவோம். பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். போலீஸ் எங்கள் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். ஒரு போலீஸ்காரன் கூட பொண்டாட்டிகிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் கூட ஓடாது; எரித்து விடுவோம்."டேய் சிவசங்கர் நீ சின்னப் பையன். உன் அப்பனைக் கேளுடா, நீ மட்டும் வைத்தியைக் கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத் தேர்தல் வந்திருக்கும்.இனி தி.மு.க.,காரன் எந் தப் பொதுக் கூட்டத்தில் தாக் கிப் பேசினாலும் அத்தனை பேரையும் வெட்டிக் கொளுத்துங்கடா.'வன்முறை என்றால் என்னவென்றே தெரியாத கட்சியைத் சேர்ந்தவர் பேசிய பேச்சுத் தான் இது. இதற்காகத் தான் வழக்கு.
பா.ம.க.,விற்கும் தி.மு.க.,விற்கும் சமரசம் ஏற்படுத்த நடந்த முயற்சி என்னவாயிற்று?
இவ்வளவு பேசியவரைக் கண்டித்து பா.ம.க., பொதுக் குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க முடியும்? ஒரு வார இதழில் என் பேத்தி கயல்விழி அளித்த ஒரு பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் பா.ம.க.,வைப் பற்றியும், அதன் தலைவைரைப் பற்றியும் அந்தக் கட்சி அனாதையாக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் வந்திருப்பதைப் படித்தவுடன், தொலைபேசி மூலம் என் பேத்தியை அழைத்து நான் திட்டியதில் அவர் அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது.
குரு மீது புகார் கொடுத்தவர்களே அதை இல்லை என்றும் அப்படி புகார் செய்யவில்லை என்றும் சொல்வதாக பா.ம.க., தலைவர் சொல்கிறாரே?
புகார் கொடுத்தவர், ஒரு நீதிபதியின் முன் அந்தப் புகாரை பதிவு செய்திருக்கிறார் என்று போலீஸ் கூறுகிறது.தற்போது அந்தப் புகாரை மறைத்துவிட்டு, மிரட்டலுக்கு அஞ்சி தான் புகாரே கூறவில்லை என்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் அரசு கேபிள் "டிவி' தொடங்கிய போது நீங்கள் அதை ஆதரிக்கவில்லையே?
மாநில அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தொடங்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்து, "டிவி' நடத்த முடிவெடுத்ததால் ஆதரிக்க முடியவில்லை.ஜெயலலிதா தொடங்குவதாக இருந்தது, அனைத்து "டிவி' கம்பி வடங்களும் அரசுக்கே சொந்தம்; மற்ற நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட முடியாது.இப்போதைய அரசு கேபிள் "டிவி' நிறுவன திட்டத்தில் மற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து கேபிள் இணைப்பு சேவைகளை வழங்கலாம். தற்போதைய அரசு நிறுவனம் பொதுவில் இயங்கக் கூடியது; அரசுக்கே ஏகபோகம் அல்ல. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் பேத்தியின் பேட்டியும் உங்களுக்காக

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive