தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

நமது வயது, தோற்றம் முதலியவற்றிற்கு ஏற்ப உடை அணிகிறோம். சிலர் ராசி, எண் கணிதம், முதலியவற்றிற்கு ஏற்ப உடையணிகிறார்கள்.

ஆனால், புதிதாக எழுந்துள்ள ஒரு வாதமே நோய்களுக்கு ஏற்ப உடையணிந்தால், ஆரோக்கியம் நீடிக்கும் என்பதுதான். நோய்கள் குணமாகும். பிரச்னைகள் தீர்ந்து எழுச்சி பெற்று உழைத்து வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதனால்தான் வண்ண சிகிச்சை முறையும், கிரிஸ்டல் சிகிச்சை முறையும் பலரது நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன.

நவரத்தினக் கற்கள் உள்ள மோதிரங்கள் அணிவது, இந்த நிறங்கள் உடலில் செல்ல எளிதாக இருக்கிறது என்பதால்தான்.

இதேபோல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, டர்க்யூஸ் (Turcuoise) நீலம், கருநீலம், வைலட் (செந்நீலம்), பர்ப்பிள் (கருஞ்சிவப்பு), ஸ்கார்லெட் (இளஞ்சிவப்பு) இந்த நிறங்களில் உங்களுக்குரிய நிறத்தில் உடைகளைத் தேர்வு செய்து அணியலாம்.

வயலட் நிறம் உள்ள அறையில் ஒருவர் இருந்தால், அவரது இதயம் சீராகத் துடிக்கும். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு வேகவேகமாக இருந்தால் இதைச் சரி செய்யும். இந்த நிறச்சட்டை அணிந்தால், உடலில் இந்த ஒலி அலைகள் படுவதால், இதயம் சீராக இயங்கும். ஒவ்வோர் வண்ணத்திற்கும் ஒலி அதிர்வுகள் உள்ளன. இவை உடலில் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.

ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.

சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.

ஆரஞ்சு நிற உடைகள் நுரையீரல்களையும், மூச்சுக் குழாய்களையும் வலுப்படுத்தும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி, வயிறு முதலியன சீராகச் செயல்படவும், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவை அகலவும் எலும்புகள் பலமுடன் இருக்கவும் உதவும்.

பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும். பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும். அறிவுத் தெளிவு உண்டாகும்.

காய்ச்சலைக் குறைப்பதில் நீல நிற உடை வேகமாகச் செயல்படும். எரிச்சல், கோபம், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நிறம் உதவும். ஞாபக சக்தியை அதகரிக்கும். ஒற்றுமையை அதிகரிக்கும். மருந்தைப் போல மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் நலமும் தரும் நிறம் இது.

தசைவலி, காய்ச்சல் முதலியவை குறையவும், முதுகுத் தண்டும், வெள்ளை இரத்த அணுக்கள் செயல் துடிப்புடன் இயங்கவும் வயலட் (செந்நீலம்) நிற உடை உதவும். கடும் காய்ச்சல், முதுகு வலி முதலியவை குணமாக இந்த நிற உடை நல்லது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும், இதயம் சீராக இயங்கவும், சிறு நீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் விரைந்து குணமாகவும் கருஞ்சிவப்பு (Purple) நிற உடைகள் உதவும். தியானம் செய்பவர்கள் இந்த நிறத்தை மனதில் கற்பனை செய்து கொண்டால், வேறு எந்த ஒரு எண்ணமும் குறுக்கிடாது.

கோபத்தை மிகச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் உயராமல் இருக்கவும், அடரீனல் சுரப்பி, சிறு நீரகங்கள், உயிரணுக்களின் உற்பத்தி முதலியவை சிறப்பாக இயங்கவும் இளஞ்சிவப்பு நிறத்தைச் சேர்ந்த உடைகள் நல்லது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை பிறக்கும் வரை, மற்ற சிகிச்சை முறைகளுடன் மேற்கண்ட இளஞ்சிவப்பு ரோஸ் நிற உடைகள் சீருடைபோல் தினமும் அணிய நல்ல பலனைத் தரும்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive