தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பாரபட்சமாக நடத்தும் திருச்சி அண்ணா பல்கலை: மாணவர்கள் குற்றச்சாட்டால் பரபரப்ப

திருச்சி: "பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) சேர்ந்த எங்களை திருச்சி அண்ணா பல்கலை நிர்வாகம் பாகுபாட்டுடன் நடத்துகிறது' என்று திருச்சி அண்ணா பல்கலை மாணவர்கள் புகார் கூறி வகுப்பு புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. திருச்சியில் அண்ணா பல்கலை கடந்த கல்வியாண்டு துவக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலையால் நடத்தப்பட்டு வந்த பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் வளாகம் முழுவதும் திருச்சி அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. பல்கலை துவக்கப்பட்ட போது பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த மாணவர்கள் தற்போது அண்ணா பல்கலையில் மூன்று, நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலை வளாகத்தில் நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) தான் நாங்கள் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தோம். அதுவே கடந்த ஆண்டு அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. தற்போது மூன்று, நான்காம் ஆண்டு படிக்கும் எங்களை அண்ணா பல்கலை நிர்வாகம் பி.ஐ.டி., மாணவர்கள் தானே என்ற பாகுபாட்டுடன் நடத்துகிறது. அண்ணா பல்கலையின் நிர்வாகத்தின் கீழ் வந்த எங்களுக்கு போதுமான வகுப்பறை, லேப் வசதி இல்லை. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. அறையில் மாணவர்கள் கூட்டமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவர்களுக்கு கட்டில் கூட இல்லாமல் தரையில் படுத்து தூங்குகின்றனர். பல்கலை நூலகத்தில் தேவையான புத்தகங்கள் இல்லை. தகுதியான ஆசிரியர்களும் இல்லை. இதையெல்லாம் கடந்த ஓராண்டாக பொறுத்துக் கொண்டு வந்தோம். தற்போது இன்டர்னல் மதிப்பெண் வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சியுடன் அதிகமான மாணவர்களுக்கு குறைத்து போட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டால் அவர் கண்டபடி பேசுவதால் மாணவர்கள் மனதை பாதித்துள்ளது. இதையடுத்தே நாங்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினோம். மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பதிவாளர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, "குறைகள் களைய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திருச்சி அண்ணா பல்கலை பதிவாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""மாணவர்கள் பாகுபாடாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. அனைத்து மாணவர்களும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive