பிரமிட் சாய்மீரா, ராஜ் கமல் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'மர்மயோகி'யின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழாமலே உள்ளன. படத்தின் பட்ஜெட் நூறுகோடி, நூற்றைம்பதுகோடி என பல்வேறு புள்ளிவிவரங்கள்.
இந்நிலையில் கமல், த்ரிஷா, ஸ்ரேயா பங்குபெற்ற போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. படப்பிடிப்பை பிரேசிலில் கமல் தொடங்குகிறார் என்றொரு செய்தியும் கசிய விடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில்தான் 'மர்மயோகி'யின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இம்மாதம் 26-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் கமல்.
Kamalhasan
சரித்திர படமான 'மர்மயோகி'க்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சரித்திர படம் என்பதால் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் என்னென்ன கருவிகளை பயன்படுத்துவது என்று தனியே ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார் இசைப்புயல். இரண்டு பாடல்கள் ஏற்கனவே பதிவாகி விட்டன என்கின்றன தகவல்கள்.
இம்மாத இறுதியில் கமலின் கனவு படங்களில் ஒன்றான 'மர்மயோகி'யின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
'மர்மயோகி'யின் முதல்கட்ட படப்பிடிப்பு சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி பகுதியில் நடத்தப்படலாம் என்கிறார்கள் தயாரிப்பு வட்டாரத்தில்.
தமிழ் நாட்டில் 'மர்மயோகி'
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment