அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 4- ந் தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும், ஜன நாயக கட்சி சார்பில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமாவும் போட்டி யிடுகிறார்கள்.
தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து இரு வரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
இந்த நிலையில் ஒபாமா மாவும், ஜான் மெக்கேனும் நேரடியாக ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினார்கள். 2- வது முறையாக டெக்னிசி மாகா ணத்தில் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதம் நடந்தது.
அப்போது ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரியாக புகார்களை அள்ளி வீசினார். இவரது புகார்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜான் மெக்கேன் திணறி னார். அமெரிக்க பொருளா தாரத்தை ஜார்ஜ் புஷ் சீரழித்து விட்டார். ஜார்ஜ்புஷ்சின் பொருளாதார கொள்கை கள் தோல்வி அடைந்து விட்டன என்றும் ஒபாமா ஆதாரத்துடன் விளக்கி னார். ஜார்ஜ்புஷ்சின் கொள்கை களை ஆதரிக்கும் ஜான் மெக் கேன் இதற்கு பதில் அளிக்க முடியவில்லை.
இந்த நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்க மக்கள் டெலிவிஷனில் பார்த் தனர்.
இந்த விவாதத்தை அடிப் படையாக வைத்து பொது மக்களிடம் ஒரு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் புத்தி சாலி, திறமையானவர். அவர்தான் அதிபராக வர தகுதி உள்ளவர் என்று பெரும் பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒபாமாவுக்கு 65 சதவிதத்தினரும், மெக் கேனுக்கு 28.4 சதவீதத் தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரி புகார்:
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008
Labels: உலக செய்திகள்

0 comments:
Post a Comment