இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து சில மூத்த இந்திய வீரர்களும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த செவ்வாய் கிழமை அன்று கங்குலி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரின் கேப்டன் அனில் கும்ளேவும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாண்டிங், கங்குலியின் அறிவிப்பு, இந்திய மூத்த வீரர்களில் மேலும் சிலரையும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும், இது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ள தேர்வுக்குழுவினரின் மோசமான செயல்பாடுகளே, தனது அறிவிப்புக்குக் காரணம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
கங்குலி ஓய்வு அறிவிப்பு : ரிக்கி பாண்டிங் கருத்து
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment