இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச் சந்தை இன்று தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்து, 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் பத்து சதவீதம் குறைந்து, அதாவது, 1088 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியடைந்தது. பின்னர், பங்குச் சந்தை சரிவில் இருந்து மீண்டது. நிதி நிலைமையை சீராக்க, ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை 1.5 சதவீதமாக குறைத்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பங்குச் சந்தையின் சரிவால், தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 304 ரூபாய் அதிகரித்தது. இதனிடையே, நாட்டின் பணவீக்கம், கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில், இது 11.99 சதவீதமாக இருந்தது
பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment