தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இலங்கை போர்க்களத்தில் பிரபாகரன் மகன் சார்லஸ் புதிய தலைமை:: அபாய திட்டங்கள் தயார்

புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமையில் முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகவும், பிரபாகரன் வன்னி பகுதியில் தங்கியிருப்பதாகவும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த கடற்புலிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தைப் பின்வாங்கச் செய்யும் வகையிலான பல அபாயகரமான தாக்குதல் திட்டங்களையும் புலிகள் வகுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் முல்லைத் தீவை நோக்கி முன்னேறிய ராணுவத்தினரைத் தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கடற்புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த சங்கர், தமிழ் அலை ஆகியோர் இரணமடு அணையை தகர்ப்பதற்காக அனுப்பப்பட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

இருவரும் இலங்கை ராணுவத்திடம் கடந்த ஜனவரியில் சரணடைந்தனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் தெரியவந்ததாக, "சண்டே அப்சர்வர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சரண் அடைந்த கடற்புலிகள் இருவரும் கூறியதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



முல்லைத் தீவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறி வருவதை தடுக்க விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரணமடு அணையை வெடி வைத்து தகர்க்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அணையை தகர்ப்பதற்கான திட்டத்தை புலிகளின் கடற்பிரிவுத் தலைவர் சூசையும், புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணியும் வகுத்தனர்.அணையை தகர்ப்பது எப்படி என்பது குறித்து எங்களுக்கு கம்ப்யூட்டர் மூலமாக சார்லஸ் விளக்கினார். இதற்காக எங்களுக்கு தண்ணீருக்குள் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களுடன் சேர்த்து மேலும் 10 பேரும் பயிற்சி பெற்றனர். தற்கொலைப் படை தாக்குதலுக்குக் கிளம்புவதற்கு முன், பிரபாகரன் எங்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தில் மட்டன் உணவு பரிமாறப்பட்டது.



அணையை தகர்க்கும்போது அதிக பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அணையை தகர்ப்பதன் மூலம் 5,000 ராணுவ வீரர்கள் இறக்க வேண்டும் என சார்லசும், சூசையும் விருப்பம் தெரிவித்தனர். எங்களிடம் சாட்டிலைட் போன், நீச்சல் உடைகள் மற்றும் வெடிகுண்டுகள் தரப்பட்டன.முல்லைத் தீவில் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகள் படைக்கு, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தான், தலைமை ஏற்றுள்ளார். சார்லசுடன் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான பானு, லட்சுமண் ஆகியோரும் புலிகளுக்கான போர் யுக்தியை வகுத்துக் கொடுக்கின்றனர்.



இலங்கை ராணுவத்தை தோல்வி அடையச் செய்யும் வகையில், பல அபாயகரமான திட்டங்களை புலிகள் வகுத்துள்ளனர்.பிரபாகரன், வன்னி பகுதியில் தங்கியுள்ளார். ராணுவம் அவரைப் பிடிக்கும் வரை அப்பாவி மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுவர். அப்பாவி இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலைப் படையினராக மாற்றி வருகின்றனர். பிரபாகரன் தனது மனைவியையும், இளைய மகன் பாலச்சந்திரனையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் எங்கு உள்ளனர் என உறுதியாக தெரியவில்லை.இவ்வாறு கடற்புலிகள் கூறியதாக, "சண்டே அப்சர்வர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:



தற்போது சண்டையை தலைமை ஏற்று நடத்துவதாகக் கூறப்படும் சார்லஸ் அந் தோணி, அயர்லாந்தில் ஏரோநாட்டிகல் பட்டப் படிப்பு படித்தவர். புலிகளின் வான்படை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சார்லசும் ஒருவர் என நம்பப்படுகிறது. புலிகள் அமைப்பின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் அவர் தலைவராக உள்ளார்.இவ்வாறு அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ராஜப‌‌க்சேவின் ஆலோசகராக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமனம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அந்நாட்டு அரசு வேகமாக நிகழ்த்தி வரும் நிலையில், அதிபர் ராஜபக்சேவின் தகவல் தொழில் நுட்ப சர்வதேச ஆலோசகராஇந்தியாவைச் சேர்ந்த ன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை 'ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கொழும்பில் வெளியிட்ட நடந்த விழாவில் வெளியிட்ட அதிபர் ராஜபக்சே,

கொழும்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவரான நாராயண மூர்த்தியை தலைமை விருந்தினராகவும் ராஜபக்சே அழைத்திருந்தார்.அதனையேற்று கொழும்பு சென்று அவ்விழாவில் கலந்துகொண்டார் மூர்த்தி.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா கண்டுள்ள வெற்றியின் ஈர்ப்பு காரணமாக இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பியிருப்பதாக கூறியதோடு, மேற்கண்ட அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்த பொறுப்பை ஏற்க நாராயண மூர்த்தி ஒப்புக் கொண்டதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பலிதா கோகோனாவும் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.

த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் ‌மீது கொடூர‌த் தா‌‌க்குத‌ல்களை நட‌த்‌தி இன‌ப்படுகொலையை ‌நிக‌ழ்‌த்‌தி வருவதை‌யு‌ம், அத‌ற்கான இ‌ந்‌திய அர‌சி‌ன் உத‌விகளையு‌ம் க‌ண்டி‌த்து ஒ‌ட்டுமொ‌த்த‌த் த‌மிழகமு‌ம் போராடி வரு‌ம் ‌நிலை‌யி‌ல், நாராயண மூ‌ர்‌த்‌தி ‌நியமன‌ம் ச‌ர்‌ச்சையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive