
ஆந்திராவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது.
கோவையில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆந்திராவில் பிரஜா ராஜ்யம், தமிழகத்தில் ரஜினி ராஜ்யம் என போஸ்டர் ஒட்டி கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கிலோ ரூ.2 ரூபாய் அரிசி, இப்போது 1 ரூபாய், 6 ரூபாய் பேருந்து கட்டணம் இப்போது 13 ரூபாய், மின் பற்றாக்குறையால் இருண்ட தமிழகம். தட்டிகேட்க தட்டாமல் வருகிறார் ரஜினி என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மற்றொரு போஸ்டரில் இந்திய அரசியல் வானில் வரவேண்டிய நேரத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியே.. வருக சரித்திரம் படைக்க என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருண்ட தமிழகம் தட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார் ரஜினிகாந்த்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment