தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மொபைல் போனுக்கு செலவிடும் பணத்தால் 10 சந்திரயான் தயாரிக்கலாம் * விஞ்ஞானி அண்ணாதுரை பேச்சு

இந்தியாவிலுள்ள 50 கோடி மக்கள், மொபைல் போனுக்கு மாதம் செலவிடும் பணத்தைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலம் தயாரிக்க முடியும்,'' என விஞ்ஞானி அண்ணாதுரை பேசினார்.கோவை பாரதியார் பல்கலையில், "சந்திரயான் -1' திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.


மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:நிலவில் உள்ள தட்ப வெப்பநிலை மாற்றம், விண்கலங்களை பாதிக்கவே செய்யும். தற்போது சந்திரயான் - 1 விண்கலம், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை பயன்படுத்தி நிலவில் ஆய்வு நடத்தப்படுகிறது. "சந்திரயான் - 2' விண்கலம், நிலவில் உள்ள நீர் வளம், கனிம வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தும்.நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளதால், இந்தியாவிலேயே, செயற்கைகோளை தயாரித்து, விண்வெளியில் செலுத்தி தரும்படி, பல நாடுகள் கோரி வருகின்றன. இனி, வணிக ரீதியாகவும் அதிக நன்மைகளை விண்வெளி ஆய்வு மையம் பெறும்.இந்தியாவில், 30 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.


அடுத்த இரு ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை 50 கோடியாக உயரும். இவர்கள், மொபைல் போனுக்கு மாதம் சராசரியாக 200 ரூபாய் செலவழிப்பர். இந்த மக்கள், ஒரு மாதத்துக்கு மொபைல் போனுக்கு செலவழிக்கும் தொகையைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலங்களை உருவாக்க முடியும்.விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் மீத்தேன் வாயு, மிகக்குறைந்த அளவே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை முழுமையாக பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.

கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது.மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர்.


ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது:வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்கபலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.


உடனிருந்த அதிபர் மெட்வேதவ், "இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார்.இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.

அ.தி.மு.க,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி : பிரகாஷ்காரத் - ஜெயலலிதா சந்திப்பில் முடிவு.

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில், பிரகாஷ் காரத் ‌ஜெயலலிதாவுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த ‌சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் காரத் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது உறுதி ‌செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரா உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் பரதன் , மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க., சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகிறது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive