"நாம் போற்றி வளர்த்த கலாசாரம் இன்று புதைக்குழிக்குள் போய்விட்டது"
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது உயரிய பண்பாடு இன்று சீர்கெட்டு போய்விட்டது"
நாளேடுகளில் தினம் தினம் வருகின்ற செய்திகள் நாம் வசிப்பது தமிழ் மண் தானா? என ஐயுறச்செய்கின்றன . அத்தனை விதமான செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது நாம் என்று இல்லை உலகில் வசிக்கும் ஒவ்வொரு இனத்திற்க்கும் அவர்களுக்குண்டான மொழி ,உடை ,கலாசாரம் ,ஆகியவை உண்டு இவை தான் அந்த இனத்தின் அடையாளம் இன்று நமது அடையாளம் மறைக்கப்பட்டு மேல்நாட்டுக்கலாச்சாரத்தின் சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாம்
தமிழ் பெண்ணின் அடையாளம் என்ன நெற்றியில் குங்குமம் மானங்காக்க உடலிலே சுற்றி கட்டிய புடவை நாணம் இவை தனே ஆனால் இன்று இவை எங்கே போயிற்று? உடலை மறைத்து மானம் காக்க வேண்டிய ஆடை இன்று உடலை உலகிற்கு காட்டும் பொருளாகவும் தங்களுடைய செல்வ செருக்கை காட்டும் ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது வேதனை தரும் வெட்கச்செய்தியாகி போனது
இதற்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? மேல்நாட்டினர் நம்மை பார்த்து ஆச்சரிய பட்டு போவது நம் கலாசாரத்தின் பெருமை கண்டல்லவா!ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் உரிமை கேட்கும் இப்போதைய பெண்கள் ஆடைகுறைப்பு விசயத்தில் ஆண்களை மிஞ்ஞிவிட்டார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை .எது நாகரிகம் என்று நினைக்கிறார்கள் இன்றைய நகரத்து பெண்கள் ஆடைகுறைப்பு, குடிப்பது, புகைபிடிப்பது போன்றவற்றையா?சில முற்போக்குசிந்தனையாளர்கள் சொல்வார்கள் இன்னும் பழமைவாதி போல பேசிக்கொண்டிருக்கிறான் காலம் மாறி போய்விட்டதென்றுஇன்னும் சிலரோ இன்னும் மேலே போய் இவன் பெண்ணிணத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு என்றும் சொல்வார்கள் ஆண்களுக்குநிகராக பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும் எந்த துறையில் கல்வியிலும், அறிவிலுமே தவிர இது போன்ற தீய செயல்களில்அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் .
கல்வி இல்லா பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் என்பது ஆன்றறோர் வாக்கு
பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை என்பது ஏற்றுக்கொள்ள்க்கூடியேத்தேயாகும் ஆனால் நமது கலாசாரம் சீர்கெட்டு போய்விடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்
நம் பாரம்பரியத்தை காக்க வேண்டியது இம் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும்
கண்டதும் காதல் கருவிலே குழந்தை காவல்துறையிடம் முறையீடு என பல பெண்களின் வாழ்க்கை சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிறதுஇதற்கு யார் காரணம் ? சமுதாயமா? இல்லை பெற்றோரா?
அவசரத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எவ்வள்வு வேகமாக தொடங்க பட்டதோ அவ்வளவு சீக்கிரத்திலேயே முடிந்து விடுகிறது.
காதல் தவறென்று சொல்லவில்லை நான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களில் தான் தவறு நிகழ்கிறது வாழ்க்கை ஒரு முறை தான் எடுக்கும் முடிவு தெளிவானதாக இருக்க வேண்டும்
இன்றைய சூழலில் ஒரு 13 வயது சிறுவன் கூட மது அருந்தும் நிலை தான் இப்பொழுது நம் சமூகத்தில் இருக்கிறது
இதற்கு நாம் வெட்கப்படவேண்டாமா? மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒரு சிலரால் இது நாகரிகத்தின் அடையாளமாக சுட்டிக்காட்டப்படுவது வேதனையளிக்கிறது.
இதனை தடுக்க வேண்டிய அரசே மதுவை ஊக்குவிக்கிறது "படிப்பதற்கு பள்ளி தர வேண்டிய அரசு குடிப்பதற்கு கட்டடம் கட்டிக்கொடுத்துகொண்டிருக்கிற்து"
" நம் கலாச்சாரம் இருக்கும் வரை தான் நம் தமிழினத்தின் அடையாளம் இருக்கும்
நம் தமிழினத்தின் அடையாளம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதுதான் வேதனையான உண்மை"
