நமக்காகப் பிறர் செலவு செய்தால் நமக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ‘ஆஹா எவ்வளவு நல்ல மனசு!’ என்று பாராட்டத் தோன்றுகிறது.
ஆனால், செலவழித்தவருக்கோ ‘இவ்வளவு செலவழித்தோமே, நானும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்ல மனம் இல்லையே என்று வருத்தமடைகிறது.
செலவு செய்பவருக்கு அதில் மகிழ்ச்சிதானா என்று நாம் உறுதிப்படுத்திக் கொண்டால்தான் நம் மகிழ்ச்சியில் முழுமையோ பொருளோ இருக்க முடியும்.
நமக்கு அதைப் பகிர்ந்து கொள்ள மனம் இல்லையாதலால், நாம் அதுபற்றிக் கேட்டால் அவர் ரொம்ப வருத்தப்படுவார். அப்செட் ஆகிவிடுவார் என்று நமக்குச் சாதகமாகக் கற்பனை செய்து கொண்டு விடுகிறோம்.
கேட்டால் தவறாகிவிடும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு வார்த்தை நாம் கேட்கும் விதமாகக் கேட்க வேண்டும்.
”உங்களுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேனோ என்று குற்ற உணர்வு இருக்கிறது. நீங்க தவறா எடுத்துகலைன்னா” என்று மெல்ல ஆரம்பித்து அவர்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிக் கொணர வேண்டும்.
”உங்க சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாதுன்னு நீங்க செலவழிக்கிறபோது நானும் சும்மா இருந்துட்டேன். எனக்கு இந்த மாதிரியான சந்தோஷத்தை, வாயப்பைக் கொடுங்க” என்றும் அசத்தலாம். இதற்கு அவரால் சரிவரப் பதில் பேச முடியாது.
மாறாக, நாம் செலவழிப்போம்; அவராகக் கேட்கட்டும், பிறகு அவரிடம் வாங்கிக் கொள்வோம் என்று பெருந்தன்மையாக முன்வந்து செலவழித்தவரை நம் சுயநலத்திற்காகத் தண்டிப்பது சற்றும் நியாயமல்ல!
ஒரு வேளை எப்படி நீங்க அப்படிச் சொல்லப் போச்சு? என்று பொய்க் கோபம் காட்டினாலும், பின்னால் வேறிடமாவது சொல்வார். ”தர்றேன்னு மனப்பூர்வமாகச் சொன்னார். நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று.
நல்லுறவு தொடர இதுவே வழி!
சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment