தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வெ‌ள்‌ளி‌ ‌கிரக‌த்தை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்!

பல நேர‌ங்க‌ளி‌ல் அ‌திகாலை‌யி‌ல் ‌நிலவுட‌ன் ‌மிக‌ப் ‌பிரகாசமாக ஒ‌ளி ‌வீசு‌ம் ஒரு ந‌ட்ச‌த்‌திர‌த்தை‌க் கா‌ட்டி ந‌ம் ‌வீ‌ட்டு‌ப் பெ‌ரியவ‌ர்க‌ள், அது வ‌ெ‌ள்‌ளி எ‌ன்று சொ‌ல்‌லி‌யிரு‌‌ப்பதை கே‌ட்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள்.அ‌ந்த வெ‌ள்‌ளி‌க் ‌கிரக‌த்தை‌ப் ப‌ற்‌றியதுதா‌ன் இ‌ந்த க‌ட்டுரை. நமது பூமியின் இரு புற‌த்‌திலு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது செவ்வாய், வெள்ளி கிரகங்களாகு‌ம். இ‌தி‌ல் பூமிக்கு ‌மிக அருகில் அமைந்திருப்பது வெள்ளி ‌கிரக‌ம்தான். அன்பு மற்றும் அழகுக்கான ரோமானியக் கடவுளின் பெயரில் இக்கிரகத்துக்கு `வீனஸ்' என்று பெயரிடப்பட்டது. சூரியன், நிலா‌வி‌ற்கு‌ப் பிறகு வெள்ளி மிகவும் பிரகாசமான கோள் ஆகும். சூரிய உதயம் ம‌ற்று‌ம் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டு வேளைகளிலும் வெள்ளி‌க் ‌கிரக‌த்தை‌க் காண முடியு‌ம்.
WDவிண்ணியல் ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் வெள்ளியு‌ம் பூமியு‌ம் இரட்டைப் பிறவி என்று கருதினார்கள். ஏனெ‌னி‌ல் வெள்ளியின் குறுக்களவு ஏறக்குறைய பூமியை ஒத்திருக்கிறது. அதாவது இதன் குறுக்களவு, பூமியை விட 650 கிலோ மீட்டர்கள் தான் குறைவானது. பூமியுடன் ஒப்பிடுகையில் 81.5 சதவீதம் நிறை கொண்டது. ஆனால், இதை‌த் தவிர பூமிக்கும், வெள்ளிக்கும் வேறு எ‌ந்த ஒற்றுமையு‌ம் இல்லை. மனிதர்கள் வாழ தகுதியற்ற கிரகம் வெ‌ள்‌ளி.வெ‌ள்‌ளி ‌கிரக‌த்‌தி‌ன் புறவெளி மிகவும் வேறுபாடானது. இது 95 சதவீதம் கரியமில வாயுவால் சூழப்பட்டுள்ளது. அது தவிர, அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அதுவே வெள்ளியின் உட்பரப்பை‌க் காணத் தடையாக உள்ளது. இந்த மேகங்கள் சூரிய ஒளியின் 76 சதவீதத்தைப் பிரதிபலிப்பதால் வெள்ளி மிகவும் பிரகாசமான கிரகமாகத் தோன்றுகிறது.சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கிரகமாகும் இது. அதாவது புதன் கிரகத்தை விட இரு மடங்கு வெப்பமானது. இத்தனைக்கும் சூரியனிலிருந்து புதனைப் போல இருமடங்கு தொலைவில் வெள்ளி அமைந்துள்ளது.சூரியனின் வெப்பம், வெள்ளிக் கிரகத்துக்குள் கரியமில வாயுவால் தக்க வைக்கப்படுவதுதா‌ன் அ‌திக வெ‌ப்ப‌த்‌தி‌ற்கு‌க் காரண‌ம்.வெள்ளியில் சாதாரணமாக நிலவும் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையான 460 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் காரீயம் கூட உருகிவிடும். இக்கிரகத்தில் காண‌ப்படு‌ம் புறவெளி அழுத்தமும் மிக அதிகமானது. அதாவது கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீந்துவது போன்ற அழுத்தம் இங்கு ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் காணப்படு‌கிறது.‌‌பிரகாசமாகவு‌ம் அழகாகவு‌ம் இரு‌க்கு‌ம் வெ‌ள்‌ளி பா‌ர்‌த்து ர‌சி‌க்க‌த்தா‌‌ன் உக‌ந்தது. அ‌ங்கு செ‌ன்று ம‌னித‌ர்க‌ள் வா‌ழ்வதை‌ப் ப‌ற்‌றி ‌நினை‌த்து‌க் கூட பா‌ர்‌க்க இயலாது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive