தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

என் பர்சை நீ பார்த்தாயா?”

”என் செல்போனை நீ எடுத்தாயா?” ஆகிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில்கள் இல்லை என்பதே. ஆனால், தொனி மற்றும் தோரணையை வைத்தே இல்லைகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆம்களை வெளியே கொண்டு வந்துவிடலாம்.

”நான் பெத்த பிள்ளையே இல்லை நீ; உனக்கு நான் அப்பனுமில்லை, நீ எனக்கு மகனுமில்லை” என்று மனம் வெறுத்துக் கத்துகிறார் ஓர் அப்பா. அவசரப்பட்டு இது ‘இல்லை’ இரகத்தைச் சேர்ந்தது என்கிற முடிவிற்கு எவரும் வந்துவிடவேண்டாம். இதற்குள் ஓர் ஆம் ஒளிந்து கிடக்கிறது.

தம் மகன் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறையின் முரண்பாடான வெளிப்பாடே இது. நாம் விண்ணப்பம் விடுத்த எவ்வளவோ இடத்தில், தீர்மானமாக நமக்கு ‘இல்லை’கள் சொல்லப்பட்டு அவை ‘ஆம்’களாகியிருக்கின்றன.

கல்லூரியில் படிக்கும் மகன் செலவுக்குப் பணம் கேட்கிறான். ஆரம்பத்தில் அம்மாவிடமிருந்து இல்லைதான் பதிலாக வருகிறது. புறப்படும்போது, ”உன் தொந்தரவு தாங்கலை! இந்தா வச்சுக்கோ! நல்ல செலவாப் பண்ணு!” என்று அதுவே ஆமாக அரைமணி நேரத்திற்குள் உருமாறுகிறது.

”மாப்பிள்ளை மோட்டார் சைக்கிள் கேக்கிறார்ப்பா. பஸ் ஸ்டாண்ட்ல காத்துக் கிடந்தே நேரம் வீணாப் போகுதப்பா. சீக்கிரமே போயிடறார். ராத்திரி லேட்டா வர்றார். புள்ளைங்க ரெண்டு நேரமும் தூங்கிடுதுங்க. எங்களோட அவர் இருக்கிற நேரமே குறைச்சல்தாம்பா” என்று சிணுங்கும் மகளுக்கு அப்பா முதலில் சொல்வது இல்லைதான்.

”எப்படிம்மா முடியும்? நான் எங்கம்மா போவேன்? கல்யாணத்துக்கு முன்ன வாங்கின கடனே கழுத்தை அழுத்துது” என்ற அதே அப்பா எப்படியோ மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து விடுகிறாரே!

ஆம்! பாசத்திற்கு இல்லைகளை ஆம்களாக மாற்றும் ஆற்றல் உண்டு. ஆனால், தொடர்ந்து ‘இல்லை’தான் என்பது பதிலாக இருப்பின் அந்த இல்லைகள் ஆராயப்பட வேண்டும்.

இந்த வழியில் நீ வந்ததால் இல்லை. இந்நபர் மூலம் அணுகியதால் இல்லை. நேரமற்ற நேரத்தில் சூழ்நிலை புரியாமல் கேட்டதால் இல்லை போன்ற பதில்கள் வெளிவரும்.

‘இல்லை’களை எப்போதுமே நிரந்தரமாக அடைக்கப்பட்ட கதவுகளாகக் கருதக்கூடாது. தட்டும் நேரம்; தட்டப்பயன்படுத்தும் கருவி; தட்டப்படும் சூழல் ஆகியவை சாதகமாக இருக்கின்றனவா என உன்னிப்பாகக் கவனித்து அனைத்தையும் சாதகமாக்கிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டுமே தவிர, ஒப்புக்குத் தட்டிவிட்டு ‘இல்லை’களை வாங்கிக்கொண்டு வெளியேறி விடக்கூடாது

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive