தமிழ்மொழியை அரச காரியாலயங்களில் உடனடியாக அமுல்படுத்தக்கோரி நுவரெலியா சகவாழ்வு மன்றத்தினர், நுவரெலியா மாவட்டத்திலுள்ள சுமார் 80 ஆயிரம் தமிழ், சிங்களம், முஸ்லிம்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும் என அரசகரும மொழிச் சட்டத்தின்படி அரசயாப்பின் கீழ் கட்டளையிடப்பட்டிருப்பினும், 2008 இல் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியில் தமிழிலும் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களத்திலும் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய இன்னமும் முடியாதுள்ளது.
மொழியானது எம் நாட்டைப் பிரித்துவிட்டது. மொழிப் பிரச்சினைகள் காரணமாக எம் நாட்டில் மனித உரிமை மீறல்கள் பெருகிவிட்டன. சட்டப்படி இருக்க வேண்டியிருப்பினும் தமிழ்மொழியில் பரிச்சயமில்லாத அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவத்திலும் இருப்பதன் காரணமாக தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
ஒரே ஒரு அரசகரும மொழியில் காணப்படும் அறிவித்தல் பலகைகள் அந்த மொழியை வாசிக்க முடியாத அனைவரையும் ஒதுக்கிவிடுகின்றன. இந்த நிலைமை நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் காணப்படுகின்றது.
சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்கள் அந்த மொழியை வாசிக்க முடியாத மக்களுக்கு அர்த்தமில்லாததாகின்றன. இந்த நாட்டின் பிரஜைகளுக்கு இந்த ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், தமது தாய்மொழியில் அரசுடன் தொடர்பாடல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
மாவட்டச் செயலகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளிலெல்லாம் இரு மொழி நிர்வாகம் அமுலாக்கம் செய்யப்பட வேண்டும். சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அறிவித்தல் பலகைகளும் ஆவணங்களும் இரு அரச கரும மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இரு அரச கரும மொழிகளிலும் பரிச்சயம் பெற்ற போதுமான ஆளணியினர் உடனடியாக அரச நிறுவனங்களில் நியமிக்கப்படவேண்டும்.
மொழிப் பரிவர்த்தனை சேவையொன்று தாபிக்கப்படல் வேண்டும். இதன்மூலம் பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிலும் இரு அரச கரும மொழிகளிலும் சேவைகளை வழங்க முடியும். அரச நிறுவனங்களில் குறிப்பாக ஆஸ்பத்திரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இனவாரியான சமத்துவம் பேணப்படல் வேண்டும். பாடசாலை வயதையடைந்த அனைத்து பிரஜைகளுக்கும் இலவச மொழிப் பயிற்சிக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதுடன், பாடசாலைகளில் இரு அரசகரும மொழிகளிலும் கற்றல் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத
இன்று சர்வதேச மட்டத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியிலும் பார்க்க ஒரு புதுமையான மௌன சுனாமியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 14, 2008
Labels: செய்திகள்

0 comments:
Post a Comment