தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவத

விஜயகாந்திற்குச் சொந்தமான மதுராந்தக நிலத்தைப் பொறுத்த வரை, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருத முடியவில்லை.

விஜயகாந்த், ஹேமலதாவிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் அரசுக்குச் சொந்தமானது என்பது ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது.

நில ஆக்கிரமிப்பைத் தெளிவுபடுத்தி, அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வேண்டுகோள் செவி சாய்க்கபடவில்லை என்பது அடுத்தகட்ட ஏமாற்றமிகு செய்தி.

மாறாக அப்படி ஏதும் தவறு நிகழவில்லை என்கிற பதிலும் விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான தகவலாக இருந்திருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்கியிருக்க வேண்டும்.

இது சாத்தியமாகாமல் போனதால் பொக்லைன்களும், கடப்பாரைகளும் கேப்டன் நிலத்திற்குள் நுழைய ஏதுவாகிவிட்டது.

மின்வேலி அமைப்பது என்பது காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதிக்குப் பொருந்தலாம். ஆனால் மதுராந்தகம் பகுதிக்கு இது அவசியமற்றது. அதிலும் ஒரு கட்டாந்தரைபோல் காட்சியளிக்கும் வெட்டவெளிக்கு நிச்சயம் தேவையில்லை. இந்த மின்வேலியில் பட்டு ஆடு மாடுகள் இறந்துவிட்டன என்கிற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை ஆபத்தில்லாத 110 வோல்ட் மின்சாரமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் பண்ணைக்குள் நுழைய முயன்றபோது பண்ணை மேலாளர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வாயிலைத் திறக்க மறுத்திருக்கிறார். அரசு உத்தரவுக்கு விஜயகாந்த் நிர்வாகம் கட்டுப்படாதது ஏன் என்பது கேள்வி.

நினைத்ததை முடிப்போம் என்று உள்ளே நுழைந்த அரசு அதிகாரிகள் எல்லைகளை அளந்து புதிய எல்லைகளை வரையறுத்தார்கள்.

முள்ளி ஓடைப் புறம்போக்கில் விஜயகாந்த் கட்டியிருந்த பல இலட்சம் மதிப்புள்ள பாலம் இடிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களின் புகழை, இத்தகைய செயல்பாடுகள் நிச்சயம் குறைக்கும்.

‘அரசு இடத்தை ஆக்கிரமிக்கிறவர் வேறு என்ன செய்யத் துணிய மாட்டார்’ என்கிற பேச்சிற்கும் இச்செயல் இடம் தந்துவிடும்.

ரஜினியின் திருவள்ளூர் இடம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது என்று புகார் எழுந்தது. ஆனால் இல்லை என்பது தெளிவுபட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால், ரஜினியின் புகழ் நிச்சயம் சரிந்திருக்கும். இவ்வளவு நியாயம் பேசுகிறவர் இப்படிச் செய்துவிட்டாரே என்கிற பேச்சிற்கு இடமாகியிருக்கும். ஆனால் எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது என்கிறார் அமைச்சர் சுரேஷ்ராஜன்.

உண்மையை நோக்கி நெருங்கி வரும் வேளையில் விஜயகாந்த் தவறு நடந்துவிட்டதை ஏற்று இது உள்நோக்கமுடையதல்ல என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருந்தால்,

அரசுத் தரப்பிற்குத் தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

தராசு முள் வேறு பக்கம் திரும்பியிருக்கும்.

விஜயகாந்த் ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே இப்போதைக்குத் தோன்றுகிறது

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive