ம.தி.மு.க.,வின் அதிருப்தி எம்.பி.,க்கள் இருவரும் கொறடா உத்தரவை மீறி, மத்திய அரசுக்கு ஆதரவாக பார்லிமென்டில் ஓட்டளித்தால் பதவி பறிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு, வரும் 22ம் தேதி பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்.பி.,க்களில், மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., - 16, காங்கிரஸ் - 10, பா.ம.க., - 6 ஆகிய 32 எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க உள்ளனர். ம.தி.மு.க., - 4, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் - 2 ஆகிய எட்டு எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளனர்.இதில், ம.தி.மு.க., சார்பில் அதிருப்தி எம்.பி.,க்களாக வலம் வரும் ராமச்சந்திரன்,
கணேசன் இருவரும் என்ன நிலையை மேற்கொள்வர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் இருவரும் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பர் எனக் கூறப்படுகிறது. "தி.மு.க., காட்டும் வழியில் செல்வோம்' என கணேசன் கூறியிருந்தார். இவர்கள், ஐ.மு., கூட்டணி அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தால், மத்திய அரசுக்கு தமிழகம் சார்பில் 34 ஓட்டுகள் கிடைக்கும். ஆனால், இவர்கள் இன்னும் ம.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர்களாகவே நீடிப்பதால், கட்சி கொறடாவின் உத்தரவை மீற முடியாது.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர், நாளை சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும் கட்சி கொறடா கிருஷ்ணன் மூலமாக நான்கு எம்.பி.,க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டளிக்கும்படி உத்தரவிட்டு, அதை மீறி செஞ்சி ராமச்சந்திரன், கணேசன் இருவரும் ஆதரவாக ஓட்டளித்தால், கட்சி நடவடிக்கையை சந்திக்க நேரிடும். ம.தி.மு.க., சார்பில் சபாநாயகரிடம் புகார் தெரிவித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி எம்.பி.,க்கள் இருவரின் பதவியையும் பறிக்கும் நிலை ஏற்படும்.
நன்றி தினமலர்
அதிருப்திஎம்.பி.,க்கள் பதவி பறிபோகும்அபாயம்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, July 15, 2008

0 comments:
Post a Comment