இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையாக இருந்துவருவதாகவும், இதனால், அங்குள்ள மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாக பெரும் தியாகங்கள் செய்துவருவதாகவும், இந்த போராட்டத்திற்கு தமிழக மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவு மற்றும் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்து வருவது, துன்பப்பட்டு வரும் தமது மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளுக்கு விடுதலைப்புலிகள் நன்றி அறிவிப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment