தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

தமிழுக்கு, தமிழருக்கு ஓர் ஊறு என்றால் அதுபற்றி முதல் குரல் கொடுப்பவர் நம் தமிழக முதல்வர் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

ஆனால் இலங்கைத் தமிழர் விஷயத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு விவாதத்திற்குரியது.

“யாருக்குப் பாதிப்பு வரும் யாருக்குப் பாதிப்பு வராது என்று நான் சிந்திக்கவில்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் தந்துள்ள வாக்கு மூலம் கூர்ந்து ஆராயத்தக்க ஒன்று. தம்மையறியாமல் கூறிய உண்மை இது எனலாம்.

இந்திய இறையான்மை என்பது இந்திய எல்லையோடு முடிந்துவிடக்கூடிய விஷயம். இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உள்ள வட்ட எல்லைக்குள் இந்தியா அவ்வளவு சுலபத்தில் தலையிட்டுவிட முடியாது.

இதை உணர்ந்துதான் நம் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா அறிவிப்பிற்கு, எதிர்பார்த்த அளவிற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் நிதானமாகவே செயல்பட்டு, “இலங்கை நிலவரம் எனக்குக் கவலை தருவதாக உள்ளது” என்று மட்டும் தம் அக்கறையைத் தெரிவித்திருக்கிறார்.

தங்கள் அறிவிப்பைக் கேட்டு மத்திய அரசு அலறும் என்று எதிர்பார்த்த தி.மு.க. கூடாரத்திற்கு இது பெரும் ஏமாற்றமளித்திருக்கும். இலங்கை அரசு நிகழ்த்துவது புலிகளுக்கு எதிரான யுத்தமே தவிர, அப்பாவித் தமிழர்களுக்கு எதிரதானதல்ல. அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பு வளையமாகப் பயன்படுத்துபவர்கள் புலிகளே என்கிற ஜெயலலிதாவின் கருத்தும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கத்தக்கது.

தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து, மத்திய அரசைக் கவிழ்ப்பதன் மூலமாக தி.மு.க. என்ன சாதிக்க நினைக்கிறது? அடுத்த தேர்தல் வருமுன் இலங்கைத் தமிழர் நலனைத் தட்டிக் கேட்க யார் பதவியில் இருப்பார்களாம்? குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபாபட்டீல் நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ன அரசியல் கண்க்கீடு இது?

ஓர் அரசியல் சாணக்கியர் எடுத்த சறுக்கலான முடிவல்லவா இது! அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் இந்தியா எப்படித் தலையிட முடியும் என்கிற பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குத் தமிழக முதல்வர், “பின் பங்களாதேஷ் எப்படித் தோன்றியதாம் என்று பதிலளித்திருப்பது சற்றும் பொருத்தமில்லை.”

கிழக்குப் பாகிஸ்தானின் (பங்களாதேஷ்) நிலைமைகள் முற்றிலும் வேறு. கிழக்கு பாகிஸ்தானை ஆண்ட முஜிபுர் ரகுமானே இந்தியாவைத் தலையிடுமாறு கேட்டுக் கொண்டதை உலகமே அறியும்.

இந்நிலையை எப்படி இலங்கை நிலையோடு ஒப்பிட முடியும்?

இதனால்தான் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகாமல் இந்தியா தப்பிப் பிழைத்தது. இது அந்நியத் தலையீடல்ல என்பதால்தான் இந்திராவும் உலக அளவில் சிறந்த தலைவியாக ஏற்றக் கொள்ளப்பட்டார்.

இலங்கைத் தமிழர் நலன் காக்கத் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் அக்கறையுடன் கூடிய நல்ல நடவடிக்கையாகவே பாராட்டப் பெறும். ஆனால் இராஜினாமா என்கிற அச்சுறுத்தல் ஒட்டுமொத்த இந்திய நலன்களையே பாதித்துவிடக்கூடியது.

எந்த நோக்கத்திற்காக இதில் தி.மு.க. இறங்கியதோ அதுவும் நிறைவேறாமல் போய், இந்திய நலன்களும் பாதிக்கப்படுகிற ஒரு செயலை ஒரு தோழமைக் கட்சியா செய்வது? ஜீரணிக்கத்தான் முடியவில்லை.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive