தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

உடன்பயிலும், நண்பர்களை உடன்பிறந்தவர்களுக்கும் மேலாக நேசிப்பதுதான் உலகம் எங்கும் வழக்கமாக இருக்கிறது.

ஆனால், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், சகமாணவர்களை, மரக்கட்டைகளால் அடித்துத் துவைத்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டபோது மனம் பதைக்காதவர்கள் குறைவு.

அதுவும், இந்தக் காட்சிகளை வடஇந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காட்டியபோது தமிழகத்தின் மானமே காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது.

காவல்துறை இந்த விஷயத்தில் கையாலாகாத துறையாகச் செயல்பட்டதைப் பற்றிய விவகாரத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிற கோணமே வேறு.

மீண்டும் ‘சட்டக் கல்லூரி திறக்கப்படும்போது பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ”என்ன மச்சி! எப்படி இருக்கே?” என்று பேசிக் கொள்கிற அளவுக்கு நேசம் காட்டாவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாக வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதில்தான் என் அக்கறை நீள்கிறது.

ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னமும் கூட இவர்களது கைத்தொலைபேசி வழியே மிரட்டலான குறுஞ்செய்திகள் வருகின்றன என்பதுதான் சற்றுக் கலக்கம் தரும் செய்தியாக இருக்கிறது. அடித்தவர்கள்மீது நடவடிக்கை; அடித்தவர்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை என்பவையெல்லாம் சட்டச் சம்பிரதாயங்கள்.

ஆனால், இனிச் சட்டக் கல்லூரி வளாகத்தில் நல்லுணர்வும், புரிந்துணர்வும், இனிய சூழலும் ஏற்படுத்த சட்டக் கல்லூரி நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட அமைப்புகளும், சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், அரசும் கூட்டாக இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.

நல்லவேளையாக, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக மாணவச் சமுதாயத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலை இக்கணம் வரை மேற்கொள்ளவில்லை.

ஒரு வேளை இது நீறுபூத்த நெருப்பாக நடக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காவல்துறைக்கு இருக்கிறது.

சட்டக் கல்லூரி திறக்கப்படும் முன் இரு சமூகத்தவரிடையே சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் வீரியத்தையும் ஆழத்தையும் உணராமல் சட்டக் கல்லூரி நடந்துகொண்டால் இதன் தொடர்விளைவுகள் பிற தமிழகக் கல்லூரிகளிலும், ஏன் கல்லூரிக்கு வெளியேயும்கூட நிகழந்துவிடலாம்.

இத்தகைய கலவர வெடிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இன்று தமிழகத்திற்கு இல்லை.

தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் மெத்தனம் காட்டுவது கூடாது!

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive