பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தான் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விஷயத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து, தன்னைத் திருத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு இது ஒரு வாய்ப்பு’ என்று அமெரிக்க வெளி உறவு அமைச்சர் கண்டலீசா ரைஸ் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை : ரைஸ் விருப்பம்
மும்பை தாக்குதல் குறித்து விசாரிக்க இந்தியா வந்துள்ள கண்டலீசாரைஸ், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இந்தியாவுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தான் வந்திருப்பதற்கு இந்திய அரசுடனும் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுடனும் பரஸ்பர உணர்வை பகிர்ந்து கொள்வதற்காகவே என அவர் தெரிவித்துள்ளார்.
அல்கைதா ஸ்டைலில் அட்டாக்! ரைஸ் தகவல்
மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில், அல்கைதா இயக்குத்துக்கு தொடர்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் ரைசிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ரைஸ் கூறியதாவது : அல்கைதாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று நான் திட்டவட்டமாக சொல்லவில்லை. ஆனால், அல்கைதா இயக்கத்தினர் நடத்தும் தாக்குதல் விதம் தான் மும்பையில் நடந்த தாக்குதலிலும் கையாளப்பட்டுள்ளது. அல்கைதா இயக்கம் மக்களை அச்சுறுத்துவதோடு அரசாங்கத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். மும்பை தாக்குதலும் இந்த வகையில் தான் அமைந்துள்ளது. இவ்வாறு ரைஸ் விளக்கமளித்துள்ளார்.
பிரணாப், அத்வானியை சந்திக்கிறார் ரைஸ்
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து, வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றம் எதிர் கட்சி தலைவர் அத்வானி ஆகியோரை ரைஸ் சந்திக்கவிருக்கிறார். அப்போது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தததற்கான ஆதாரம், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டதற்கான ஆதாரம் ரைசிடம் தெரிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வந்துள்ள ரைஸ் , மும்பை தாக்குதல் விஷயத்தில் இந்தியாவுக்கு எந்த அளவு உதவ முடியும் என்பதை ஆராய்ந்து உதவி செய்ய இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
‘ திருந்த ஒரு கடைசி வாய்ப்பு ’: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment