தமிழகத்தில் பருவமழை பெய்யாததும், காற்று இல்லாததுமே மின்வெட்டுக்கு காரணம் என்று தமிழக மின்வாரியக் கழகத் தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைவிட, தமிழகத்தில் குறைந்த அளவே மழை பெய்ததாகவும், அதனாலேயே, மின் உற்பத்தி குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை, அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தைவிட கூடுதல் நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்த அவர், மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று முதல், மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
பருவமழை பெய்யாததால், மின் உற்பத்தி பாதிப்பு-மச்சேந்திரநாதன் பேட்டி
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008

0 comments:
Post a Comment