தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இந்தியக் கோரிக்கையை ஏற்றது இலங்கை

இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, உயர் மட்டக்குழுவை அனுப்ப இலங்கை அரசு முன்வந்திருக்கிறது. இக்குழு விரைவில் இந்தியா வந்து அங்குள்ள நிலையை நேரடியாக அரசிடம் விளக்கும்.கடந்த இரு நாட்களாக இலங்கை அரசிடம் இந்தியா வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கைக்கு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார்.


இலங்கையில் உள்ள மனிதாபிமானப் பிரச்னைகளை அந்த அரசு நியாயமாக அணுகுகிறதா என்று கவனிக்க வேண்டும் என டில்லியில் உள்ள இலங்கை ஐ-கமிஷனர் ஜெயசிங்கேயை அழைத்து விளக்கம் கேட்டதையடுத்து இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதுகுறித்து இலங்கை மீடியாத்துறை அமைச்சர் அபயவர்த்தனே கூறுகையில், "ஐந்து எம்.பி.,க்களும் இரு உயர் அதிகாரிகளும் கொண்ட உயர்மட்டக்குழு இந்தியாவுக்குச் சென்று அங்கு நிலைமையை விளக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். ஆகவே, இந்தக் குழுவை அமைத்து விரைவில் இந்தியாவுக்குச் சென்று அவர்கள் கவலைப்படும் விஷயங்கள் குறித்து விளக்கம் தரப்படும்' என்றார். அதேசமயம், "அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படவில்லை; மாறாக, தமிழர்களுக்கும் புலிகளுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது அதிகம்' என்றும் அபயவர்த்தனே கூறினார். தவிரவும், இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில், அகதிகளாக உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் நேற்று வவுனியா சென்றடைந்தன. அங்கு உணவுப் பொருட்கள் வினனியோகமும் துவங்கியது.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தச் சண்டையால், 2.30 லட்சம் பேர் அகதிகள் போல உள்ளனர்.


இவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், கடும் சண்டை காரணமாக உணவுப் பொருட்களுடன் சென்ற லாரிகள் நேற்று முன்தினம் திரும்பி வந்தன. இந்நிலையில், நேற்று 50 லாரிகள், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதிக்கு 750 டன் உணவுப் பொருட்களுடன் சென்றன. அவை எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சென்றடைந்ததாக, ஐ.நா., தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் வினியோகம் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive