விஜயகாந்திற்குச் சொந்தமான மதுராந்தக நிலத்தைப் பொறுத்த வரை, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருத முடியவில்லை.
விஜயகாந்த், ஹேமலதாவிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் அரசுக்குச் சொந்தமானது என்பது ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது.
நில ஆக்கிரமிப்பைத் தெளிவுபடுத்தி, அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வேண்டுகோள் செவி சாய்க்கபடவில்லை என்பது அடுத்தகட்ட ஏமாற்றமிகு செய்தி.
மாறாக அப்படி ஏதும் தவறு நிகழவில்லை என்கிற பதிலும் விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான தகவலாக இருந்திருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்கியிருக்க வேண்டும்.
இது சாத்தியமாகாமல் போனதால் பொக்லைன்களும், கடப்பாரைகளும் கேப்டன் நிலத்திற்குள் நுழைய ஏதுவாகிவிட்டது.
மின்வேலி அமைப்பது என்பது காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதிக்குப் பொருந்தலாம். ஆனால் மதுராந்தகம் பகுதிக்கு இது அவசியமற்றது. அதிலும் ஒரு கட்டாந்தரைபோல் காட்சியளிக்கும் வெட்டவெளிக்கு நிச்சயம் தேவையில்லை. இந்த மின்வேலியில் பட்டு ஆடு மாடுகள் இறந்துவிட்டன என்கிற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை ஆபத்தில்லாத 110 வோல்ட் மின்சாரமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் பண்ணைக்குள் நுழைய முயன்றபோது பண்ணை மேலாளர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வாயிலைத் திறக்க மறுத்திருக்கிறார். அரசு உத்தரவுக்கு விஜயகாந்த் நிர்வாகம் கட்டுப்படாதது ஏன் என்பது கேள்வி.
நினைத்ததை முடிப்போம் என்று உள்ளே நுழைந்த அரசு அதிகாரிகள் எல்லைகளை அளந்து புதிய எல்லைகளை வரையறுத்தார்கள்.
முள்ளி ஓடைப் புறம்போக்கில் விஜயகாந்த் கட்டியிருந்த பல இலட்சம் மதிப்புள்ள பாலம் இடிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களின் புகழை, இத்தகைய செயல்பாடுகள் நிச்சயம் குறைக்கும்.
‘அரசு இடத்தை ஆக்கிரமிக்கிறவர் வேறு என்ன செய்யத் துணிய மாட்டார்’ என்கிற பேச்சிற்கும் இச்செயல் இடம் தந்துவிடும்.
ரஜினியின் திருவள்ளூர் இடம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது என்று புகார் எழுந்தது. ஆனால் இல்லை என்பது தெளிவுபட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால், ரஜினியின் புகழ் நிச்சயம் சரிந்திருக்கும். இவ்வளவு நியாயம் பேசுகிறவர் இப்படிச் செய்துவிட்டாரே என்கிற பேச்சிற்கு இடமாகியிருக்கும். ஆனால் எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது என்கிறார் அமைச்சர் சுரேஷ்ராஜன்.
உண்மையை நோக்கி நெருங்கி வரும் வேளையில் விஜயகாந்த் தவறு நடந்துவிட்டதை ஏற்று இது உள்நோக்கமுடையதல்ல என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருந்தால்,
அரசுத் தரப்பிற்குத் தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.
தராசு முள் வேறு பக்கம் திரும்பியிருக்கும்.
விஜயகாந்த் ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே இப்போதைக்குத் தோன்றுகிறது
கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவத
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment