தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத் தின் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்துவார் என்று மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டப் பேரவையில் 15-4-2007 அன்று அறிவித்திருந்தார். அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. சண்முகம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டது, அவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரணை செய்து 3 மாதங்களில் அரசுக்கு விசாரணை அறிக்கையை அளிப்பார் என 16-4-2008 அன்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதியரசர் பி. சண்முகம் 19-5-2008 அன்று இடைக்கால விசாரணை அறிக்கை ஒன்றினை அரசுக்கு அளித்தார். அதன் தொடர்ச் சியாக இன்று (ஜூலை 14) தமது விசாரணையின் முழு அறிக்கையினை முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் நீதி யரசர் பி. சண்முகம் வழங்கினார்.அவ்வமயம், உள்துறைச் செயலாளர் எஸ். மாலதி, (இ.ஆ.ப.) பொதுத்துறைச் செயலாளர் டி. ஜோதி ஜெகராஜன் (இ.ஆ.ப.) ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:
Post a Comment