நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
நமது வயது, தோற்றம் முதலியவற்றிற்கு ஏற்ப உடை அணிகிறோம். சிலர் ராசி, எண் கணிதம், முதலியவற்றிற்கு ஏற்ப உடையணிகிறார்கள்.
ஆனால், புதிதாக எழுந்துள்ள ஒரு வாதமே நோய்களுக்கு ஏற்ப உடையணிந்தால், ஆரோக்கியம் நீடிக்கும் என்பதுதான். நோய்கள் குணமாகும். பிரச்னைகள் தீர்ந்து எழுச்சி பெற்று உழைத்து வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதனால்தான் வண்ண சிகிச்சை முறையும், கிரிஸ்டல் சிகிச்சை முறையும் பலரது நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன.
நவரத்தினக் கற்கள் உள்ள மோதிரங்கள் அணிவது, இந்த நிறங்கள் உடலில் செல்ல எளிதாக இருக்கிறது என்பதால்தான்.
இதேபோல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, டர்க்யூஸ் (Turcuoise) நீலம், கருநீலம், வைலட் (செந்நீலம்), பர்ப்பிள் (கருஞ்சிவப்பு), ஸ்கார்லெட் (இளஞ்சிவப்பு) இந்த நிறங்களில் உங்களுக்குரிய நிறத்தில் உடைகளைத் தேர்வு செய்து அணியலாம்.
வயலட் நிறம் உள்ள அறையில் ஒருவர் இருந்தால், அவரது இதயம் சீராகத் துடிக்கும். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு வேகவேகமாக இருந்தால் இதைச் சரி செய்யும். இந்த நிறச்சட்டை அணிந்தால், உடலில் இந்த ஒலி அலைகள் படுவதால், இதயம் சீராக இயங்கும். ஒவ்வோர் வண்ணத்திற்கும் ஒலி அதிர்வுகள் உள்ளன. இவை உடலில் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.
ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.
ஆரஞ்சு நிற உடைகள் நுரையீரல்களையும், மூச்சுக் குழாய்களையும் வலுப்படுத்தும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி, வயிறு முதலியன சீராகச் செயல்படவும், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவை அகலவும் எலும்புகள் பலமுடன் இருக்கவும் உதவும்.
பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும். பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும். அறிவுத் தெளிவு உண்டாகும்.
காய்ச்சலைக் குறைப்பதில் நீல நிற உடை வேகமாகச் செயல்படும். எரிச்சல், கோபம், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நிறம் உதவும். ஞாபக சக்தியை அதகரிக்கும். ஒற்றுமையை அதிகரிக்கும். மருந்தைப் போல மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் நலமும் தரும் நிறம் இது.
தசைவலி, காய்ச்சல் முதலியவை குறையவும், முதுகுத் தண்டும், வெள்ளை இரத்த அணுக்கள் செயல் துடிப்புடன் இயங்கவும் வயலட் (செந்நீலம்) நிற உடை உதவும். கடும் காய்ச்சல், முதுகு வலி முதலியவை குணமாக இந்த நிற உடை நல்லது.
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும், இதயம் சீராக இயங்கவும், சிறு நீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் விரைந்து குணமாகவும் கருஞ்சிவப்பு (Purple) நிற உடைகள் உதவும். தியானம் செய்பவர்கள் இந்த நிறத்தை மனதில் கற்பனை செய்து கொண்டால், வேறு எந்த ஒரு எண்ணமும் குறுக்கிடாது.
கோபத்தை மிகச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் உயராமல் இருக்கவும், அடரீனல் சுரப்பி, சிறு நீரகங்கள், உயிரணுக்களின் உற்பத்தி முதலியவை சிறப்பாக இயங்கவும் இளஞ்சிவப்பு நிறத்தைச் சேர்ந்த உடைகள் நல்லது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை பிறக்கும் வரை, மற்ற சிகிச்சை முறைகளுடன் மேற்கண்ட இளஞ்சிவப்பு ரோஸ் நிற உடைகள் சீருடைபோல் தினமும் அணிய நல்ல பலனைத் தரும்.
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment