தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மத்திய அரசுக்கு நெருக்குதல் தவற தவறி விட்டார் கருணாநிதி - நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களைக் காக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தரத் தவறி விட்டார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி வந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டார் கருணாநிதி. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்தால்தான், மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவோம் என அவர் கூறியிருக்க வேண்டும். அதை செய்ய அவர் தவறி விட்டார்.

திமுகவின் ஆதரவு இல்லாமல், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்ற உண்மையை அறிந்தும், அப்படி ஒரு நெருக்குதலைத் தவறி விட்டார் கருணாநிதி.

சோமாலியாவில் இந்திய சரக்குக் கப்பல்கள் தாக்கப்படுவது குறித்துத்தான் மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து கண் மூடிக் கொள்கிறது.

நமது மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கையி்ல உள்ள தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாகவே விநியோகிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாக ரூ. 6 கோடி நிதியை வழங்கினார். மேலும், அந்த கழகம் மூலமாக 2 கப்பல்கள் நிறைய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள ஆயுதங்கள், அப்பாவித் தமிழர்களைத் தாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான நடவடிக்கை காரணமாக 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவானது, அந்த நாட்டு மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

ஆனால் அந்த உறுதியும், தைரியமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுத்தமாக இல்லை என்றார் நெடுமாறன்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive