இந்தியாவிலுள்ள 50 கோடி மக்கள், மொபைல் போனுக்கு மாதம் செலவிடும் பணத்தைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலம் தயாரிக்க முடியும்,'' என விஞ்ஞானி அண்ணாதுரை பேசினார்.கோவை பாரதியார் பல்கலையில், "சந்திரயான் -1' திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:நிலவில் உள்ள தட்ப வெப்பநிலை மாற்றம், விண்கலங்களை பாதிக்கவே செய்யும். தற்போது சந்திரயான் - 1 விண்கலம், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை பயன்படுத்தி நிலவில் ஆய்வு நடத்தப்படுகிறது. "சந்திரயான் - 2' விண்கலம், நிலவில் உள்ள நீர் வளம், கனிம வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தும்.நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளதால், இந்தியாவிலேயே, செயற்கைகோளை தயாரித்து, விண்வெளியில் செலுத்தி தரும்படி, பல நாடுகள் கோரி வருகின்றன. இனி, வணிக ரீதியாகவும் அதிக நன்மைகளை விண்வெளி ஆய்வு மையம் பெறும்.இந்தியாவில், 30 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.
அடுத்த இரு ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை 50 கோடியாக உயரும். இவர்கள், மொபைல் போனுக்கு மாதம் சராசரியாக 200 ரூபாய் செலவழிப்பர். இந்த மக்கள், ஒரு மாதத்துக்கு மொபைல் போனுக்கு செலவழிக்கும் தொகையைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலங்களை உருவாக்க முடியும்.விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் மீத்தேன் வாயு, மிகக்குறைந்த அளவே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை முழுமையாக பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.
மொபைல் போனுக்கு செலவிடும் பணத்தால் 10 சந்திரயான் தயாரிக்கலாம் * விஞ்ஞானி அண்ணாதுரை பேச்சு
கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது.மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது:வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்கபலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
உடனிருந்த அதிபர் மெட்வேதவ், "இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார்.இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
Labels: அரசியல்
அ.தி.மு.க,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி : பிரகாஷ்காரத் - ஜெயலலிதா சந்திப்பில் முடிவு.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில், பிரகாஷ் காரத் ஜெயலலிதாவுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் காரத் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரா உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் பரதன் , மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க., சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகிறது.
Labels: அரசியல்
