தமிழகத்தில் மின்பற்றாக்குறையைப் போக்குவதற்காக, 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு, நிரந்தரமாக மற்றும் நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில், 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய மின் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைந்து, 4 ஆயிரத்து 909 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திக்கான இரண்டு மின் திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இதில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மின்பற்றாக்குறையைப் போக்க 2 புதிய மின்திட்டங்கள்-
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment