தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மின் துறையின் முனைப்பின் அவசியம்!

தமிழக நலன்களை வேரோடு அசைத்துப் பார்க்கவல்ல கொடிய அரக்கனாம் மின்வெட்டைச் சீர் செய்ய முதல்வரும், மின்துறை அமைச்சரும் உயர் அதிகாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் வரவேற்கத்தக்கனவாகவும் ஆறுதல் அளிப்பனவாகவும் இருக்கின்றன.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட இருக்கும் மின் திட்டங்களுக்கு நன்கு ஊக்கமளிப்பது என்கிற தமிழக அரசின் முடிவு நெடுநாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முடிவு. Better late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

இல்லாமல் போனைதைவிடக் கால தாமதம் பரவாயில்லை என்கிற இந்தக் கருத்தின் அடிப்படையில் மின்துறையின் பார்வை இப்போதாவது கடைக்கண் திறந்திருக்கிறது.

ஜுரோஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் தமிழகத்தின் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுக்க நிறையத் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க இறங்கியது.

நம் அரசுகளின் சிவப்பு நாடா முறைகளால் இம்முயற்சிகள் முடங்கிப் போயின.

இப்போது தனியார் வடகொரிய நிறுவனம் ஒன்று ஓர் அணுமின் நிலையத்தை உருவாக்க முன்வந்திருக்கிறது. உலக அளவில் ஏற்கெனவே 12 அணுமின் நிலையங்களை நிர்மாணித்த மிகுந்த முன்னனுபவம் கொண்ட நிறுவனம் இது.

தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழக அரசு ஒரு நற்செய்தியைத் தந்துள்ளது. நீங்கள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தைத் தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக விற்பனை செய்யலாம் என்பதே இந்த நற்செய்தி.

ஒரு யூனிட்டுக்கு அரசு கொடுக்கும் விலை வேறு, தனியார் நிறுவனங்கள் தர முன்வரும் விலை வேறு.

இந்த அணுகுமுறை பல தனியார் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் நிறுவனங்கள் இனி ஜெனரேட்டர்கள் வாங்க 25 சதவிகித மானியம் வழங்குவது என்பது அற்புதமான முடிவு.

ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நல்ல முயற்சி இது. ஆனால் டீசல் தட்டுப்பாடு நிலவுவதும், டீசலை வாகனத்தில் ஊற்றுவதைத் தவிர கைகளில் தனியே கேன்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பிடிவாதம் பிடிப்பதும் கவனிக்கப்படட வேண்டிய விஷயங்கள்.

மின் உற்பத்தியைப் பற்றிப் பல சிறுதொழில் அதிபர்கள் தெளிவான பார்வைகளோடும், ஏராளமான அரிய யோசனைகளோடும் காத்திருக்கிறார்கள். இவர்களைத் துறைச் செயலர்கள் அளவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது இன்றையச் சூழலில் அவசியம்.

இயற்கை பொய்க்கிறபோது செயற்கை தலைதூக்க வேண்டிய அவசியம் இருக்கிறது

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive