பாலித்தின் பைகளுக்கு மாற்றாக அரிசி தவிடு மூலம் தயாரிக்கப்படும் பைகள், 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்’ என்று
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
இதுகுறித்து அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
மலை, பனிப்பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், அரிசி தவிடு மூலம் தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்துகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, எளிதில் மக்கும் தன்மை கொண்ட பைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வழங்குமாறு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம்(டிஆர்டிஓ) கேட்டோம்.
இதன்படி அரிசி தவிடு மூலம் பை தயாரிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்துவது குறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஓட்டல் அதிபர்களுடன் இம்மாத இறுதிக்குள் ஆலோ சனை நடைபெறும்.
தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர், பை தயாரிக்க தேவையான நிதியை வழங்க சம்மதித்துள்ளனர்.
அரிசி தவிட்டை புதிய தொழில்நுட்ப அடிப்படையில் அதிக வெப்பத்துக்கு உட்படுத்தி, குளிர்வித்து பை தயாரிக்கப்படும். இது இன்னும் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்.
அரிசி தவிடு தாராளமாக உள்ளதால் ஒரு பைக்கு 2 முதல் 3 பைசா விலை தான் ஆகும்.
இந்த தொழில்நுட்பத்தை பெற்று வணிக நீதியாக தயாரிக்க மும்பை, டெல்லியில் இருந்து 3 நிறுவனங்கள் அணுகின. நாங்கள் மறுத்துவிட்டோம்.
சமுதாய நலன் கருதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகமே அரிசி தவிடு மூலம் பைகளை தயாரிக்கும். இதற்கு காப்புரிமை பெறப்படும். இதற்கான சாம்பிளை டிஆர்டிஓ அளித்துள்ளது.
இது பாலிதின் பைகளுக்கு மாற்றாக இருக்கும். இந்த பைகள் அதிக எடை, சூடு தாங்கக் கூடியது. எளிதில் மக்கும் தன்மை கொண்டது.
பாலித்தின் பைகளுக்கு மாற்றாக தவிடு மூலம் பை தயாரிக்க திட்டம்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008
Labels: செய்திகள்

0 comments:
Post a Comment