இலங்கை தமிழர்கள் பிரச்னையில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அளித்து வரும் ராணுவ உதவியை தடுப்பதற்கு தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். வரும் 14 ஆம் தேதி, முதலமைச்சர் கருணாநிதி கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம், ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், எனவே, இதில் அ.தி.மு.க. பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ளாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ்பெற வேண்டும்-ஜெயலலிதா அறிவிப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment