திருச்சி மத் திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள வன்னியர் சங்கத் தலைவர் குரு, உடல்நலமில் லாத தன் தாயை பார்க்க ஒரு நாள் பரோலில் நேற்று காலை விடுவிக் கப்பட்டார்.எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சருக்கு எதிராக பா.ம.க., கூட்டத்தில் காரசாரமாக பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குரு தாயார் கல்யாணி (73), இதய நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலக் குறைவுடன் காடுவெட்டி கிராமத்தில் இருக்கிறார். "அவரை பார்க்க ஒருநாள் பரோலில் விடவேண்டும்' என்று குரு தரப்பில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குருவை ஒருநாள் பரோலில் வீட்டுக்கு சென்று வர அனுமதி அளித்தது.
நேற்று காலை 6 மணிக்கு சிறையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கிளம்பிய குரு, காலை 8.30 மணிக்கு அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை அடைந்தார்.அங்கு உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயை பார்த்து நலம் விசாரித்து விட்டு, மாலை 3 மணிக்கு அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கிளம்பினா
காடுவெட்டி குருவுக்கு ஒருநாள் பரோல்
Labels: அரசியல்
